ஞா.தியாகராஜன் கவிதை

எழுந்து வந்தோம் அதன்பிறகு நான் யாருக்கும் லைனில் கிடைக்கவில்லை இருபது வருடங்கள் கழித்து புதிதாகப் பிறப்பதில் சிரமமிருக்கிறது அது சாவு போல இருந்தாலும் நீ புறப்பட்ட தருணம் போல வலிக்கவில்லை பத்து வருடங்களுக்குப் பிறகு கதவை திறக்கும்போது எதிர் வீட்டில் நீ...

தினகரன் கவிதைகள்

சற்று முன்பே பார்த்துவிட்டேன்   உடம்பு முடியாமல் கிடக்கிற அவனுடைய வீட்டிற்குப் போகிற வழியில் உதிர்ந்து என் மீது விழுந்தது பழுத்து, பச்சைக் காணாது போய் நடுநரம்பில் கடமைக்கென ஒட்டி இணைந்திருக்கும் கிளை நரம்புகளைக் கொண்டதொரு இலை. அதை உதறிவிட்டு நடந்து நடந்து இந்தக் கதவைத் தட்டினேன் இருமியபடி சட்டை அணியாமல் கதவைத் திறந்த அவனை சற்று முன்புதான் எங்கோ உதறிவிட்டது போல இருந்தது    கருணையில்லாத...

ச. துரை கவிதைகள்

  நூற்றாண்டுகளாக சுழலும் இசைத்தட்டு   . இந்த இசைத்தட்டு முடிந்ததும் யாருடைய வீட்டு கதவை தட்டப்போகிறேன் என நினைத்ததும் அச்சம் அவன் தலையை கோதியது அமர்ந்திருக்கும் இடத்தில் கடலும் எரிமலையும் முளைத்தது ஏன் இலைகள் என் மீது மட்டுமே உதிர்கின்றன என்று கத்தினான் அந்த சப்தம் எங்கேயோ நீண்டு...

பெருந்தேவி கவிதைகள்

நகரம்: சில மாதங்களுக்குப் பின் வீட்டைவிட்டு வர அனுமதிக்கப்படாத எழுபது வயது முதிய பெண்மணி நகரத்தின் மையப்பகுதியில் ஒரு பூங்காவுக்கு வருகிறாள் உடைந்த மரப்பெஞ்சில் அமர்கிறாள் காலை நேரம் சூரியனைத் தின்ன நினைக்கிறாள் அங்கே வசிப்பவர்கள் பூங்காவில் வேக வேகமாக ஆறடி விட்டு நடைப் பயிற்சி செய்கிறார்கள் ஒருவரை ஒருவர்...

ஓவியக் கவிஞன்

நினைப்பில் நானொரு ஓவியன்முன்பே சொல்லி இருக்கிறேன் அல்லவா?நிஜத்திலும் நானொரு ஓவியனாகி இருந்தால்என்னவெல்லாம் வரைந்திருப்பேன்??முதலில் என் பொம்மையாய் வரைந்து தள்ளி இருப்பேன்...அதில் எனக்கு ஒற்றை றெக்கை பூட்டி இருப்பேன்...தலையில் சேவல் கொண்டை தரித்திருப்பேன்...அன்றி, ஒரு...

கலாமோகன் கவிதைகள்

ஏன் தவம்?  இனி நான் தவங்கள்செய்யப்போவதில்லைஎமது யுகங்கள் அனைத்திலும்தூசிகள்தாம் வீடுகளைமூடும்போது… ஏன்தவம் செய்ய வேண்டும்?இனி என்னிடம்காடுகளிற்குப்போகும் எண்ணங்களும் இல்லை…கருகிய மலர்களுடன் உள்ளமரங்களைக் காணவா?மரணித்த மிருகங்கள்மேல் நடக்கவா?குடிசைகளை நோக்கிநான் விரைந்தேன்அவைகள் எரிந்து தூள்களாகி…எனது கண்ணீர்கள் மட்டும்பல...

தாமரைபாரதி கவிதைகள்

சோதனை 1. என்னைச்சோதனை செய்து பார்க்க,பரி சோதனை செய்து பார்க்க,சுய பரி சோதனை செய்து பார்க்க,என்னைத் தவிரச்சோதனை மாதிரிவேறு எது/யார்இருக்க முடியும் 2.இன்ப துன்பியல்நாடகம் இதுஇரு வேளைஇரு உணர்வுபோவதும் வருவதும்இல்லவும் உள்ளவும்ஒன்றே 3.பவளமல்லிகை உதிர்கிறதுஇளஞ்சிவப்புச் செம்பருத்தி மலர்கிறதுஒன்றில் நாற்றம்ஒன்றில்...

உதிரும் கணத்தின் மகரந்தம்.

சமீபமாக துர்நாற்றத்தை கசிந்து பரப்பிக்கொண்டிருந்த அஹமத் ஈஸாக்கின் வீட்டு பேய்க்கிணற்றை தூர் வாரத் துவங்கியது பொக்லைன் இயந்திரம் அரைகுறை ஆடைகளோடு தாதியின் தடிக்குப்பின்னிருந்து அவ்விடம் தப்பியோடிட பிரயத்தனித்ததின் பலனாய் ஹிஜாப்பை எடுத்துவர சென்ற சில நொடிகள் வாய்த்தது ஒவ்வொருமுறையும் இயந்திரத்தின் கொண்டிகளிலிருந்து சிந்தைக்கெட்டாத அசாத்திய பொருட்கள் அகப்படும்படியானது ஏழு ஆண்டுகளுக்கு...

இன்பா கவிதைகள்

தையல்காரர்கள் வீதி நடைபாதையின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருக்கிறார்கள்கால் விரல்கள் தன்னிச்சையாய்மிதித்துக்கொண்டே இருக்கின்றனபெரும்பாலும் புதுத்துணிகளையேதைக்க விரும்புகிறார்கள்பழைய கிழிந்துபோன துணிகளையாரும் தைக்கக் கொடுப்பதில்லையாரும் தைத்துப் போடுவதையும் விரும்புவதில்லைநறுக்கிப்போட்ட வானவில்லாய்வார்த்தைத் துணிகள் வெட்டப்பட்டுசுற்றிலும் சிதறிக் கிடக்கின்றனதலைக்கு மேலே மெதுவாக...

நீரை மகேந்திரன் கவிதைகள்

1. அப்பாவின் கால்கள் மரமாகி இருந்தன! அப்பாவின் கால்கள் ஆலமரம்போல உருக்கொண்டிருந்தன. அதிலிருந்து கிளை பரவியிருந்தோம் பூக்களும் கனிகளுமாக வசந்தம் கொண்ட காலத்தில் கீழவாடையின் கொடும் மின்னல்போல, துயரச் செய்தியானது அப்பாவின் இழப்பு. ஆயிரங்கரங்களில் பலங்கொண்ட மட்டும் யாரோ மரத்தை ஆட்டினார்கள் கொப்புகள் உதிர்ந்தன, கூடுகள் சிதறின, இன்றோ நாளையோ...