அப்போது மகாராஷ்டிராவிலிருந்து பாடகர்கள் வருகிறார்கள். அவர்களின் குரல் வளத்தை கேட்டு ரங்கண்ணா, பாபு அனைவரும் அசந்து போகிறார்கள்.அவர்களின் குரல் வளம் சங்கீதம் அறிந்தவர்களை மட்டுமல்ல. சங்கீதம் அறியாத ராஜம், யமுனா போன்றவர்களையும் ஈர்த்து விடுகிறது.மராட்டிய பாடகர்கள் சங்கீதத்தை ஒரு தவமாக கருதுபவர்கள். அதை வைத்து பிழைப்பு நடத்தாதவர்கள். குரல் வளத்துக்காக வாழ்நாள் முழுவதையும் தியாகம் பண்ண தயாராக இருப்பவர்கள்.