Wednesday, September 24, 2025

கனகராஜ்

1 POSTS 0 COMMENTS
தமிழ் தாய் மொழியாக கொண்டு கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தவர். கன்னடத்தில் கதைகள், கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கும் இவர் தற்போது தமிழிலும் எழுதுகிறார். இவருடைய கன்னடக் கதைகளின் தமிழாக்கம் “வாட்டர்மெலன்” என்கிற தலைப்பில் வந்துள்ளது. கன்னடத்தில் இரண்டு சிறுகதை தொகுப்பு கொண்டுவந்துள்ள இவர் யூ ஆர் அனந்தமூர்த்தி கதா விருதை பெற்றுள்ளார். இவருடைய முதல் தமிழ் குறுநாடகம் “நில நகம்” கணையாழி இலக்கிய இதழ் நடத்திய குறுநாடகப் போட்டியில் சிறந்த நாடகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதோடு “பாலைவனத்தின் ஐந்தாம் சுவர்”என்கிற இவருடைய குறுநாவலும் வெளியாகியுள்ளது. இவருடைய முதல் நாவல் “அல் கொஸாமா” ஸீரோ டிகிரி நடத்தும் நாவல் போட்டியின் நெடும்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.தற்போது இவர் சவுதி அரேபியாவின் பல்கலை கழகமொன்றில் ஆங்கில இலக்கியம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.