கத்துங் குயிலோசை
அந்தக் குயிலின் குரல்வளையைத் தன் கைகளால் நெறிப்பதைப் போலத் தனக்கு வந்த அந்தக் கனவின் பயங்கரம் தாளாது அவன் விழித்துக் கொண்டபோது நள்ளிரவு மணி இரண்டு. அவன் வீட்டுப் பின்புறத் தோட்டத்திலிருந்த மாமரத்திலிருந்து...
பெருந்தேவி குறுங்கதைகள்
அழுமூஞ்சிகளின் ஊர்
அந்த ஊரில் எல்லாரும் அழுதுகொண்டே இருப்பார்கள். அதாவது இருபத்திநான்கு மணி நேரமும். நல்ல வெயிலடித்தால் “ஐயோ கொளுத்துகிறதே” என்று அழுவார்கள். மழை பெய்தால் “சனியன் பெய்து தொலைக்கிறதே” என்று அழுவார்கள். வெயிலடிக்காமல்...
கடல் மனிதன் -கை.அறிவழகன்
மழைக் காலத்தின் விடுமுறை நாட்களில் சிமெண்ட் பூசப்பட்ட சொரசொரப்பான அந்தக் கற்களில் கால்களை உரசியபடி தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் கால் நனையாமல் நடக்க முயற்சி செய்வது அலாதியானது, புனல் வடிவக் காகிதப் பொட்டலத்துக்குள்...
அந்தம்
பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு கோடியில்.
"என் கேள்விக்கு பதில் வேண்டும்" என ஒரு குரல் ஒலித்தது, பத்தாயிரம் தூண்கள் தாங்கி நிற்கும் மஹா மண்டபம் அதிர்ந்தது. நட்சத்திரங்கள் பிரதிபலிக்கும் ஒளிர்ந்த தரையில் உறுதியுடனும் கால்கள்...
மரணம்
அறையின் மூலையில் மரணம் தன் கால்களைப் பரப்பியபடி நின்று கொண்டிருந்தது. அதன் கைகள் அந்தரத்தில் நீள்வாக்கில் படர்ந்திருந்தன. அது நின்றிருந்த மூலை மற்ற இடங்களை விட இருண்டும் சில்லென்றும் இருந்தது. அவ்வறையின் நடுவேயிருந்த...
முதியவளின் நிர்வாணம்
வயது முதிர்ந்த பழுப்புநிறப் பறவையொன்று தன் நீண்ட சிறகைத் தரையில் தளர்த்தி ஓய்வெடுப்பதைப் போலச் சுருக்கம் நிறைந்த கைகளைத் தனது இருபக்கமும் இருத்தி அமர்ந்திருந்தாள் அவள். ஆடைகளற்றிருந்த அவளது உடலின் நிர்வாணத்தை, அவள்...
நுண்கதைகள்
மஞ்சள் ரோஜாவில் தூங்குவதற்காகவே வந்தேன்.
போட்கிளப் பகுதியின் மூன்றாவது சாலையிலிருந்த அழகிய மாளிகைக்கு உள்ளே இருந்து, சுவர் ஏறி குதித்து, வெளியில் வந்து, ஓரமாக நிறுத்தியிருந்த என் வண்டியை எடுக்கப்போனபோது, நள்ளிரவு ரோந்து பணியில்...
மஜ்னூன்
மஜ்னூன் இறந்து சொர்க்கத்தை வந்தடைந்தான். மேலோகத்திற்கு வந்தும் துயரிலேயே இருந்தான். கண்ணெதிரில் நின்று கொண்டிருந்த கடவுளைக் கூட அவன் சட்டை செய்யவில்லை. அவரும் எதோ குற்ற உணர்வில் அவன் முகத்தை பார்த்துப் பேசத்...
தடம்
விட்டுச்சென்ற வேதனை மட்டுமே அவள் மனதில் நிற்கிறது. கொட்டித்தந்த சந்தோஷம் விலகிப்போய்விட்டது. கண்ணைக் கூசிய வெளிச்சத்தில் வாழ்ந்துவிட்டு இப்போது பொட்டு வெளிச்சத்திற்கும் அவள் துழாவும்படியாகிவிட்டது.
‘ இதுதான் வாழ்க்கையா.....வெறுமையோடிய ஆளோடியில் ஒற்றை அணிலாய் வாழ பழகிக்கொள்ள ...
தவிப்பு
“உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும்.” என்றது, நான் எழுதி முடிக்காத குறுங்கதை. “சரி சொல்!”, என்றேன்.
"நீ என்னை எழுதத் தொடங்கி இரண்டு மாதங்களாகின்றன. இன்னும் முடிக்கவில்லை. எப்பொழுது முடிப்பதாக உத்தேசம்?" என்று கேட்டது.
“நானும்...