Tag: ராஜன் ஆத்தியப்பன்

எலுமிச்சங்கனியின் சுயசரிதையிலிருந்து சில குறிப்புகள்.

1. சதுர வடிவப் பானையாய் மெல்ல அசைந்துகொண்டிருந்தது வீடு. கையறு பாடல்களின் புளிப்பு ஊறிப் பெருகி பழங்கஞ்சியாயிருந்தது. சோற்றுப் பருக்கைகளைப்போல குழந்தைகள் நீந்திக் களித்தனர்.   வெளுத்தத் துணிகளின்மேல் எச்சமிடும் காகங்கள் மீன் செவுள்களையும் கோழிக் குடலையும் பானையின் தூரில் மறைத்துச் சென்றன.   மரத்தடி தெய்வங்கள் கனிந்தனுப்பிய எலுமிச்சம் பழங்களால் பனங்கிழங்கு அலகுடைய செங்கால் நாரைகள் ஆடும் வீட்டினை அடை...