ஹேமா

Avatar
2 POSTS 0 COMMENTS
இவர் கடந்த பத்து வருடங்களாக எழுதி வருகிறார். இவரது சிறுகதைகளும் குறுநாவல்களும் உள்ளூர் மற்றும் அனைத்துலகப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. சிங்கப்பூர் மாத இதழான ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இல் ஜப்பானிய ஆதிக்கத்தின் போது சிங்கப்பூரில் நடந்த நிகழ்வுகளைக் குறித்து இவர் எழுதிய கட்டுரைத் தொடர் 17 மாதங்களுக்கு வெளிவந்தது. அக்கட்டுரைகளின் தொகுப்பான ‘வாழைமர நோட்டு’ இவரது முதல் புத்தகம். இந்தப் புத்தகம் சிங்கப்பூர் இலக்கிய பரிசு 2020 அபுனைவு பிரிவில் வெற்றி பெற்றுள்ளது. இவரது சிறுகதை ‘பெயர்ச்சி’ தங்கமுனை விருது 2019இல் இரண்டாம் பரிசைப் பெற்றது. இவரது ‘வெயிற்துண்டுகள்’, ‘பகடையாட்டம்’ ஆகிய கவிதைகள் முறையே சிங்கப்பூர் தேசிய கவிதைப் போட்டி 2018ல் முதல் பரிசையும், 2020ல் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளன. இவரது கதைகள் கணையாழி, கல்கி, சிராங்கூன் டைம்ஸ், தமிழ் முரசு முதலிய இதழ்களிலும் கனலி, அரூ, திண்ணை, மலைகள்.காம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும், வம்சி பதிப்பகம், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், சிராங்கூன் டைம்ஸ், தங்கமீன் வாசகர் வட்டம், அகநாழிகை பதிப்பகம் தொகுத்த நூல்களிலும், கவிதைகள் கவிமாலை, poetry festival Singapore தொகுத்த நூல்களிலும் வெளிவந்திருக்கின்றன.