தேவதேவன் கவிதைகள்
பெருவெளியில்
தரையும் கூரையும்
நான்கு சுவர்களுமில்லாத
பெருவெளியில்
அழிந்துபோகக்கூடிய
தரையும் கூரையும் நான்கு சுவர்களுமாய் ஒரு வீடு
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஆங்கே தவழ்வதோ
அழியாப் பெருவெளியைத்
தாயகமாகக் கொண்டதாம்
அன்பு கருணை அறம் மெய்மை
என ஒளிரும் தேவதைகள்!
சின்னஞ் சிறிய மலர்
குத்தவைத்துக்
குனிந்து பார்க்கவைத்தது...
பீட்டில்ஸுடன்
வயது முதிர்வதில் எனக்கு விசித்திரமாகத் தெரிவது எனக்கு வயதாகிவிட்டது என்பதல்ல. கடந்த காலத்தில் இருந்த இளமையான எனக்கு, நான் உணராமலேயே வயது கூடிவிட்டது என்பதும் இல்லை. மாறாக, என்னை மிகுந்த ஆச்சரியத்துக்குள்ளாக்குவது எதுவென்றால்,...
குறுங்கதைகள் -லிடியா டேவிஸ்
அந்த நாயின் ரோமம்
அந்த நாய் இல்லை. நாங்கள் அதை நினைத்து ஏங்கினோம். வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கும் போது குரைக்கும் ஒலியில்லை. நாங்கள் தாமதமாக வீட்டுக்கு வரும்போது எங்களுக்காக யாரும் காத்திருக்கவில்லை. அவனுடைய...
உமா மகேஸ்வரி கவிதைகள்
சூரியன் ஒளிரும் திரைகள்
வாகன கீதம்
நொறுங்கிய வளர் பிறை
பத்திரமாயிருக்கிறது
மல்லிகைச் சரத்தருகே
இருள் தித்திக்கும் மரங்கள்
சோம்பல் முறிக்கும் காலை
அங்கே ஏனோ பூக்காத
மஞ்சள் மலர்கள் இங்கே
எங்கெங்கும் பூத்துக் கிடக்கின்றன...உடைந்த ஒரு மனதில்
சிராய்தததோ
ஒரு சொல் சிலாம்பு
துடைத்தும் போகாதது.
இம் முறை ஒரே...
யோகம்
வெகுநாட்களுக்குப் பிறகு நாம்பள்ளி ரயில் நிலையத்தில் அனந்தன் சாமியைப் பார்த்தேன். சாமிதானா? சற்றே தயக்கத்துடன் அருகில் சென்றேன். அடுத்திருந்த இருக்கையில் அமர்ந்து உற்றுப் பார்த்தேன். மழிக்கப்பட்ட தலையில் முட்களைப்போல் நரைமுடி. அடர்த்தியான தாடி....
ஒற்றைப் பயணி வரும் ரயில் நிலையம்
பிற்பகலில் பனி விழத் தொடங்கியது. இலை உதிர்த்து குச்சிக் கிளை நீட்டிய சிறு செடிகளும், அடர்ந்து வளர்ந்து வெட்டப் படாமல் தலை சாய்த்திருந்த பசும் புல்வெளிகளும் வெண்மை அணிந்தபோது ரயில் வந்தது. சாம்பல்...
ஸ்ரீநேசன் கவிதைகள்
சூரியனுடன் வருவேன்
நான் இங்கிருப்பேன்
இதே நேரம் ஏதோ மலையேறிப் பாதி வழியில் ஒரு பாறைமேல் தங்கியிருப்பேன்
மன்னியுங்கள் உங்களை இளங்கதிரில் வரச் சொல்லி
இப்படி எங்கென்றே தெரியாமல் எங்கேயோ போய்க் கொண்டிருப்பதற்கு
நீங்கள் பழியுரைக்கவோ நான் பொறுப்பேற்கவோ...