
அப்புவை நெஞ்சோடு இந்து அணைத்துக்கொள்ளும்போது அந்த ஸ்பரிசம் அவனுக்குள் மிருதுவான குளிர்ந்த உணர்வை ஏற்படுத்துவதாக இருப்பினும் அவனுக்குள் இருக்கும் ஒழுக்க மரபின் நியதிகள் அவனது உடம்பில் பெரிய பச்சைப்புழு ஊர்வதைப்போலத் தோன்றச் செய்கிறது. தான் ஏற்கனவே திருமணமானவள் என்பதாலேயே அப்பு தன்னிடமிருந்து விலகுகிறானோ என நினைத்து “என் உடம்பை கட்டியாண்டா போதுமா? என் உடம்புக்குத்தானே கல்யாணம் ஆச்சு! மனசுக்கு ஆகலயே..புருஷனா நான் உன்னதானே மனசுல நினச்சுண்டிருந்தேன்” என்று சொல்லும்போது நியதிகள், மரபுகள் எல்லாம் கேள்விக்குள்ளாகின்றன.
மிகச் சிறந்த ஆய்வு நுட்பமான ஆய்வு பாராட்டுக்கள்
மிகவும் ஆழமான கட்டுரை. மகிழ்ச்சி. மனமார்ந்த பாராட்டுகளும், நன்றிகளும்.