
காமேச்வரனும், பங்கஜமும் சந்தித்துப் பேசிக்கொள்ளுமிடமெல்லாம் ஜோதிடர் முத்துசாமி சொன்னமாதிரி ஏதோ ஒரு தவறான உறவு ஏற்பட்டு விடுமோ என்ற சஞ்சலத்தை உண்டுபண்ணுகிறார் தி.ஜா. ‘அம்மா வந்தாள்’ அப்பு, இந்து உறவை நினைவுப் படுத்துகிறது. ஆசிரியர் கம்பி மேல் நடக்கும் பயணம் போல இந்த உறவுச் சிக்கலை மிக மிக கவனமாகவே கையாண்டிருக்கிறார். துரை ஒன்றும் தெரியாத அப்பாவியா, ‘அம்மா வந்தாள்’ அப்புவை நினைவுபடுத்துகிறார் – அப்பு வேதசாலையில், துரை மளிகைக்கடையில்.