வாழ்வின் பெருமகிழ்வு

௧ ‘ஃபிரான்சின்’ தென்கிழக்குப் பகுதியின் ஓரம், ‘காட் த’அஸுர்’ எனப்படும் ‘ஃப்ரெஞ்சு ரிவியராவில்’, ‘நீஸ்’ நகரின் பகுதிகளான ‘வில்லினவ்’ மற்றும் ‘லூபே’ என்ற இரண்டு கிராமங்கள் ஒருங்கிணைந்து அமைந்த ‘வில்லினவ் லூபே’ பகுதியில், ஒரு...

நைனாரியும் பதின் கரைகளும்.

அப்பொழுதெல்லாம் நைனாரி குளக்கரை புளியமரங்களில் ஏதேனுமொன்றுதான் எங்கள் பகல் நேர வாழ்விடம். இன்று சிதைந்த படித்துறைகளும் சீமைக் கருவேலம் புதர்களுமாய் காட்சியளிக்கும் நைனாரி உயிர்ப்போடிருந்த காலகட்டமது. நானும் ஜான்போஸ்கோவும் புளியம்பிஞ்சுகளின் சுவையில் மயங்கிக்...

புகை

"உள்ள இழுல. புகைய வாயால உறிஞ்சு மெதுவா வெளிய விடு." "முன்னாடி ரெண்டு இழுப்புதான் கேப்ப. இப்போ தனியா சிகரெட் பிடிக்கயோ, தண்டவாளம் பக்கம் போறியா.தீப்பெட்டி இருக்கா" மணி அண்ணனோடு உரையாடல்கள் இப்படித்தான்...

நெலோகம்

அந்த வீட்டிலிருந்த உயிர்களைக் குளிர் நடுக்கிக் கொண்டிருந்தது. வீட்டுச் சுவரில் சூடு உண்டாக்கும் கருவி பொருத்தப்பட்டு இருந்தாலும், அவ்வப்போது சின்னச் சின்னதாய் விரிசல் உண்டாகி நேற்று ஒரு பிளவாக மாறி, கருவியின் மின்...

அந்நியன்

பசுபதி அரசுப்பள்ளியில் கிளர்க்காக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றிருந்தார். அந்தப் பள்ளியில் கணக்கு ஆசிரியராய் இருந்த மனோகரன் ஓய்வு பெறும்போது இளைஞனைப் போன்ற தோற்றம் மாறாதவராய் இருந்தார். அவர் ஓய்வு பெறும் வயதை...

வரலட்சுமி நோன்பு

ஒரு ஞாயிற்றுக் கிழமை. பூணூலை வலது பக்க காதில் மாட்டியபடி, வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டு, கழிவறை தரையில் சுவற்றின் ஓரமாக ஓடிக் கொண்டிருந்த இரண்டு கரப்பான் பூச்சிகளின் மேல் சீராக தண்ணீர் பீய்ச்சி...

மற்றொருவன்

"பையா...." ஹெட் எடிட்டர் நாணா சார் தான் உரக்க அழைத்தார். பையா என்று அழைக்கப்பட்டவன் அப்படி ஒன்றும் சின்னப்பையன் இல்லை. குறைந்தது நாற்பதுக்கும் குறையாத வயது முன் தலையில் விழ ஆரம்பித்து விட்ட வழுக்கை,...

ரொட்டியும் கல்லும்

அன்றைய தினம் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் நேசநாடுகளிடம் சரணடைந்த இரண்டாவது ஆண்டு நினைவுநாளுக்கு முந்தைய நாள். பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் முன்னாள் சட்ட ஆலோசனை மன்றத்தின் உயர்ந்த விதானம் கொண்ட அவ்வரங்கு விழாவுக்கான...

சம்ஸ்காரம்

வராகமங்கலம் என்ற ஊர் இன்று இல்லை. முண்டையான கூரையற்ற வீடுகளும், இடுப்பளவு வளர்ந்த நாணல் புதரும் மட்டுமே ஊர் என்ற ஒன்று அங்கே நின்றதற்கான சான்றாக இன்று எஞ்சியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க...

இறைச்சி

நான் “எறியுங்கள்” எனச் சொன்னபோது எனது உணவகத்தின் சமையல் தலைவன் “ஏன்?” எனத் தனது  வெள்ளைச் சிரிப்பால்  என்னைக் கேட்டான். “இறைச்சியினது மணம் என்னை வாந்தி எடுக்க வைக்கின்றது.” “இதனை எறிவதா? இந்த இறைச்சியின் விலை...