ஊசித் தட்டான்களும் ஆறாவது விரலும் – வண்ணதாசன்.

பிரேமா அந்த ஊசித் தட்டானைப் பார்த்ததும் அப்படியே நின்றாள். அவ்வளவு நேரம் வாசல் பக்கம் ஸ்டூலில் உட்கார்ந்திருந்தாள். காற்றே  இல்லை. ஒரே வெக்கை. மாதம் ஆக ஆகத் திட்டுமுட்டு அடித்துக்கொண்டு வருகிறது, யாராவது குளிர்ந்தாற்...

புற்று-பாவண்ணன்

”எல்லாமே உயிருள்ள மீனுங்க பார்வதி. பானையில தண்ணிக்குள்ள சலக்குபுலக்குனு வட்டமடிக்குதுங்க. எங்க தாத்தா ஏரிக்குள்ள தூண்டில் போட்டு புடிச்சி குடுத்தாரு. இது போதும் ஒன் தொட்டிக்கு. ஊட்டுக்கு எடுத்தும்போன்னு சொல்லி அனுப்பிட்டாரு. நானும்...

கொம்பற்றவன்-வி அமலன் ஸ்டேன்லி

'சவுரி மறுபடியும் காணாம போயிட்டான்' என்பதுதான் உறவு வட்டத்தில் பேச்சாக இருந்தது. ஆனால் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படித் தீவிரமாகத் தேடி அலைந்ததெல்லாம் அவன் வாலிபனாக இருந்தது வரைதான். இப்போது அவன் ஐம்பதைத்...

சமிதை-செந்தில் ஜெகன்நாதன்

சென்னையிலிருந்து ஊருக்குச் சென்றிருந்தேன். மாநகரத்து பிரம்மச்சாரி  வாழ்க்கையில் கடை உணவுகளால் செத்துப் போயிருந்த நாக்குக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் தன் சமையல் மூலம் உயிரளிப்பாள் அம்மா. அன்றைக்கு நண்பகலில் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டுக் கண்ணயர்ந்திருந்தேன்....

ஊறா வறுமுலை

குதிரை கனைக்கும் அரவம் மிக அருகில் கேட்டது. பேச்சி உள்ளுக்குள் பதறி எழுந்தாள். எதிரில் எண்ணெய்யில் மினுங்கிய குதிரை நின்று கொண்டிருந்தது. ஆராட்டப்பட்ட மஞ்சள் நீர்த்துளிகள் இன்னும் அதன் மீது உலர்ந்திருக்கவில்லை. சந்தனமும்,...

அவரவர் நியாயம்

வெளியே காவல் நிலையத்தின் வாசலில் மூன்று சிறு குழுக்கள் நின்றிருந்தன. இப்படி யாராவது காவல் நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்தால், உள்ளே ஏதோ ஒரு பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம். மூன்று குழுக்களில் இரண்டு குழுக்கள்...

சூரம்பாடு

சூரம்பாடு நடக்கும் போதுதான் அவனது இறுதி மூச்சு என்று நாங்கள் நால்வரும் முடிவு செய்தோம். அது அப்படித்தான் முடியுமென்பது எனக்குத் தெரிந்த விசயம் தான். என் பேச்சை மீறி மற்றவர்கள் ஏதும் சொல்லிவிட...

அந்திமந்தாரை

‘பிரியமுள்ள அக்காவிற்கு, ஆண்டவரின் மேலுள்ள விசுவாசம் என்னை வழிநடத்துகிறது. உங்களுக்கு நெடுநாளாகக் கடிதம் எழுதவேண்டும் என்று தோன்றியது. ஆனால் எல்லாமுமே அதற்குரிய நேரத்தில் தான் நடக்கவேண்டும் என இருக்கிறது போல. ஒரு அசந்தர்ப்பத்தில் நாம் இருவரும்...

ஓணி

1 சாலையெங்கும் படர்ந்திருந்த கொன்றை மலர்களை முடிந்தவரை கூட்டியாகிவிட்டது. அந்த நெடுஞ்சாலையின் வலது முடுக்கின் விளிம்பில் சேர்த்துக் குவிக்கப்பட்ட கொன்றைக் குவியலை இரு கைகளாலும் அள்ளியெடுத்து தடுப்போரம் அலர்ந்துநின்ற கொன்றை மரங்களுக்கடியில் விசிறிக் கொண்டிருந்தாள்...

காவு

கமலாவால் தூங்கவே முடியவில்லை. இரவெல்லாம், எதிர்காலமே இருண்டுபோன எண்ணங்களில் நித்திரை தொலைந்து போனது. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பிள்ளைகளை அணைத்தபடி அறையின் இருட்டையே பார்த்துக் கிடந்தாள்.  சூரியன் உதிக்காமலேயே பொழுது மெல்ல விடிந்தபோது, மழை...