கு.அ.தமிழ்மொழி கவிதைகள்
1) மிதிபடும் காலம்
I.
என் அளவுக் காலணிகள் எளிதில் கிடைத்துவிடுவதில்லை என்றுதான் இவ்வளவு நாட்களாக நம்பியிருந்தேன்
நேற்று சுய்ப்ரேன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது
அதைத் தற்செயலாகப் பார்த்தேன்
அத்தனைப் பொருத்தமாக என் கால்களை அணைத்தது
ஓ! என் அன்புக் காலணியே! நீ...
நீயாகப்படரும் முற்றம்
விரவிக் கிடக்கும்
சடைத்த மர நிழல்கள்…
ரயில் தண்டவாளத்தை இரு கோடாக
முதுகில் கீறிய அணில் குஞ்சு,
என் சித்திரத்திலிருந்து தப்பித்த தும்பிகள்
படபடக்கும் வண்ணாத்திப்பூச்சி,பொன் வண்டு
வேலியோர தொட்டாச்சிணுங்கி.
குப்பை மேனிச் செடி இணுங்கும்
சாம்பல் பூனை…
இறைந்துகிடக்கும்
சருகு,
நான் கூட்டக் கூட்ட
இலைப்பச்சையாகி வளர்கிறது!
யாரோ
வெயிலைப் பிய்த்து
துண்டு...
கலீலியோவின் இரவு
சுல்தான் ஸைன் உல் அபீதின் அழிவை முன்னறிவித்த
நட்சத்திரம் தோன்றி மறைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன.
வெள்ளம் கோபுரங்களை மூழ்கடித்தது, கூறப்பட்டதைப் போலவே
இளநீர் கூடுகளுடன் மணிமகுடங்கள் மிதந்து செல்ல
ஒன்றடுத்தொன்றாய் பால்பற்களென வீழ்ந்தன பேரரசுகள்.
முன்னை கிழக்கில் இருந்து கிளம்பிய...
சந்திரா தங்கராஜ் கவிதைகள்
மலைக்குத் திரும்புதல்
வரையாடுகளும் முள்ளம்பன்றிகளும்
மலைமான்களும் கரடிகளும் தந்தம் பெருத்த யானைகளும்
குதித்தாடும் மந்திகளும் கன்னிமார்சாமியும்
செந்நிறஅந்தியும் பூக்கும் மலையில் பிறந்தேன்
சுனையின் குளிர்ந்தநீர் என்னை பருவமாக்கியது
இரண்டு குன்றுகளை ஈன்றெடுத்தேன்
என் பிள்ளைகள் ஆடுகளை வளர்த்தார்கள்
பாறைப் புடவுகளில் படுத்துறங்கிய ஆடுகள்
குளிர்...
சிவசங்கர். எஸ். ஜே. கவிதைகள்
1) நந்தினிக்குட்டி
நத்தாருக்கு இன்னும் ஒரு வாரம்
கேரல் குழுவின் வழக்கமான மார்கழி சங்கீர்த்தனங்கள்
ஒவ்வொரு நாளும் நத்தார் தாத்தா நடனமாடி
தாவிக்குதித்து வருகிறார் தெருவெங்கும்.
குழந்தைகளுக்கு மிட்டாயும் பலூனும் தருகிறார்
மாடியிலிருந்து எட்டிப்பார்க்கும் நந்தினிக்குட்டிக்கும்
மிட்டாய் கிடைக்கிறது.
அவளுக்கு சந்தோசமில்லை
தாத்தா நம்ம வீட்டுக்கு...
ச.துரை கவிதைகள்
ஏனெனில்
கைகள் தேயிலை தோட்டத்திற்கு
குத்தகைவிடப்பட்டதும்
சிலந்திகளோடு உறங்கி
எச்சில் கோப்பைகளை கழுவுவேன்
என்னிடம் அறுபது மணிநேரம்
இயங்ககூடிய போதை வஸ்து
இருந்தாக நம்பினார்கள்
தோட்டத்திலிருக்கு சூளைக்கு மாற்றப்பட்டதும் எனது கைகள்
வெட்டப்பட்டு வேறு கைகள் பொருத்தப்பட்டன
யார் இந்த அந்நியனென்று கேட்ககூடாது
என் உடையென்று கதறகூடாது
கொஞ்சமும் பொருத்தமற்ற
உணவுக்காக சட்டங்களில் மணல்களை
நிரப்பி...
ஜீவன் பென்னி கவிதைகள்.
கடைசிப் பெட்டியின் வாசலில் உலகைச் சாய்த்து வைத்திருப்பவன்.
ஒவ்வொரு இடப்பெயர்தலிலும் அதற்கு முன்பான வாழ்வை
அங்கேயே விட்டு விட்டு வருகின்றவன்,
எல்லோராலும் தான் நேசிக்கப்படுவதன் காரணங்களில்
சிறிய ஒன்றையே எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறான்.!
1.
ஒரு குற்றத்தின் முன்பாக வெகுநேரம் அமர்ந்திருப்பவன்
தன் கைகளின்...
நகுலன் கவிதைகள்
காத்த பானை
காத்த பானை கொதிக்காது
கரும்பு கசக்காது
வேம்பு இனிக்காது
என்றாலும் என்ன செய்தாலும்
என் மனமே
வந்தபின் போக முடியாது
போனபின் வர முடியாது
என்றாலும் என்ன செய்தாலும்
என்றென்றே சொல்லிச் சலிக்கும்
என் மனமே
ஊமையே உன்மத்த கூத்தனே
வாழ ஒரு வழி
சாக ஒரு மார்க்கம்
சொல்லவல்ல...
ஜீவன் பென்னி கவிதைகள்
பிரபஞ்சத்தின் கதைகளை சிறிய வெளிச்சத்தில் பின் தொடர்தல்
1.
ஞானம் தனது பகுப்பாய்வைத் தொடங்கும் போது
இப்பிரபஞ்சம் ஒரு சிறிய புள்ளியைப் போலிருக்கிறது.
முடிகின்ற போது
நாம் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல் மிகப்பெரியதாக
இருக்கிறது.
2.
இந்தச் சாலைகள் முடிவற்றவை
நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்காகவே
இப்பட்டாம்பூச்சிகள்...
அல்ஹமதுலில்லாஹ்
அல்ஹமதுலில்லாஹ்
என நீ உச்சரிக்கும்போதெல்லாம்
இருவாட்சியின் பெரும்பாத நிழல்
என் மேல் கவியும்
உன் நாக்கு
மேல் அண்ணத்தை தொட்டுத் திரும்பி
பற்களில் பட்டு
உதடுகளைக் குவிக்கும்போது
பனி பிளந்து இலை குளிர்ந்து
காற்று தணியும்
மழைப் பெய்து ஓய்ந்த கடலின்
நீலம் பாய்ந்த உன் முகத்தில்
அச்சொல் பூரணமடையும் போது
பிறை தோன்றும் பின் மறையும்
இடையில் விரியும் துண்டு வானம்
எனக்கும் உனக்கும் மட்டுமே.
————————————————
பூப்பனி பெய்யும் ஒரு...