இஸ்மாயில் கவிதைகள்
கிணத்துக்குள் ஆமை
கிணத்துக்குள் ஆமை கிடக்கிறது என்று கேட்டு
குழந்தைகள் எல்லாம், குரங்குக் கூட்டத்தைப் போல் ஓடினோம்
கிணத்துக்குள் எட்டிப் பார்த்தபோது, எங்கள் தலைகள்தான் தெரிந்தன
பின்னால் வானமும், நீலத் தொடுவானும்
கற்களும் குச்சிகளும் எடுத்து கிணத்தைக் கலக்கினோம்
ஆமை மேலே...
அன்ட்டோனியா பாஸி கவிதைகள்
ஆசீர்வாதம்
ஒருவர் நெற்றியிலிருந்து இன்னொருவர் நெற்றிக்கு
நம் காய்ச்சல் தொற்றிக்கொள்கிறது.
வெளியே, உயிரோட்டமாக மின்னும் நட்சத்திரங்கள்
மற்றும் ஒரு படர்கொடி , அதன் உள்ளங்கை போன்ற இலைகளை நீட்டி நட்சத்திரங்களின்
லேசான வெளிச்சத்தைப் பிடிக்கிறது.
வெதுவெதுப்பான என் வீட்டில்,
அதன், வேறு யாருக்கும்...
நன்றாக குடி
நன்றாக குடி
1. எப்பொழுதும் நல்ல போதையிலிருக்க வேண்டும். எல்லாம் இருக்கிறது. அதுதான் பிரச்சனை. காலத்தின் கொடிய சுமை உன் தோள்களை முறித்து உன்னை நிலத்தில் குனியும்படிச் செய்வதை நீ உணராமல் இருக்கவேண்டுமென்றால் நீ...
ரேமாண்ட் கார்வர் கவிதைகள்
1,கீறல்
நான் விழித்தெழுந்தேன்
கண்ணில் துளி இரத்தத்தோடு ,
ஒரு கீறல்
எனது நெற்றியின் குறுக்காக பாதியளவிற்கு நீண்டிருந்தது .
ஆனால், இப்போதெல்லாம்
நான் தனியாகவே உறங்குகிறேன் .
எதற்காக இவ்வுலகில் ஒரு மனிதன்
உறங்கும்போதும் கூட தனக்கெதிராக
தன் கரத்தை உயர்த்தவேண்டும்?
ஜன்னலில் தெரியும் என்...
எலிஸபெத் பிஷப் கவிதைகள்.
காத்திருப்பு அறையில்
மாசசூசெட்ஸின் வொர்சஸ்டரில்,
பல்மருத்துவரைப் பார்க்கச் சென்ற அத்தை கன்சூலோவுடன்
நானும் சென்றிருந்தேன்.
அவள் மருத்துவரைப் பார்த்துவிட்டு வரும்வரை
காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தேன்.
அது பனிக்காலம். சீக்கிரமே இருட்டி
விட்டிருந்தது. காத்திருப்பு அறை முழுக்க பெரியவர்களே நிரம்பியிருந்தனர்,
கணுக்கால் வரை உயர்ந்த காலணிகளும்...
டெட் கூசர் கவிதைகள்
பிறை நிலா
எவ்வளவு அது தன் முதுகில் சுமந்தே ஆகியிருக்க வேண்டும்,
அந்த நீல நிழலான ஒரு மகத்தான பந்து
என்றாலும் அது எப்படியோ பிரகாசிக்கிறது, ஒரு தோற்றத்தைத்
தக்க வைத்துக் கொள்கிறது. இன்றிரவு பல மணி...
லூயிஸ் க்ளக் கவிதைகள்
1,ஏதுமின்மையின் தனிமை
இருள் நிறைந்திருக்கிறது
மழைக்கண்ணால் பார்க்கையில் மலை தெரியவில்லை
இங்கு ஒரே மழை சத்தம்
அதுதான் வாழ்வை இயக்கிக் கொண்டிருக்கிறது
மழையோடு குளிரும் சேர்ந்துவிட்டது
இவ்விரவில் நிலவுமில்லை விண்மீன்களுமில்லை
காற்று இரவில் உயிர்கொண்டிருக்கிறது
எல்லா காலையிலும் அது
கோதுமையைச் சாய்த்தபடி வீசிக்கொண்டிருந்தது
பிறகு நண்பகலில் நிறுத்திக்கொண்டது
ஆனால்...
அமீரி பராக்கா கவிதைகள்.
சம்பவம்
அவர் எங்கிருந்தோ திரும்பி வந்து சுட்டார். அவனைச் சுட்டுக் கொன்றார். அவர் திரும்பி வந்தபோது, சுட்டார், அவன் தடுமாறினான், விழுந்தான். இருள்காட்டைக் கடந்து, கீழே, சுடப்பட்டு, இறந்துகொண்டு, இறந்து, முற்றும் முழுமையான முடிவுக்குப்...
கதைகளால் செய்யப்பட்ட உலகம்: ம்யூரியல் ரூகெய்சரின் ‘இருளின் வேகம்’
இந்த உலகம் கதைகளால் செய்யப்பட்டிருக்கிறது,
அணுக்களால் அல்ல.
- ம்யூரியல் ரூகெய்சர் ('இருளின் வேகம்' கவிதையிலிருந்து).
I
யாரெல்லாம் பெண்குறிக் காம்பினை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் ஆண்குறியை வெறுக்கிறார்கள்
யாரெல்லாம் ஆண்குறியை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் யோனியை வெறுக்கிறார்கள்
யாரெல்லாம் யோனியை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம்...
மேரி ஆலிவர் கவிதைகள்
கற்களால் உணரயியலுமா?
கற்களால் உணரயியலுமா?
அவர்கள் தங்கள் வாழ்க்கையை நேசிக்கிறார்களா?
இல்லை அவர்களின் நிதானம் எல்லாவற்றையும்
அமைதியடையச் செய்துவிடுமா?
நான் கடற்கரையில் நடக்கும்போது
வெள்ளை நிறத்தில், கறுப்பில் எனப்
பல வண்ணங்களில் சிலவற்றைச் சேகரிக்கிறேன்.
கவலைப்பட வேண்டாம், நான் உன்னைத்
திரும்பவும் கொண்டு வந்து விட்டுவிடுவேன் என்கிறேன்
பிறகு அவ்விதமே செய்கிறேன்.
மரம் தனது பல கிளைகளை
உயர்த்தி உவகையடைகிறதே,
ஒவ்வொரு கிளையும் ஒரு கவிதையைப்போலவா?
முகில்கள் தங்களது மழைமூட்டையை
அவிழ்த்துவிடுவதில் மகிழ்ச்சியடைகின்றனவா?
உலகத்தில் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள்,
இல்லை, இல்லை, அது சாத்தியமேயில்லை என்று.
நான் அத்தகைய முடிவை
எண்ணிப்பார்க்கவே மறுத்துவிட்டேன்.
ஏனெனில் அது மிகப் பயங்கரமானதாக இருக்கும், மேலும் தவறாகவும்.
**
நான் கடற்கரைக்குச் சென்றேன்
நான் காலையில் கடற்கரைக்குச் சென்றேன்
நேரத்திற்கேற்ப அலைகள்
வந்துபடியும் சென்றபடியும் இருந்தன,
ஓ, நான் சோகமாக இருக்கிறேன்
என்ன செய்யட்டும்—
நான் என்ன செய்ய வேண்டும்? என்கிறேன்.
தன் அழகிய குரலில் கடல் சொல்கிறது:
மன்னிக்கவும், எனக்கு வேலை இருக்கிறது.
**
எப்போது அது நிகழ்ந்தது?
எப்போது அது நிகழ்ந்தது?
“நிறையக் காலத்திற்கு முன்பு”
எங்கு நிகழ்ந்தது?
“தூராதி தூரத்தில்”
இல்லை, சொல், எங்கு நிகழ்ந்தது?
“எனது இதயத்தில்”
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது உனது இதயம்?
“நினைத்துப்பார்த்த படியிருக்கிறது, நினைத்துப்பார்த்தபடியிருக்கிறது!”
**
இந்தக் காலையில்
இந்தக் காலையில்
செங்குருவிகளின் முட்டைகள்
பொரிந்துவிட்டன மேலும் ஏலவே குஞ்சுகள்
உணவுக்காகக் கீச்சிட்டுக்கொண்டிருக்கின்றன.
அவர்களுக்குத் தெரியாது உணவு
எங்கிருந்து வருகிறது என்று,
வெறுமனே கத்திக்கொண்டிருக்கிறார்கள் “மேலும்! மேலும்!”
வேறு எது குறித்தும்,...