Tag: லீனா மணிமேகலை

கூதல்மாரி நுண்துளி தூங்கா நிலம் -லீனா மணிமேகலை

1. பொழியும்பொழியும் போதே உறையும்இறுகும்இறுக இறுக கனக்கும்உடையும்உடைந்து கீறி வாளென அறுக்கும்மிதக்கும்மிதந்து மேகதாதாகி புகையும்உறிஞ்சும்உறிஞ்சிய நிறங்களை வெண்மையாக்கித் துப்பும்நகர்த்தும்நகர்த்திய நட்சத்திரங்களிடையே கூதலை நிரப்பும்நிறையும்நிறைந்து நிலத்தைப் பாலையாக்கித் தகிக்கும்அதன் பெயர் பனியென்கிறார்கள்அதன் பெயர் நாம்  2 இந்த அதிகாலையில்...

‘பெண் சினிமா’ – கட்டுரைத் தொடர் -1

புதிய அலை சினிமாவின் மூதாய் ஆக்னஸ் வார்தா 2017 மே கான் திரைப்பட விழாவின் மார்ஷே-ட்யூ-ஃபிலிம் பிரிவின் சர்வதேச கூட்டுத் தயாரிப்பாளர் புரிந்துணர்வு சந்திப்புகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்றிருந்த சமயம். சர்வதேசங்களில் இருந்தும் குவியும் திரைப்பட ஆர்வலர்களின் கூட்டம் கானில் அதிகம் என்பதால், திரையிடல்களுக்கு செல்வதற்கான...

மன்னிக்கவும்.

மன்னிக்கவும் இதை சொல்வதற்குள் எனக்கு 38 வயது ஆகி விட்டது.மன்னிக்கவும் முலை விடாத வயதில் உனக்கு உலகத்திலேயே யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு காட்பரீஸை மென்றுக்கொண்டே சித்தப்பா என்று சொல்லியிருக்க கூடாது தான்.மன்னிக்கவும் அன்று ஏதோ சடங்குக்கு ஊருக்குப் போன சித்தியுடன் கூடவே தொற்றிக்...

அல்ஹமதுலில்லாஹ்

அல்ஹமதுலில்லாஹ்என நீ உச்சரிக்கும்போதெல்லாம் இருவாட்சியின் பெரும்பாத நிழல்என் மேல் கவியும்உன் நாக்கு மேல் அண்ணத்தை தொட்டுத் திரும்பி பற்களில் பட்டு உதடுகளைக் குவிக்கும்போது பனி பிளந்து இலை குளிர்ந்து காற்று தணியும் மழைப் பெய்து ஓய்ந்த கடலின் நீலம் பாய்ந்த உன் முகத்தில்  அச்சொல் பூரணமடையும் போதுபிறை தோன்றும் பின் மறையும்இடையில் விரியும் துண்டு வானம் எனக்கும் உனக்கும் மட்டுமே.————————————————பூப்பனி  பெய்யும் ஒரு...