ரங்கமணி அம்மாவுக்கு கணவனை இழந்து, தான் சுவீகாரம் எடுத்தப் பிள்ளை துரை, மருமகள் பங்கஜத்திற்கு இன்னும் குழந்தை இல்லா குறை. எத்தனையோ பேருக்கு ஜோதிடப் பலன், பரிகாரங்கள் எடுத்துச் சொல்லும் முத்துசாமி, சுலோச்சனா தம்பதியருக்கும் குழந்தை இல்லாத குறை. காமேச்வரன் தன் அப்பா மறுமணம் செய்துகொள்வதும், சித்தியாள் வீட்டில் ஒரு பிடித்தமான வாழ்க்கை இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறி தன் குரு வஸ்தனால் வளர்க்கப்பட்டு, ஆன்மீகப் புகட்டலோடு, விதவிதமான, சுவையான சமையல் கலையும் தன் குருவிடம் கற்றுக்கொள்கிறான். இந்த யாத்திரை ஸ்பெஷலின் முதன்மை சமையற்காரனாக, அம்பாளுக்கு தினந்தோறும் பூஜை செய்யும் காமேச்வரன், அவனுக்கென்று ஒரு குடும்பம், புகலிடம் இல்லாமல் ரயில் சக்கரங்கள் மாதிரி ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை.
Subscribe
0 Comments