லூயிஸ் க்ளக் கவிதைகள்

1,ஏதுமின்மையின் தனிமைஇருள் நிறைந்திருக்கிறதுமழைக்கண்ணால் பார்க்கையில் மலை தெரியவில்லைஇங்கு ஒரே மழை சத்தம்அதுதான் வாழ்வை இயக்கிக் கொண்டிருக்கிறதுமழையோடு குளிரும் சேர்ந்துவிட்டதுஇவ்விரவில் நிலவுமில்லை விண்மீன்களுமில்லைகாற்று இரவில் உயிர்கொண்டிருக்கிறதுஎல்லா காலையிலும் அதுகோதுமையைச் சாய்த்தபடி வீசிக்கொண்டிருந்ததுபிறகு நண்பகலில் நிறுத்திக்கொண்டதுஆனால்...

அமீரி பராக்கா கவிதைகள்.

சம்பவம்அவர் எங்கிருந்தோ திரும்பி வந்து சுட்டார். அவனைச் சுட்டுக் கொன்றார். அவர் திரும்பி வந்தபோது,   சுட்டார், அவன் தடுமாறினான், விழுந்தான். இருள்காட்டைக் கடந்து, கீழே, சுடப்பட்டு, இறந்துகொண்டு,  இறந்து, முற்றும் முழுமையான முடிவுக்குப்...

கதைகளால் செய்யப்பட்ட உலகம்: ம்யூரியல் ரூகெய்சரின் ‘இருளின் வேகம்’

இந்த உலகம் கதைகளால் செய்யப்பட்டிருக்கிறது,அணுக்களால் அல்ல.- ம்யூரியல் ரூகெய்சர் ('இருளின் வேகம்' கவிதையிலிருந்து).  Iயாரெல்லாம் பெண்குறிக் காம்பினை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் ஆண்குறியை வெறுக்கிறார்கள்யாரெல்லாம் ஆண்குறியை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் யோனியை வெறுக்கிறார்கள்யாரெல்லாம் யோனியை  வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம்...

மேரி ஆலிவர் கவிதைகள்

கற்களால் உணரயியலுமா?கற்களால் உணரயியலுமா?அவர்கள் தங்கள் வாழ்க்கையை நேசிக்கிறார்களா?இல்லை அவர்களின் நிதானம் எல்லாவற்றையும்அமைதியடையச் செய்துவிடுமா?நான் கடற்கரையில் நடக்கும்போதுவெள்ளை நிறத்தில், கறுப்பில் எனப்பல வண்ணங்களில் சிலவற்றைச் சேகரிக்கிறேன்.கவலைப்பட வேண்டாம், நான் உன்னைத்திரும்பவும் கொண்டு வந்து விட்டுவிடுவேன் என்கிறேன்பிறகு அவ்விதமே செய்கிறேன்.மரம் தனது பல கிளைகளைஉயர்த்தி உவகையடைகிறதே,ஒவ்வொரு கிளையும் ஒரு கவிதையைப்போலவா?முகில்கள் தங்களது மழைமூட்டையைஅவிழ்த்துவிடுவதில் மகிழ்ச்சியடைகின்றனவா?உலகத்தில் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள்,இல்லை, இல்லை, அது சாத்தியமேயில்லை என்று.நான் அத்தகைய முடிவைஎண்ணிப்பார்க்கவே மறுத்துவிட்டேன்.ஏனெனில் அது மிகப் பயங்கரமானதாக இருக்கும், மேலும் தவறாகவும்.**நான் கடற்கரைக்குச் சென்றேன்நான் காலையில் கடற்கரைக்குச் சென்றேன்நேரத்திற்கேற்ப அலைகள்வந்துபடியும் சென்றபடியும் இருந்தன,ஓ, நான் சோகமாக இருக்கிறேன்என்ன செய்யட்டும்—நான் என்ன செய்ய வேண்டும்? என்கிறேன்.தன் அழகிய குரலில் கடல் சொல்கிறது:மன்னிக்கவும், எனக்கு வேலை இருக்கிறது.**எப்போது அது நிகழ்ந்தது?எப்போது அது நிகழ்ந்தது?“நிறையக் காலத்திற்கு முன்பு”எங்கு நிகழ்ந்தது?“தூராதி தூரத்தில்”இல்லை, சொல், எங்கு நிகழ்ந்தது?“எனது இதயத்தில்”இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது உனது இதயம்?“நினைத்துப்பார்த்த படியிருக்கிறது, நினைத்துப்பார்த்தபடியிருக்கிறது!”** இந்தக் காலையில் இந்தக் காலையில்செங்குருவிகளின் முட்டைகள்பொரிந்துவிட்டன மேலும் ஏலவே குஞ்சுகள்உணவுக்காகக் கீச்சிட்டுக்கொண்டிருக்கின்றன.அவர்களுக்குத் தெரியாது உணவுஎங்கிருந்து வருகிறது என்று,வெறுமனே கத்திக்கொண்டிருக்கிறார்கள் “மேலும்! மேலும்!”வேறு எது குறித்தும்,...

சியாம் சுதாகர் கவிதைகள் (மலையாளம்) , தமிழில் யூமா வாசுகி.

மலையாளத்தின் குறிப்பிடத்தக்க இளங்கவிஞர்களில் ஒருவர் சியாம் சுதாகர். 16-10-1983-இல் பிறந்தவர். சொந்த ஊர் பாலக்காடு. இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ஈர்ப்பம் (ஈரம்) 2001-ல் வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பு அச்சிலிருக்கிறது. இளங்கவிஞர்களுக்கான வள்ளத்தோள்...

நவீன ஹிந்தி கவிதையின் பிரம்மராக்ஷஸ், கஜானன் மாதவ் முக்திபோத் ( 1917 – 1964...

கஜானன் மாதவ் முக்திபோத் ( 1917 – 1964 )ஹிந்தி நவீன கவிதையின் முகங்களில் ஒருவர் கஜானன் மாதவ் முக்திபோத்.‘சாயாவாத்’ (கற்பனைவாதம்) மரபிலிருந்து ஹிந்தி கவிதையை திசைதிருப்பிய முக்கியமான தொகுப்பு ‘தார் சப்தக்’...

ஜப்பானிலிருந்து சில கவிதைகள்

I ஷன்டாரோ தனிக்காவா (Shuntaro Tanikawa, 1931- )டோக்கியோவில் பிறந்தவர். ஜப்பானின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். அறுபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளை வெளியிட்டுள்ளார். சிறார் இலக்கியம் சார்ந்து தொடர்ச்சியாக பங்களித்துவருபவர். தனிக்காவா பெரியவர்களுக்குள் உள்ள...

ஜப்பானியக் கவிதைகள்

ஜப்பானியக் கவிதை வாசிப்பு வித்தியாசமானது. பல ஆண்டுகளின் முன்னர் ஹைக்கூ எனும் கவிதை வடிவத்தை பிரெஞ்சு மொழியில் ஆர்வமுடன் வாசித்தேன். முதல் வாசிப்பில் சுலபமானதாகத் தெரிந்தாலும், இந்தச் சிறு கவிதைகளின் முழுமையான அர்த்தத்தை...

சாகவா சிகா கவிதைகள்

மதியம்  மலர் இதழ்களைப் போன்றுமழை பொழிகிறதுஅதீத எடையினால் தாக்கப்பட்டபூச்சிகள் மரத்தின் நிழலில் வீழ்கின்றனபெரும் சுவரொன்றின் மீதானமென் பூங்காற்றின் ஒலிசூரியனால், அலைகளினால்அமுக்கப்படுகின்றன  எனது எலும்புக்கூடு அவற்றின் மீதுவெள்ளைப் பூக்களை பரப்புகிறதுஎண்ணங்கள் சிதறுபட, மீன்கள்குன்றின் மீதேறுகின்றன இருண்மை கானம்  புதிய தரைவிரிப்பின்...

மூன்று ஜப்பானியக் கவிதைகள்

1.தடா சிமாகோ (1930- )மேற்கத்திய கருத்துகளைப் படி தடா சிமாகோ மற்ற ஜப்பானிய கவிஞர்களை விட அதிகம் படித்தவராகவும், அதிக தத்துவஞானம் உடையவராகவும் கருதப்படுகிறார்.இத்துறையின் பேராசிரியர்களை தவிர ஜப்பானிய அறிவார்ந்தவர்கள், மேற்கத்திய நாடுகளில்,...