படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

சிசு விவசாயம்-காயத்ரி மஹதி

"மனிதன் மீதான நம்பிக்கையைக் கடவுள் கைவிடவில்லை என்பதற்கான ஆதாரம் தான் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பு" -மகாகவி தாகூர். அம்மாவைக் கொண்டாடும் சமூகமாக நாம் மாறுவதற்கு மிக முக்கியமான காரணமாகச் சொல்வதென்றால் இங்கு உள்ள...

கவிஞர் மாலதி மைத்ரியின் ‘பேய்மொழி’ கவிதைத் தொகுப்பினை முன் வைத்து,ஒரு உரையாடலும், சில நிகழ்வுகளும்……...

“நீங்கள் யாரென்று தெரியவில்லை எனக்கும் நான் யாரென்று தெரியவில்லை ஏன் வந்தீர்கள் ஏனிங்கு வந்தோம் ஆனால் இருக்கிறோம்”  -மாலதி மைத்ரி இவ்வரிகளிலிருந்து மாலதிமைத்ரியோடு உரையாடத் தொடங்கலாம் என நினைக்கின்றேன். அலை அலையாய்ப் பரவும் மனிதத்திரள்களின் முன்னே அர்த்தம் வாய்ந்த கேள்விகளைக் கேட்பது...

பார்த்திருத்தல்-வண்ணதாசன்

ஆப்பிள், ஆரஞ்சு கூட இல்லை. வெறும் நான்கு மொந்தான் பழங்கள் வாங்குவதற்கு யாராவது இப்படி பைக்கில் அலைவார்களா? அப்பாவுக்கு கோழிக்கூடு, பச்சை நாடான் பழம் எல்லாம் பிடிக்காது. மொந்தான் பழம்தான் வேண்டும். அதுவும்...

ஏது எதங்கு-பெருமாள்முருகன்

குழந்தை இன்னும் தூங்கிக்கொண்டிருந்த அதிகாலையில் எழுந்து வழக்கம் போல நாட்காட்டித் தாளைக் கிழித்தாள். எதேச்சையாகக் கண்ணில் பட்ட தேதியில் ஏதோ விசேசம் இருப்பது போலப் பட, நெற்றியைச் சுருக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தாள்.  குழந்தை...

பரிபூரணி- ஐ கிருத்திகா

மாலையிலிருந்து மழை பெய்துகொண்டிருந்தது. அடித்துக் கொட்டாத மென்மழை. சரக்கொன்றை மலர்கள் உதிர்வது போல உதிர்ந்து கொண்டிருந்த துளிகளின் மேல் பிரியம் கூடிப் போனது. தெருவிளக்கின் மஞ்சள் ஒளியில் நனைந்த துளிகள் மட்டும் கம்பி...

குறி-எம். எம். தீன்

நவீனாவின் சிறு கைப்பையில் இருந்த அலைபேசியின் அழைப்புஒலி சிணுங்கலாக அழைத்தது. அவள் கைப்பையைத் திறந்து அலைபேசியை எடுக்க மனமில்லாதவளாக இருந்தாள். மீண்டும் அழைப்பு வந்தது.யாரோடும் பேசும் மனோநிலை இல்லை. இப்போதெல்லாம் அடிக்கடி அப்படியொரு...

முகமூடி வீரர் மாயாவி தோன்றும் இன்ப வேட்கை- சித்ரன்

இந்தக் கதை சுப்பையாவைப் பற்றியது தான். ஆனால் சுப்பையாவின் கதையை மனோகரனிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். சச்சினின் ஆட்ட வசீகரத்தால் கிரிக்கெட் பேட்டோடு அலைந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாங்கள். மனோகரனோ ஒருமுறை கூட பேட்டைத்...

எப்பவும் போலத்தான்-காலத்துகள்

‘ஹலோ ஸார்’ ஸ்ரீனிவாசனை கவனிக்காதது போல் இருந்தாலும் கூப்பிடுகிறார். ‘ஹலோ ஸார்’ ‘ஆபீஸுக்கா’ திங்கட்கிழமை காலை எட்டரை மணிக்கு, ஓரளவுக்கு நேர்த்தியாக உடையணிந்து கொண்டு தன் இருசக்கர வாகனத்தை எதற்காக ஒருவர் இயக்கிக் கொண்டிருப்பான். ‘நீங்க மண்டே பத்து...

இந்த நகரத்தில் திருடர்கள் இல்லை -கேப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் தமிழில்: கா. சரவணன்

விடிந்தும் விடியாததுமாக டமாஸோ தனது அறைக்குத் திரும்பினான். ஆறு மாத கர்ப்பிணியான அவனுடைய மனைவி அனா நன்றாக உடையணிந்து, காலணிகளை மாட்டிக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்தபடி அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். அருகிலிருந்த எண்ணெய் விளக்கும்...

அரசுப் பள்ளி மாணவர்களின்  கதைகள்:

யானையும் வேட்டைக்காரனும் பா. கிஷோர் (எட்டாம் வகுப்பு) காட்டில் யானை ஒன்று வசித்து வந்தது. யானை  ஒரு குளத்தில் தினமும் நீர் அருந்த வரும். இதைப்பார்த்த வேட்டைக்காரன் அதை வேட்டையாடப் பார்த்தான்.  அதற்காக ஒரு பெரிய குழியைத்...