படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

ஜீவன் பென்னி கவிதைகள்.

கடைசிப் பெட்டியின் வாசலில் உலகைச் சாய்த்து வைத்திருப்பவன். ஒவ்வொரு இடப்பெயர்தலிலும் அதற்கு முன்பான வாழ்வை அங்கேயே விட்டு விட்டு வருகின்றவன், எல்லோராலும் தான் நேசிக்கப்படுவதன் காரணங்களில் சிறிய ஒன்றையே எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறான்.!   1. ஒரு குற்றத்தின் முன்பாக வெகுநேரம் அமர்ந்திருப்பவன் தன் கைகளின்...

தடம்

விட்டுச்சென்ற  வேதனை  மட்டுமே  அவள் மனதில்  நிற்கிறது. கொட்டித்தந்த  சந்தோஷம்  விலகிப்போய்விட்டது. கண்ணைக்  கூசிய  வெளிச்சத்தில்  வாழ்ந்துவிட்டு  இப்போது  பொட்டு  வெளிச்சத்திற்கும் அவள் துழாவும்படியாகிவிட்டது. ‘ இதுதான்  வாழ்க்கையா.....வெறுமையோடிய  ஆளோடியில்  ஒற்றை  அணிலாய்  வாழ  பழகிக்கொள்ள ...

இங்கிருந்து உண்மைக்கு அங்கிருந்து இன்மைக்கு

எங்கள் அடுக்ககக் குடியிருப்பில் ஒரு பையன் இருக்கிறான். என் மகனின் விளையாட்டுத் தோழன். அவன் பெயர் ஜீவன். அவனை நான் ‘ஜீவன் பென்னி’ என்றே எப்போதும் குறிப்பிடுவேன். அப்படி நான் குறிப்பிடும் ஒவ்வொரு...

கோவிட் குப்பைகளும் சூழலியல் பாதிப்பும்

சீனாவின் வுஹானில் முதன்முதல் 2019 டிசம்பரில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸை உலக சுகாதார நிறுவனம் ஒரு தொற்றுநோயாக 11 மார்ச் 2020 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சரியாக ஒரு வருடம் கழிந்த...

பெருந்தொற்றுக் காலப் பொது முடக்கம் காற்று மாசுபாட்டைக் குறைத்துள்ளதா…?

  பெருந்தொற்றிற்குப் பின்னான 15 மாத கால நீண்ட பொது முடக்கத்திற்குப் பின்னே பசுமை குடில் வாயுக்களின் அளவு பெருமளவு குறைந்திருக்கும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் பேரவாவாக இருந்தது. ஆனால் பெரும் எதிர்பார்ப்புக்கு...

முள்ளெலி

 உலகில் 17 வகை முள்ளெலிகள் உள்ளன. ஐரோப்பா. ஆப்பிரிக்கா. நியூசிலாந்து, ஆசியா போன்ற பகுதிகளில் வாழ்கின்றன..  இந்தியாவில் மூன்று வகையான முள்ளெலிகள் காணப்படுகின்றன. அவை நீண்டகாது முள்ளெலி, வெளிர் முள்ளெலி, தென்னிந்திய முள்ளெலி...

ஞா.தியாகராஜன் கவிதைகள்.

1. அப்போதுதான் அதிசயமாக யாரோ பாதி புகைத்து எறிந்த சிகரெட் அது வேறுவழியில்லாமல் அன்றைக்குதான் முதன்முதலாக அதை முயற்சித்தேன் மற்றபடி உன் அரண்மனைகள் இடிந்துவிழுந்ததுப் பற்றி எனக்கெதுவும் தெரியாது. 2. யார் சொல்வதற்கு முன்பும் முந்திக்கொண்டு நான் என்னை வெறுப்பதாகச் சொல்லிவிடுகிறேன் இருந்தாலும் ஒரு தடவை அவர்களும் அதை சொல்லிவிடுகிறார்கள் நான்...

அர்ஜுன்ராச் கவிதைகள்.

சமர்த்தனான கவலை ஒரு மலினமான கவலையைப் பெரும் பம்மாத்துடன் செல்லம் கொஞ்சி ஞாபக புறவெளியின் தென்படாத தூரத்திற்கு தொலைத்துவிட்டு வந்தேன் என் மனக்கதகதப்பின் வீச்சத்தை  நுகர்ந்துகொண்டு எப்படியோ மீண்டும் வந்துவிட்டதது   குளிப்பாட்டிவைத்த என் மனவீட்டுக்குள்ளேயே வாலைக் குழைத்து குழைத்து நிரபராத முகத்தோடு என் கால்களை நக்கி 'என் எஜமானனே...' என்றேகுகிறது என்னிடம்.   இனி கல்லெடுப்பதா ? கறிபோடுவதா ? என்ற ஒரே குழப்ப வெறியில் கொப்பூழ்...

மரபுடைத்த தலைவிகள்.

பரந்த இந்நிலப்பரப்பில் பெண்களின் உலகம், குடும்பம், அலுவலகம் எனச் சுருங்கிக் கிடக்கிறது. பெண்ணாய்ப் பிறந்தாலே குடும்பமே பிராதனம். அந்தக் குடும்ப வாழ்க்கையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளும் பெண்களுக்கு இல்லற இன்பம் முழுமையாகக்...

நாற்றம்

“ஐ டிட் இட் மேன்... ஐ டிட் இட்” என்று கைபேசியில் ஜனனி அலறினாள். அவள் முகம் நூறுபேரை ஒருவனாக அடித்து வீழ்த்திய கதாநாயகனின் முகம் போன்றிருந்தது. சன்னதம் வந்து ஆடி அருள் வாக்கும்...