ஆனந்த் குமார் கவிதைகள்

அம்மும்மாவின் பால்கனித் தோட்டம்     நிறைந்துவிட்டது. கத்தரி புதினா தக்காளி இருந்தாலும் அம்மும்மாவிற்கோ ரோஜா பைத்தியம் வளர்ந்த ஒரு ரோஜாவின் கிளைமுறித்து கிளைமுறித்து வேறுவேறு தொட்டிகளில் வளர்த்தெடுத்தாள். இனி இடமில்லை என ஆனபின்னும் குட்டி ரோஜாத் தைகளாய் ஒடித்து அதன் கீழேயே நட்டுவைத்தாள். ஒரு தொட்டியில் இத்தனை நட்டால் ஒன்றுமே பிழைக்காது என்றதை அவள் கேட்டமாதிரியில்லை காய்ந்த ரோஜா பதியன்களுக்கு தளும்பத் தளும்ப நீர் ஊற்றுகிறாள் அம்மும்மா உறங்கும் மதியவேளையில் குத்தி நிற்கும் சுள்ளிகளின் மீது பூக்களின் நிழல்பரப்பி நிற்கிறது பெரிய ரோஜாச்செடி அவள் எழுந்து வந்து பார்க்கிறாள் மூட்டில் கையூன்றி உதிர்ந்த இலைகளின் நிழல்களுக்கடியில் கண்டுபிடிக்கிறாள் இன்னுமோர் இடைவெளியை   விழித்தபின்  நகர் நடுவே அந்த ஏரியை வேலியிட்டு வைத்திருந்தார்கள். தொட்டிலுக்குள் எழுந்துவிட்ட குழந்தைபோல் கவிழ்ந்து கிடந்து உருள்கிறதது, அழவில்லை சமர்த்து.   கம்பித் தடையின்றி ஏரியைப் பார்க்க சுற்றி வந்தேன். சாலை தாழும் ஒரு பழைய ஓடையருகே விரல்விட்டு வெளியே மணல் அளைந்துகொண்டிருந்தது ஏரி.     மலையெனக்கருதி இருளை பாதிவரை ஏறிவிட்டேன் இடரும் எதன்தலையிலும் அழுந்த மிதித்தே வந்திருக்கிறேன்.   வழியென்பது ஒன்றேதான், மேலே. விடிய நான் தொட்டது பாழ்வெளியின் பெருமூச்சு. எனக்குத் தெரியும் ஏறுவதை விட இறங்குவது கடினமென. ஆனாலும், மலையில்லாத உச்சியிலிருந்து எப்படி இறங்க?   ஆனந்த் குமார் தற்போது திருவனந்தபுரத்தில் குழந்தைகள் புகைப்படக் கலைஞனாக இருக்கிறார்.குறும்படங்கள் ஆவணப்படங்கள் எடுப்பதிலும் பங்காற்றி வருகிறார் . சிறார் இலக்கியம், கதை சொல்லலிலும் ஆர்வம் உண்டு.

ச. துரை கவிதைகள்

  நூற்றாண்டுகளாக சுழலும் இசைத்தட்டு   . இந்த இசைத்தட்டு முடிந்ததும் யாருடைய வீட்டு கதவை தட்டப்போகிறேன் என நினைத்ததும் அச்சம் அவன் தலையை கோதியது அமர்ந்திருக்கும் இடத்தில் கடலும் எரிமலையும் முளைத்தது ஏன் இலைகள் என் மீது மட்டுமே உதிர்கின்றன என்று கத்தினான் அந்த சப்தம் எங்கேயோ நீண்டு...

அகச்சேரன் கவிதைகள்

  1) தேட்டம்   பாறைகளை வெட்டி வெட்டிச் சமைத்த மலைப்பாதையில் மேலேறுகிறேன் சிதைக்கப்பட்ட பக்கவாட்டுப் பாறைகள் தம் ஹீனஉடல்களால் பள்ளத்தாக்கை நோக்குகின்றன சாலையைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.   ●●●   செத்தவன் பிழைத்தானெனில் சங்கொலி நிறுத்தம் சங்கொலி நின்றிடிலோ சடங்குகள் முடக்கம் சடங்குகள் முடங்கியபின் மலர்பாடை கலைப்பு பாடை கலைந்த பின்னர் திரண்டவர் தளர்நடை திரண்டவர் சென்ற தன்பின் ஏங்குமொரு வெட்டுகுழி   ●●●   ...

கு.அ.தமிழ்மொழி கவிதைகள்

  1) மிதிபடும் காலம் I. என் அளவுக் காலணிகள் எளிதில் கிடைத்துவிடுவதில்லை என்றுதான் இவ்வளவு நாட்களாக நம்பியிருந்தேன் நேற்று சுய்ப்ரேன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அதைத் தற்செயலாகப் பார்த்தேன் அத்தனைப் பொருத்தமாக என் கால்களை அணைத்தது ஓ! என் அன்புக் காலணியே! நீ...

வியாகுலன் கவிதைகள்

1) மூஸ் கவிதைகள் I. அந்தப் பூனை என் மடியில் படுத்திருந்தது ஒரு நிலவின் அமைதியைப் போல அந்தப் பூனைக்கு வினோதமான பெயர்கள் எல்லாம் இல்லை. மூஸ்… மூஸ்… என்றுதான் அப்பத்தா கூப்பிடுவார்கள் சுருக்கங்கள் நிறைந்த அவளது கரங்களில் விளையாடிக்கொண்டிருந்தது அந்த மூஸ்   பூனைக்கு மூஸ் என்று யார்தான் பெயரிட்டு இருப்பார்கள் அந்த மூஸ் என்ற...

சிவசங்கர். எஸ். ஜே. கவிதைகள்

1) நந்தினிக்குட்டி நத்தாருக்கு இன்னும் ஒரு வாரம் கேரல் குழுவின் வழக்கமான மார்கழி சங்கீர்த்தனங்கள் ஒவ்வொரு நாளும் நத்தார் தாத்தா நடனமாடி தாவிக்குதித்து வருகிறார் தெருவெங்கும். குழந்தைகளுக்கு மிட்டாயும் பலூனும் தருகிறார்   மாடியிலிருந்து எட்டிப்பார்க்கும் நந்தினிக்குட்டிக்கும் மிட்டாய் கிடைக்கிறது. அவளுக்கு சந்தோசமில்லை   தாத்தா நம்ம வீட்டுக்கு...

சுகுமாரன் கவிதைகள்

லியான்ஹுவாவின் காதலர் திரு. காங்க்மிங்க் ரேன் பனிக்கால நள்ளிரவில் மரணமடைந்தார் திரு. காங்க்மிங்க் ரேன் மனைவியின் இல்லத்தில் உயிர்துறந்தார். திரு. காங்க்மிங்க் ரேன் மணம் முறித்திருந்தார். திரு. காங்க்மிங்க் ரேனும் திருமதி லியான்ஹுவாவும் தனித்தனியே வாழ்ந்தனர் எனினும் இருவரும் நண்பர்களாக இருந்தனர். திரு....

மன்னிக்கவும்.

மன்னிக்கவும் இதை சொல்வதற்குள் எனக்கு 38 வயது ஆகி விட்டது. மன்னிக்கவும் முலை விடாத வயதில் உனக்கு உலகத்திலேயே யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு காட்பரீஸை மென்றுக்கொண்டே சித்தப்பா என்று சொல்லியிருக்க கூடாது தான். மன்னிக்கவும் அன்று ஏதோ சடங்குக்கு ஊருக்குப் போன சித்தியுடன் கூடவே தொற்றிக்...

வின்சென்ட் வான்கோவின் மஞ்சளும் வெண்கல மஞ்சளும்

1 இருளும் ஒளியும் சமமாய்ப் புணர்ந்த சித்திரத்தில் அவித்த உருளைக் கிழங்கைப் புசிக்கிறவர்களின் துயர விகாசம் கழுவாத வெண்கலக் கும்பா மஞ்சளுடன் கரைகஞ்சி குடிப்பவனின் மனவிலக்கம். 2 அங்கம் அறுபட்டு மரணித்த உறவின் வாய்க்குள் நினைவுப் பால் நனைத்த வீர ராயன் காசுகளாய் வின்சென்ட்டின் மஞ்சள் கறுத்த சொற்கள் கவிதைக்குள். 3 வின்சென்ட்டின் மஞ்சள் நாற்காலித் தனிமை புகையிலையும் புகைக் குழாயும் இருக்கை...

மதுசூதன் கவிதைகள்

முரண்களின் முள்வேலி. இந்தப் பெரும் பாறையை எப்படியெல்லாம் செதுக்கியிருக்கலாம் ? இரண்யனைக் கிழித்த நரசிம்மனாக, விம்மிய முலைகளோடு விளக்கேந்தும் சிலையாக, ஒரு மலைக் கோயிலுக்கு முதலிரண்டு படியாக... ஒன்றுமாகாததை யோசித்து என்ன வேலை ? இப்போதைக்கு ஒரு காகம், ஓணான் குஞ்சைக் குத்திக் கிழிக்க...