நுண் கவிதைகள்

காலுக்கடியில் பாதாளம். முறிந்த கிளையின் நிழலில் தொங்கும் என் சிறுபொழுது. --------- ஒரு கத்தியை செருகி வைக்க மற்றொரு கத்தியையே உறையாக்குகிறேன். --------- வாதிடாமல் குப்பைத் தொட்டியாக்குகிறேன் உன்னை. நீயும் ஒதுங்கியே நடக்கிறாய். --------- மெளனப் பந்தை உன்னிடம் உருட்டிவிடுகிறேன். அந்த விலங்கு உன்னை விளையாட்டாக்குகிறது. --------- இன்னும் கிழியாமல் கசங்காமல் ஒரு குழந்தை போட்டோ. அந்தப் பைத்தியக்காரன் வெய்யிலில் சிலுவையோடு அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான். --------- சிலுவை சுமந்தலையும் மனிதனுக்கு...

பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்

சுவிட்சுகளை மனனம் செய்தல் பறவையினங்களில் இந்த மின்விசிறிதான் அமானுஷ்ய குணம்கொண்டதுபோலும்  இரக்கம் கொண்டு ஒருநாள் அதைக் கூண்டிலிருந்து விடுவித்து  வானத்தில் மாட்டி வைத்தேன் இப்போது இந்நகரத்திற்கேயான மின்விசிறியென   கழுகொன்று சுழன்றுகொண்டிருக்கிறது  மேலும் விசிறியை இணைக்கும் மின்-வயர்களை  அது பாம்புகளென நினைத்துக்கொள்ள  இந்த அபத்தத்தை நிறுத்தவேண்டி அறையில் ஒவ்வொரு சுவிட்சாக  அமர்த்தி அமர்த்தி...

தூரிகை

இந்த பட்டாம்பூச்சி வாழ்வை  எவ்வாறு ரசிக்கின்றது  காற்றில் மிதந்து கொண்டிருக்கும் தும்பிகள் பட்டாம்பூச்சிக்கு வழிவிடுகின்றன  வானிலிருந்த விழுந்த மழைத்துளி  சிலையாகிவிட்ட பட்டாம்பூச்சியின்  தவத்தினை கலைத்துவிட்டது  பசிய காட்டில்  திரியும் பட்டாம்பூச்சிகள்  மனிதர்களையே பார்த்திருக்காது  பச்சை போர்த்திய இவ்வுலகம்  பட்டாம்பூச்சிகளுக்கானது  கடவுள் தனது  தூரிகை வண்ணங்களால்  பட்டாம்பூச்சியை அழகுறச் செய்கிறார்  மனிதன் சுதந்திரத்தின்  ஆனந்தத்தை அனுபவிக்க  பட்டாம்பூச்சியாகத்தான்  பிறவியெடுக்க வேண்டும்!   ப.மதியழகன் 

நகுலன் கவிதைகள்

காத்த பானை காத்த பானை கொதிக்காது கரும்பு கசக்காது வேம்பு இனிக்காது என்றாலும் என்ன செய்தாலும் என் மனமே வந்தபின் போக முடியாது போனபின் வர முடியாது என்றாலும் என்ன செய்தாலும் என்றென்றே சொல்லிச் சலிக்கும் என் மனமே ஊமையே உன்மத்த கூத்தனே வாழ ஒரு வழி சாக ஒரு மார்க்கம் சொல்லவல்ல...

உணவெனும் கலை

வாத்துகளாயிரம் அல்லிகளாய் மலர்ந்திருக்க குருவியின் சிறுமனை கிளைகளில் நிலவாய் தொங்கும் ஆற்றின் அருகமர்ந்து தீ பொசுக்கும் கறியிலிருந்து சொட்டும் எண்ணை எச்சிலாகி உடலை நனைத்த கதையைச் சொல்லியவாறு குடல், ஈரல், தொடைக்கறியென பந்தி விரித்து பாங்காய் இது பக்கோடாவென பொட்டலம் பிரித்த ததும்பும் பிரியங்களால் மாட்டுக்கறியின் ருசியை அரூரில் சுவைக்கக் கற்றேன். ஆம்பூர்,...

கார்த்திக் திலகன் கவிதைகள்

 நன்றி ஒட்டகத்தின் கால் கொண்டு நடக்கிறேன் என் பாதை எங்கும் மணல் மணலாய் எழுத்துக்கள் எழுத்துக்களைக் கொண்டு இவ்வளவு பெரிய பாலைவனத்தை உருவாக்கிய என் முன்னோர்களுக்கு நன்றி எழுத்தின் மேல் நடக்கும் ஒட்டகமாக என்னைப் பெற்றெடுத்த என் தாய்தந்தைக்கு நன்றி எல்லாப்...

உப்பளத்து கால்கள்

அவளது வியர்வைத் துளிகள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன இந்த கடலை விட பெரிதாக இந்த கற்களை விட உறுதியாக சமயங்களில் அவள் உப்புக்கரிக்கும் வியர்வைகளை உற்பத்தி செய்கின்றாள் அவள் தனது நீராகாரத்தில் அதனைக் கொண்டே ருசியைக் கூட்டுகிறாள் அவளின் உதடுகள் வெடித்த பனிப்பாறையை நினைவூட்டுகின்றன அயற்சியால் தன்னிச்சையாக நாக்கு ஈரமாக்கிட பற்கள்...

நேசமித்ரன் கவிதைகள்

சீசாச் சில்லுகள் சக்கர நாற்காலியொன்று நகரத்தின் மழைக்கும் சாலையை தன்னந்தனியாக கடந்து வீடு சேர்வதாய் ஓர் மன்னிப்பு திமிரின் சீசாச்சில்லுகள் பதித்த சுவர்களை பூனையின் பாதங்களுடன் கடந்து உன் அழும் முகம் அருகே நிற்கிறது கண்ணாடிக் கூம்புக்குள் எரியும் சுடர் மிக நெருங்கின மூச்சுக்கு...

சந்திரா தங்கராஜ் கவிதைகள்

மலைக்குத் திரும்புதல் வரையாடுகளும் முள்ளம்பன்றிகளும் மலைமான்களும் கரடிகளும் தந்தம் பெருத்த யானைகளும் குதித்தாடும் மந்திகளும் கன்னிமார்சாமியும் செந்நிறஅந்தியும் பூக்கும் மலையில் பிறந்தேன் சுனையின் குளிர்ந்தநீர் என்னை பருவமாக்கியது இரண்டு குன்றுகளை ஈன்றெடுத்தேன் என் பிள்ளைகள் ஆடுகளை வளர்த்தார்கள் பாறைப் புடவுகளில் படுத்துறங்கிய ஆடுகள் குளிர்...

சாகிப்கிரான் கவிதைகள்

 நிகழ்வது கைவிடப்பட்ட இரட்டை முடிப்பு பலூன்கள் தைரியமாக வாகனங்களைத் தவிர்க்கப் பார்க்கின்றன. டூவீலர்களுக்கும் சைக்கிள்களுக்கும் காற்றிற்குப் பேராசைப்படாத விறைப்புக் குறைந்த ஜோடிகள் நழுவியபடியே சாதித்தன கடைசியாக ஒரு டிப்பர் லாரி பலூன் என்றால் வெடித்துவிட வேண்டுமா என்ன? பேரதிசயத்தைக் கடந்தபடி அந்த நாள் நிகழ்கிறது நினைவேக்கமாக. தூ...தூ... எல்லோரும் அன்பாகக் கேட்கிறார்கள்தான் பிறகு குறுகிய சந்துகளின் அரசாணிகள் அப்படியே அந்தப்...