யான் காப்லின்ஸ்கி கவிதைகள்
மொழி பெயர்ப்பு :வே.நி.சூர்யா
1
எப்போதும் இங்கும் எங்கும் உள்ளது அமைதி;
சிலசமயங்களில் சாதாரணமாய்
நாம் கேட்கிறோம் அதை மிகத்தெளிவாக:
புல்வெளியை போர்த்திக்கொண்டிருக்கிறது பனி,
களஞ்சியத்தின் கதவோ திறந்தபடி,
மேலிருந்து பாடிக்கொண்டிருக்கிறது வானம்பாடி;
எல்ம் மரக்கிளையை இடையறாது
வட்டமடிக்கிறது ஒரு வெளுத்த அந்துப்பூச்சி;
அம்மரக்கிளையோ புலப்படாதவாறு
இன்னும் அசைந்துகொண்டிருக்கிறது...