காதலிழந்த காலத்தின் இசை

ஓர் இரவோ நெடும்பகலோ நாம் காதலின் பிள்ளைகள் இவ்விரவோ நெடுநாள் கோடையோ நாம் காதலின் பிள்ளைகள் பொழுதின் நெடும்பாதை நீண்டாலும் இரவின் சிறுநொடிகள் ஆலங்கட்டிகளாய் விண்மீன் மெழுகிய தரைகளில் விழுந்தாலும் பருவகாலங்களின் மலர்கள் புதுப்பிறப்பின் ஓசைகளை எழுப்பினாலும் சங்குகளின் உள்ளே...

பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்.

Bestseller வார்த்தை ஒரேயொரு மன்னிப்பானது உடனிருந்தால் போதும் எதிலிருந்தும் தப்பிவிடலாமென்கிற தைரியம் ஒருவகையில் அதுவும் உண்மைதான் மன்னிப்புகள் ஒருபோதும் தீர்ந்துபோகாதது மன்னிப்புகளால் ஒருபோதும் பழசாகவும் முடியாது வருடாவருடம் அதிகளவில் விற்றுத்தீர்கிற அவ்வார்த்தைக்குத்தான் சந்தையில் எப்போதும் மவுசு அதிகம் பிற்பாடு தன் தேவைகள் அதிகமாவதை உணர்ந்தபின்னர் பகிரங்கமாகவே...

ஜீவன் பென்னி கவிதைகள்.

கடைசிப் பெட்டியின் வாசலில் உலகைச் சாய்த்து வைத்திருப்பவன். ஒவ்வொரு இடப்பெயர்தலிலும் அதற்கு முன்பான வாழ்வை அங்கேயே விட்டு விட்டு வருகின்றவன், எல்லோராலும் தான் நேசிக்கப்படுவதன் காரணங்களில் சிறிய ஒன்றையே எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறான்.!   1. ஒரு குற்றத்தின் முன்பாக வெகுநேரம் அமர்ந்திருப்பவன் தன் கைகளின்...

ஞா.தியாகராஜன் கவிதைகள்.

1. அப்போதுதான் அதிசயமாக யாரோ பாதி புகைத்து எறிந்த சிகரெட் அது வேறுவழியில்லாமல் அன்றைக்குதான் முதன்முதலாக அதை முயற்சித்தேன் மற்றபடி உன் அரண்மனைகள் இடிந்துவிழுந்ததுப் பற்றி எனக்கெதுவும் தெரியாது. 2. யார் சொல்வதற்கு முன்பும் முந்திக்கொண்டு நான் என்னை வெறுப்பதாகச் சொல்லிவிடுகிறேன் இருந்தாலும் ஒரு தடவை அவர்களும் அதை சொல்லிவிடுகிறார்கள் நான்...

அர்ஜுன்ராச் கவிதைகள்.

சமர்த்தனான கவலை ஒரு மலினமான கவலையைப் பெரும் பம்மாத்துடன் செல்லம் கொஞ்சி ஞாபக புறவெளியின் தென்படாத தூரத்திற்கு தொலைத்துவிட்டு வந்தேன் என் மனக்கதகதப்பின் வீச்சத்தை  நுகர்ந்துகொண்டு எப்படியோ மீண்டும் வந்துவிட்டதது   குளிப்பாட்டிவைத்த என் மனவீட்டுக்குள்ளேயே வாலைக் குழைத்து குழைத்து நிரபராத முகத்தோடு என் கால்களை நக்கி 'என் எஜமானனே...' என்றேகுகிறது என்னிடம்.   இனி கல்லெடுப்பதா ? கறிபோடுவதா ? என்ற ஒரே குழப்ப வெறியில் கொப்பூழ்...

இன்பா கவிதைகள்

1)நாடு மாறி நான் சிவப்புக் காதோலை கருப்பு வளையல் ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய் களக்கக் கட்டிய பூச்சரங்களென பிரப்பாங்கூடையில் எடுத்துச்சென்றுக் காவிரிக்கரையில் முழு ஆடையோடு முழுகி வெண்மணலைத் தாம்பாளங்களில் அள்ளிக்கொண்டு கரையேறும் கட்டுக்கழுத்திகள் படுகையில் வாசல் வைத்த நீள்சதுர வீடு கட்டி மஞ்சள் தோய்த்தச் சரடைக் கழுத்தில் கட்டி முடித்தபின் முகூர்த்த மாலைகள் ஆற்றில்...

நினைவு கொண்டிருப்பது

நினைவு கொண்டிருப்பது இன்று மாலை யாருமற்ற பூங்காவுக்குள் நுழையும்போது எதிர் வரிசையில் புன்னகையுடன் தோன்றி முகமன் கூறுவாள் ஒரு நாய்க்கார சீமாட்டி.   அவளைக் கடந்து வெட்கத்தை விட்டு ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்திருக்கும் மரங்களின் கீழ், இலைகளின் படுகையின் மீது ஓசை எழும்ப நடைப்பயிற்சி பழகும்போது,   வழமை போலவே தன் கவிகையில் நிறங்களை நிறைத்தபடி நின்று கொண்டிருக்கும் அந்த அழகு மரம். வட...

முத்துராசா குமார் கவிதைகள்

ஈச்சங்கை ஹைவேஸ் தாபா வாசலில் பச்சை சீரியல் பல்புகள் சுற்றப்பட்டு தனித்து நிற்கும் ஈச்சமரமாகிய நான் அகல வாய்க்காவில் முளைத்தவள். மறுகாவையும் பஞ்சபாடையும் குடித்து ஆழ ஊன்றினேன். பீக்காட்டின் கரம்பைத் தின்று கறித்திமிருடன் பூத்தேன். தூண்டிலுக்கு புழுக்கள் தோண்டுகையில் பாதங்கள் கூசும். செதில் உடலேறி சறுக்கியவர்களை பிடித்திருக்கிறேன். ஓலைத் தலையினுள் தேடி ஈச்சம் பழங்களைக் கொட்டியிருக்கிறேன். தேன்மிட்டாய்...

ஜீவன் பென்னி கவிதைகள்

சகமனிதன் தன்னைச் சிறகென மாற்றிக் கொள்கிறான்.   கைவிடப்பட்ட ஒரு மனிதனை நிறுத்தி உலகம் நிச்சயமாக உருண்டையானதா எனக் கேட்கின்றனர்? எல்லாவகையிலும் கைவிடப்பட்டிருக்கும் உருண்டை எனச் சொல்லிக் கடந்து செல்கிறானவன். 1. காயப்பட்ட மனிதனைப் பாடுவதற்காக இரண்டு பழுத்த இலைகள் இவ்விரவில் விழுந்திருக்கின்றன. அடரிருளே! அழுவதற்கென அவற்றை மிகத்...

ஸ்ரீநேசன் கவிதைகள்

  1.கவிதை ஆவது சொற்களில் சொற்சேர்க்கையில் அதுவாக்கும் கருத்தில் விரவிய அணியில் அலங்காரத்தில் ஓசை நயத்தில் சொற்களிடைவெளியில் அங்குக் கண்சிமிட்டும் மறைபொருளில் பொருள்மயக்கத்தில் தொனியில் வடிவத்தோற்றத்தில் கற்பனையில் சிந்தனையில் வாசகனில் அவன் கூர்ந்த வாசிப்பில் அவனும்...