அர்ஜுன்ராச் கவிதைகள்.

சமர்த்தனான கவலை ஒரு மலினமான கவலையைப் பெரும் பம்மாத்துடன் செல்லம் கொஞ்சி ஞாபக புறவெளியின் தென்படாத தூரத்திற்கு தொலைத்துவிட்டு வந்தேன் என் மனக்கதகதப்பின் வீச்சத்தை  நுகர்ந்துகொண்டு எப்படியோ மீண்டும் வந்துவிட்டதது   குளிப்பாட்டிவைத்த என் மனவீட்டுக்குள்ளேயே வாலைக் குழைத்து குழைத்து நிரபராத முகத்தோடு என் கால்களை நக்கி 'என் எஜமானனே...' என்றேகுகிறது என்னிடம்.   இனி கல்லெடுப்பதா ? கறிபோடுவதா ? என்ற ஒரே குழப்ப வெறியில் கொப்பூழ்...

இன்பா கவிதைகள்

1)நாடு மாறி நான் சிவப்புக் காதோலை கருப்பு வளையல் ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய் களக்கக் கட்டிய பூச்சரங்களென பிரப்பாங்கூடையில் எடுத்துச்சென்றுக் காவிரிக்கரையில் முழு ஆடையோடு முழுகி வெண்மணலைத் தாம்பாளங்களில் அள்ளிக்கொண்டு கரையேறும் கட்டுக்கழுத்திகள் படுகையில் வாசல் வைத்த நீள்சதுர வீடு கட்டி மஞ்சள் தோய்த்தச் சரடைக் கழுத்தில் கட்டி முடித்தபின் முகூர்த்த மாலைகள் ஆற்றில்...

நினைவு கொண்டிருப்பது

நினைவு கொண்டிருப்பது இன்று மாலை யாருமற்ற பூங்காவுக்குள் நுழையும்போது எதிர் வரிசையில் புன்னகையுடன் தோன்றி முகமன் கூறுவாள் ஒரு நாய்க்கார சீமாட்டி.   அவளைக் கடந்து வெட்கத்தை விட்டு ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்திருக்கும் மரங்களின் கீழ், இலைகளின் படுகையின் மீது ஓசை எழும்ப நடைப்பயிற்சி பழகும்போது,   வழமை போலவே தன் கவிகையில் நிறங்களை நிறைத்தபடி நின்று கொண்டிருக்கும் அந்த அழகு மரம். வட...

முத்துராசா குமார் கவிதைகள்

ஈச்சங்கை ஹைவேஸ் தாபா வாசலில் பச்சை சீரியல் பல்புகள் சுற்றப்பட்டு தனித்து நிற்கும் ஈச்சமரமாகிய நான் அகல வாய்க்காவில் முளைத்தவள். மறுகாவையும் பஞ்சபாடையும் குடித்து ஆழ ஊன்றினேன். பீக்காட்டின் கரம்பைத் தின்று கறித்திமிருடன் பூத்தேன். தூண்டிலுக்கு புழுக்கள் தோண்டுகையில் பாதங்கள் கூசும். செதில் உடலேறி சறுக்கியவர்களை பிடித்திருக்கிறேன். ஓலைத் தலையினுள் தேடி ஈச்சம் பழங்களைக் கொட்டியிருக்கிறேன். தேன்மிட்டாய்...

ஜீவன் பென்னி கவிதைகள்

சகமனிதன் தன்னைச் சிறகென மாற்றிக் கொள்கிறான்.   கைவிடப்பட்ட ஒரு மனிதனை நிறுத்தி உலகம் நிச்சயமாக உருண்டையானதா எனக் கேட்கின்றனர்? எல்லாவகையிலும் கைவிடப்பட்டிருக்கும் உருண்டை எனச் சொல்லிக் கடந்து செல்கிறானவன். 1. காயப்பட்ட மனிதனைப் பாடுவதற்காக இரண்டு பழுத்த இலைகள் இவ்விரவில் விழுந்திருக்கின்றன. அடரிருளே! அழுவதற்கென அவற்றை மிகத்...

ஸ்ரீநேசன் கவிதைகள்

  1.கவிதை ஆவது சொற்களில் சொற்சேர்க்கையில் அதுவாக்கும் கருத்தில் விரவிய அணியில் அலங்காரத்தில் ஓசை நயத்தில் சொற்களிடைவெளியில் அங்குக் கண்சிமிட்டும் மறைபொருளில் பொருள்மயக்கத்தில் தொனியில் வடிவத்தோற்றத்தில் கற்பனையில் சிந்தனையில் வாசகனில் அவன் கூர்ந்த வாசிப்பில் அவனும்...

ஆனந்த் குமார் கவிதைகள்

அம்மும்மாவின் பால்கனித் தோட்டம்     நிறைந்துவிட்டது. கத்தரி புதினா தக்காளி இருந்தாலும் அம்மும்மாவிற்கோ ரோஜா பைத்தியம் வளர்ந்த ஒரு ரோஜாவின் கிளைமுறித்து கிளைமுறித்து வேறுவேறு தொட்டிகளில் வளர்த்தெடுத்தாள். இனி இடமில்லை என ஆனபின்னும் குட்டி ரோஜாத் தைகளாய் ஒடித்து அதன் கீழேயே நட்டுவைத்தாள். ஒரு தொட்டியில் இத்தனை நட்டால் ஒன்றுமே பிழைக்காது என்றதை அவள் கேட்டமாதிரியில்லை காய்ந்த ரோஜா பதியன்களுக்கு தளும்பத் தளும்ப நீர் ஊற்றுகிறாள் அம்மும்மா உறங்கும் மதியவேளையில் குத்தி நிற்கும் சுள்ளிகளின் மீது பூக்களின் நிழல்பரப்பி நிற்கிறது பெரிய ரோஜாச்செடி அவள் எழுந்து வந்து பார்க்கிறாள் மூட்டில் கையூன்றி உதிர்ந்த இலைகளின் நிழல்களுக்கடியில் கண்டுபிடிக்கிறாள் இன்னுமோர் இடைவெளியை   விழித்தபின்  நகர் நடுவே அந்த ஏரியை வேலியிட்டு வைத்திருந்தார்கள். தொட்டிலுக்குள் எழுந்துவிட்ட குழந்தைபோல் கவிழ்ந்து கிடந்து உருள்கிறதது, அழவில்லை சமர்த்து.   கம்பித் தடையின்றி ஏரியைப் பார்க்க சுற்றி வந்தேன். சாலை தாழும் ஒரு பழைய ஓடையருகே விரல்விட்டு வெளியே மணல் அளைந்துகொண்டிருந்தது ஏரி.     மலையெனக்கருதி இருளை பாதிவரை ஏறிவிட்டேன் இடரும் எதன்தலையிலும் அழுந்த மிதித்தே வந்திருக்கிறேன்.   வழியென்பது ஒன்றேதான், மேலே. விடிய நான் தொட்டது பாழ்வெளியின் பெருமூச்சு. எனக்குத் தெரியும் ஏறுவதை விட இறங்குவது கடினமென. ஆனாலும், மலையில்லாத உச்சியிலிருந்து எப்படி இறங்க?   ஆனந்த் குமார் தற்போது திருவனந்தபுரத்தில் குழந்தைகள் புகைப்படக் கலைஞனாக இருக்கிறார்.குறும்படங்கள் ஆவணப்படங்கள் எடுப்பதிலும் பங்காற்றி வருகிறார் . சிறார் இலக்கியம், கதை சொல்லலிலும் ஆர்வம் உண்டு.

ச. துரை கவிதைகள்

  நூற்றாண்டுகளாக சுழலும் இசைத்தட்டு   . இந்த இசைத்தட்டு முடிந்ததும் யாருடைய வீட்டு கதவை தட்டப்போகிறேன் என நினைத்ததும் அச்சம் அவன் தலையை கோதியது அமர்ந்திருக்கும் இடத்தில் கடலும் எரிமலையும் முளைத்தது ஏன் இலைகள் என் மீது மட்டுமே உதிர்கின்றன என்று கத்தினான் அந்த சப்தம் எங்கேயோ நீண்டு...

அகச்சேரன் கவிதைகள்

  1) தேட்டம்   பாறைகளை வெட்டி வெட்டிச் சமைத்த மலைப்பாதையில் மேலேறுகிறேன் சிதைக்கப்பட்ட பக்கவாட்டுப் பாறைகள் தம் ஹீனஉடல்களால் பள்ளத்தாக்கை நோக்குகின்றன சாலையைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.   ●●●   செத்தவன் பிழைத்தானெனில் சங்கொலி நிறுத்தம் சங்கொலி நின்றிடிலோ சடங்குகள் முடக்கம் சடங்குகள் முடங்கியபின் மலர்பாடை கலைப்பு பாடை கலைந்த பின்னர் திரண்டவர் தளர்நடை திரண்டவர் சென்ற தன்பின் ஏங்குமொரு வெட்டுகுழி   ●●●   ...

கு.அ.தமிழ்மொழி கவிதைகள்

  1) மிதிபடும் காலம் I. என் அளவுக் காலணிகள் எளிதில் கிடைத்துவிடுவதில்லை என்றுதான் இவ்வளவு நாட்களாக நம்பியிருந்தேன் நேற்று சுய்ப்ரேன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அதைத் தற்செயலாகப் பார்த்தேன் அத்தனைப் பொருத்தமாக என் கால்களை அணைத்தது ஓ! என் அன்புக் காலணியே! நீ...