3 POSTS
கார்த்திகா முகுந்த் (1982):
பிறந்த ஊர் திருநெல்வேலி. கணவர் முகுந்த் நாகராஜன் மற்றும் மகளுடன் பெங்களூரில் வசிக்கிறார்.
தமிழில் இளமுனைவர் பட்டம். கல்கி வார இதழின் ஆசிரியர் குழுவில் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளார். முன்னணி தமிழ் எழுத்தாளர்களுடைய புத்தகங்களைப் பிரதி மேம்படுத்தியுள்ளார்.
பெங்களூர் சித்ரகலா பரீக்ஷத்தில் ஓவிய அறிமுகச் சான்றிதழ் பயிற்சி பெற்றவர்.
Knitting ஆடை வடிவமைப்பு, புகைப்படக் கலை, கல்வெட்டியல், சைகை மொழி ஆகியன இவருடைய பிற ஆர்வங்கள்.
வெளியாகியுள்ள நூல்கள்:
1. இவளுக்கு இவள் என்றும் பேர் (2010) – கவிதைத் தொகுப்பு
2. குட்டி யானைக்கு பச்சைத் தொப்பி (2018) – சிறார் கதைகள் தொகுப்பு
3. ஒரு வெப்பமண்டலத் தாவரமாகிய நான் (2021) – கவிதைத் தொகுப்பு
4. துமி (2022) – கவிதைத் தொகுப்பு
இரண்டு கவிதைத் தொகுப்புகளும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் விரைவில் வெளியாகவுள்ளன.
மின்னஞ்சல் – karthika.mukil@gmail.com