லூயிஸ் க்ளக் கவிதைகள்
1,ஏதுமின்மையின் தனிமை
இருள் நிறைந்திருக்கிறது
மழைக்கண்ணால் பார்க்கையில் மலை தெரியவில்லை
இங்கு ஒரே மழை சத்தம்
அதுதான் வாழ்வை இயக்கிக் கொண்டிருக்கிறது
மழையோடு குளிரும் சேர்ந்துவிட்டது
இவ்விரவில் நிலவுமில்லை விண்மீன்களுமில்லை
காற்று இரவில் உயிர்கொண்டிருக்கிறது
எல்லா காலையிலும் அது
கோதுமையைச் சாய்த்தபடி வீசிக்கொண்டிருந்தது
பிறகு நண்பகலில் நிறுத்திக்கொண்டது
ஆனால்...
கவிஞனின் எழுதுமேசை
அதுவொரு பழைய மர எழுதுமேசை, என்னுடைய பாட்டனாரிடமிருந்து முதுசமாகக் கிடைத்தது.
என்னுடைய பாட்டன் ஒரு ‘விஞ்ஞான’ மனிதர்.அவர் ஒரு போதும் தன்னுடைய மகனை ஒரு கவிஞனாகக் கற்பனை செய்திருக்க மாட்டார். பல வருடங்களூடு நடந்து...
ஜிபனானந்த தாஸ் கவிதைகள்
வங்காள மூலம் : ஜிபனானந்த தாஸ்
ஆங்கிலம் : சிதானந்த தாஸ் குப்தா
தமிழில் : கு.அ.தமிழ்மொழி
எனக்குப் பெயரிடுங்கள்
எனக்குப் பெயரிடுங்கள்
சிறந்த, எளிய, வான் போல் பரந்த சொல்லால்
எனக்குப் பெயரிடுங்கள்
அந்தச்சொல்
நான் என்றென்றும் நேசிக்கும் பெண்ணின்
நன்கறிந்த கைபோல...
சாகவா சிகா கவிதைகள்
மதியம்
மலர் இதழ்களைப் போன்று
மழை பொழிகிறது
அதீத எடையினால் தாக்கப்பட்ட
பூச்சிகள் மரத்தின் நிழலில் வீழ்கின்றன
பெரும் சுவரொன்றின் மீதான
மென் பூங்காற்றின் ஒலி
சூரியனால், அலைகளினால்
அமுக்கப்படுகின்றன
எனது எலும்புக்கூடு அவற்றின் மீது
வெள்ளைப் பூக்களை பரப்புகிறது
எண்ணங்கள் சிதறுபட, மீன்கள்
குன்றின் மீதேறுகின்றன
இருண்மை கானம்
புதிய தரைவிரிப்பின்...
அமீரி பராக்கா கவிதைகள்.
சம்பவம்
அவர் எங்கிருந்தோ திரும்பி வந்து சுட்டார். அவனைச் சுட்டுக் கொன்றார். அவர் திரும்பி வந்தபோது, சுட்டார், அவன் தடுமாறினான், விழுந்தான். இருள்காட்டைக் கடந்து, கீழே, சுடப்பட்டு, இறந்துகொண்டு, இறந்து, முற்றும் முழுமையான முடிவுக்குப்...
பார்பரா குரூக்கர் கவிதைகள்
1. இயல்பு வாழ்க்கை
அந்நாளில் எதுவுமே நடக்கவில்லை
பள்ளிக்குச் சென்ற பிள்ளைகளின்
புத்தகங்களும் கையுறைகளும்
நண்பகலுணவும் நினைவினில்.
காலையில் தரையின்
ஒளிக்கட்டங்களில்
அடுக்கும் விளையாட்டினை
ஆடினோம் குழந்தையும் நானும்.
குட்டித்தூக்கம் நண்பகலுணவோடு
ஒட்டிக்கொண்டு வந்தது.
சமையலறை நிலைப்பேழையைத்
தூய்மையாக்கினேன்.
ஒருபோதும் முடிக்கவே
முடியாத வேலை அது.
சூரியவொளியின் வட்டத்தில்
அமர்ந்து இஞ்சித்தேநீர்
குடித்தேன்.
சிதறிக்கிடந்த உணவுத்
துணுக்களுக்காக அங்கே
பறவைகள் முண்டியடித்துக்
கொண்டிருந்தன.
முள்ளம்பன்றியின்...
மூன்று ஜப்பானியக் கவிதைகள்
1.தடா சிமாகோ (1930- )
மேற்கத்திய கருத்துகளைப் படி தடா சிமாகோ மற்ற ஜப்பானிய கவிஞர்களை விட அதிகம் படித்தவராகவும், அதிக தத்துவஞானம் உடையவராகவும் கருதப்படுகிறார்.இத்துறையின் பேராசிரியர்களை தவிர ஜப்பானிய அறிவார்ந்தவர்கள், மேற்கத்திய நாடுகளில்,...
இஸ்மாயில் கவிதைகள்
கிணத்துக்குள் ஆமை
கிணத்துக்குள் ஆமை கிடக்கிறது என்று கேட்டு
குழந்தைகள் எல்லாம், குரங்குக் கூட்டத்தைப் போல் ஓடினோம்
கிணத்துக்குள் எட்டிப் பார்த்தபோது, எங்கள் தலைகள்தான் தெரிந்தன
பின்னால் வானமும், நீலத் தொடுவானும்
கற்களும் குச்சிகளும் எடுத்து கிணத்தைக் கலக்கினோம்
ஆமை மேலே...
ஹென்றி லாஸன் கவிதைகள்
எழுதப்படாத புத்தகங்கள்
எவ்வளவு உச்சம் தொட்டு வாழ்ந்தாலும்
முடிவிலென்னவோ அதே கதைதான்
நம்முடைய ஆகச்சிறந்த புத்தகத்தை
எழுதாமலேயே சாகப்போகிறோம்
நம் வாழ்வின் மிகச்சிறந்த செயலை
செய்துமுடிக்காமலேயே மடியப்போகிறோம்
எழுதப்படாத புத்தகங்கள்
வரையப்படாத ஓவியங்கள்
இந்த வானுக்குக் கீழே எத்தனை எத்தனை…
பதிப்பிக்கப்படாத
நம் ஆகச்சிறந்த சிந்தனைகளோடு
நாமும் ஒருநாள்
இவ்வுலகை விட்டு...
Oozing Blood of Lord Krishna’s Foot
Three footsteps
that measured the world
aren't solicited
Reaching hometown
within a footstep
is sufficient
The lengthy saree
that Draupathi was bestowed
isn't wanted
A spare cloth for
walking mothers
mom-to-be wives
swooning sisters
pubescent daughters
are enough
Coolness...