பூவிதழ் உமேஷ்

Avatar
2 POSTS 0 COMMENTS
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நவலை என்னும் சிற்றூரில் பிறந்த இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சொற்களால் பொம்மை செய்பவன் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் இவர்- வெயில் ஒளிந்துகொள்ளும் அழகி என்ற கவிதைத் தொகுப்பும் மூலம் பரவலான கவனம் பெற்றார். இவர் சிறார் இலக்கியத்திலும் வலுவான தடம்பதித்து வருகிறார். தங்கக் குருவி, காடனும் வேடனும், ஊசி எலியும் ஆணி எலியும் ஆகிய மூன்று நாவல்கள் உட்பட பத்து நூல்களை எழுதியுள்ளார். அடுத்ததாக சதுரமான மூக்கு என்ற கவிதைத் தொகுப்பு நூலும் (ஆகுதி பதிப்பகம்) "a piece of moonshine at dinner" ( Writersgram publication ) என்ற ஆங்கில கவிதைத் தொகுப்பு நூலும் வெளிவந்துள்ளன. மேலும் இவர் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் தஞ்சை பிரகாஷ் நினைவு வளரும் இளம் படைப்பாளர் விருது, சௌமா இலக்கிய விருது, திருப்பூர் இலக்கிய விருது பெற்றுள்ளார்.