படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

நீலக்கண்கள்-ஐசக் தினேசன்

நூறு வருடங்களுக்கு முன்னால் எல்சினொரில் வாழ்ந்த ஒரு படகுத்தலைவன் தன் அழகிய இளம் மனைவி மேல் பெருங்காதல் கொண்டிருந்தான். காலப்போக்கில் தன்னுடைய முனைப்பாலும் உழைப்பாலும் நல்லதிருஷ்டத்தாலும் தனக்கென ஒரு கப்பல் வாங்கியபோது அதற்கு...

வெள்ளை நிறக்காலம்.

நோயின் வாசலில் நின்று அல்லது கதவின் மறு புறம் நின்று அல்லது அழகான சொற்சேர்க்கையின் நடுவிலிருந்து அவர்கள் அவனை வழியனுப்புகிறார்கள் பழைய கிட்டாருக்கெல்லாம் உள்ளே அனுமதி கிடையாது சுகவீனம் இழந்த தோற்றத்தை கண்ணுறும் குழந்தைகள் அம்மையின் பின்னே கடவுளைப்போல ஒளிந்துகொள்கிறார்கள். பீடித்திருந்த நோய்மையோ...

பா.ராஜா கவிதைகள்

நிலுவை ஏமாற்றிடஎண்ணமில்லை.நம்பிக்கொடுத்தவர் முன்நாணயம்அரூபமாய்ச் சுழன்றுதள்ளாடுகிறது.தாமதம் வேண்டாம் எனரீங்காரமிடுகிறதுஇரவுப்பூச்சி.வாகனமில்லையேஎன்றதும்கால்கள் இருக்கிறதேஎன்கிறது.காலணி இல்லையேபாதங்களை விடச் சிறந்த காலணி ஏது.கால்களில் பெரு நோவுகைகள் இருக்கிறதே.கைகளால் எப்படி?சரி விடுசரீரத்தைப்பயன்படுத்துசாலையில் உருட்டு. • வட்ட வடிவப்பாதை விருப்பம்விருப்பமில்லைஎன்பதற்கெல்லாம் மாறாகமுந்திச்செல்லபின் சக்கரத்தால் எப்போதும் முடிவதில்லைஎன்பதே நியதிஇருந்தும்அதுதன்னை முந்தவேஇத்தனை வேகமாய்ச்சுழல்வதாய்...

இன்பா கவிதைகள்

1)நாடு மாறி நான் சிவப்புக் காதோலை கருப்பு வளையல் ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய் களக்கக் கட்டிய பூச்சரங்களென பிரப்பாங்கூடையில் எடுத்துச்சென்றுக் காவிரிக்கரையில் முழு ஆடையோடு முழுகி வெண்மணலைத் தாம்பாளங்களில் அள்ளிக்கொண்டு கரையேறும் கட்டுக்கழுத்திகள் படுகையில் வாசல் வைத்த நீள்சதுர வீடு கட்டி மஞ்சள் தோய்த்தச் சரடைக் கழுத்தில் கட்டி முடித்தபின் முகூர்த்த மாலைகள் ஆற்றில்...

எங்கட

   ஓம் தோழர். என் நெருங்கிய நண்பன் சொன்னதால் அவரைச் சந்திக்க சென்றிருந்தேன். அங்கு சென்ற போது தான் அவர் பதினைந்து வருடங்களுக்கு முன்னரே எங்கள் குடும்பத்திற்கு அறிமுகமானவரென்பது தெரிந்தது. அதன்பின் அவரிடமிருந்து...

வே.நி.சூர்யா கவிதைகள்

1.மாபெரும் அஸ்தமனம் அந்திவானில் மகத்தான ரத்தத்துளி அதன் ஒளிப்பரிவாரங்களோடு அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன் ஆ! காற்றை தீண்டுவது போல அல்லவா உள்ளது தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை வேறெதுவோ நான்.. ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே ஒருவேளை...

சாமியப்பன் – காளீஸ்வரன்

கடைசி மிடறு பிராந்தியைக் குடித்துவிட்டு ப்ளாஸ்டிக் டம்ளரைக் கசக்கி வீசினான் இளங்கோ. அலுவலக நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு பாருக்கு வெளியே வந்தான். புதிய பிராண்ட் கூடவே பீரும் என்பதால் அளவாகத்தான் குடித்திருந்தான். மிதமான போதை....

மல்லிகா

வெயில் பளபளவெனக் காய்ந்தது. செல்வியின் செம்பட்டை முடி வெய்யிலில் மினுங்கியது. வேப்பம் பழங்கள் பொறுக்குவதற்காக அவளும், கவிதாவும்  அந்தக் காட்டிற்கு வந்திருந்தனர். காற்று இல்லாததால் பழங்கள் நிறைய உதிர்ந்திருக்கவில்லை. இரண்டு மணி நேரமாகப்...

மற்றொருவன்

"பையா...." ஹெட் எடிட்டர் நாணா சார் தான் உரக்க அழைத்தார். பையா என்று அழைக்கப்பட்டவன் அப்படி ஒன்றும் சின்னப்பையன் இல்லை. குறைந்தது நாற்பதுக்கும் குறையாத வயது முன் தலையில் விழ ஆரம்பித்து விட்ட வழுக்கை,...

அருகன்

அடுப்பில் தக்காளி வதங்கும் வாசம்  கூரையின் இடுக்குகளைக் கடந்து வெளியேறியது. கூரைக்கம்புகளில் பிணைக்கப்பட்டிருந்த பாலை முடிச்சுகளில் ஒவ்வொரு நாள் சமையலின் நெடியும் பிசுக்குகளாய்த் தேங்கியிருந்தன. வதங்கிய தக்காளியுடன் மினுமினுவென சின்ன வெங்காயங்கள் புடைத்துக்...