மாயா மாயா

Avatar
1 POSTS 0 COMMENTS
மாயா என்ற பெயரில் எழுதி வரும் மலர்விழி பாஸ்கரன் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். பல்லூடக வடிவமைப்புக் கலைஞர். கதைகளின் காதலி. அறிபுனைகளிலும் வரலாற்றுப்புனைவுகளிலும் கூடுதல் நாட்டம் உண்டு. யூனிட் 109’, ’அன்று வந்ததும் இதே நிலா’ என்ற இரண்டு அறிபுனை புதினங்கள், ’கடாரம்’ என்ற வரலாற்றுப் புதினம் உட்பட ஆறு புனைவுகளும் வரலாற்றுப் பயணக்குறிப்பு கட்டுரை நூலொன்றும் எழுதியிருக்கிறார்.
இவருடைய அறிபுனை சிறுகதைகள் அரூ இதழில் வெளிவந்திருக்கின்றன. இணைய இதழ்களிலும் மலேசிய நாளிதழிலும் தொடர் கதைகள் எழுதி இருக்கிறார். எழுத்தின் வரம்புகளுக்கு உள்ளும் வெளியும் உள்ள பல்வேறு பரிமாணங்களையும் தொட்டுப்பார்த்து விடவும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் விரும்புகிறவர்.