உமா மகேஸ்வரி கவிதைகள்
சூரியன் ஒளிரும் திரைகள்
வாகன கீதம்
நொறுங்கிய வளர் பிறை
பத்திரமாயிருக்கிறது
மல்லிகைச் சரத்தருகே
இருள் தித்திக்கும் மரங்கள்
சோம்பல் முறிக்கும் காலை
அங்கே ஏனோ பூக்காத
மஞ்சள் மலர்கள் இங்கே
எங்கெங்கும் பூத்துக் கிடக்கின்றன...உடைந்த ஒரு மனதில்
சிராய்தததோ
ஒரு சொல் சிலாம்பு
துடைத்தும் போகாதது.
இம் முறை ஒரே...
ஸ்ரீநேசன் கவிதைகள்
நினைவஞ்சல்
தபால்காரர் ஊரில் நுழைகிறார்
சைக்கிள் மணியொலிப்பில்
சார் போஸ்ட் என்ற அழைப்பிழைய
வீட்டு வாசலில் ஞாபகத்தின் புறா
நிகழைத் தொட்டுச் சிறகடிக்கிறது
கழனிக் காட்டிலிருந்தவாறு
கடிதத்தை வாங்க கைநீட்டியதும்
போன நூற்றாண்டின் கடிதத்தை
இந்த நூற்றாண்டின் கைகளில்
கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.
செல்வம் தேய்க்கும் படை
கண்ணீர்த் துளிகளின் கேவல்
உங்களைச்...
இன்பா கவிதைகள்
1)நாடு மாறி நான்
சிவப்புக் காதோலை
கருப்பு வளையல்
ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய்
களக்கக் கட்டிய பூச்சரங்களென
பிரப்பாங்கூடையில் எடுத்துச்சென்றுக்
காவிரிக்கரையில்
முழு ஆடையோடு முழுகி
வெண்மணலைத் தாம்பாளங்களில் அள்ளிக்கொண்டு
கரையேறும் கட்டுக்கழுத்திகள்
படுகையில் வாசல் வைத்த நீள்சதுர வீடு கட்டி
மஞ்சள் தோய்த்தச் சரடைக்
கழுத்தில் கட்டி முடித்தபின்
முகூர்த்த மாலைகள் ஆற்றில்...
தூரிகை
இந்த பட்டாம்பூச்சி வாழ்வை
எவ்வாறு ரசிக்கின்றது
காற்றில் மிதந்து கொண்டிருக்கும்
தும்பிகள் பட்டாம்பூச்சிக்கு வழிவிடுகின்றன
வானிலிருந்த விழுந்த மழைத்துளி
சிலையாகிவிட்ட பட்டாம்பூச்சியின்
தவத்தினை கலைத்துவிட்டது
பசிய காட்டில்
திரியும் பட்டாம்பூச்சிகள்
மனிதர்களையே பார்த்திருக்காது
பச்சை போர்த்திய இவ்வுலகம்
பட்டாம்பூச்சிகளுக்கானது
கடவுள் தனது
தூரிகை வண்ணங்களால்
பட்டாம்பூச்சியை அழகுறச் செய்கிறார்
மனிதன் சுதந்திரத்தின்
ஆனந்தத்தை அனுபவிக்க
பட்டாம்பூச்சியாகத்தான்
பிறவியெடுக்க வேண்டும்!
ப.மதியழகன்
அர்ஜூன்ராச்-கவிதைகள்
1மதிப்பிற்குரிய கல்லாப்பெட்டி அவர்கள்...தன் கண்டடைதல்களைமேல் கவனிப்பிற்குக் கொண்டுசெல்ல"நீங்கள் தான் சரி" யெனயாரை அழைப்பு விடுப்பதுயாரிடம் கத்திரியைக் கையளிப்பதுமற்றும்ரிப்பன் வெட்டித்தொடங்கச்செய்வதுதொடங்கிவைக்க ஒருவர் கிடைத்துவிடுகிறார்ரசனைகளை அளவளாவிச் சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டுநேரே கல்லாப்பெட்டியிடம் செல்கிறார்.(தொடக்கத்திலேயே இன்னமும் வாழ்ந்து...
சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்
1.சொன்னபடியே ஒரு மழைக்காலம்
ஒரு நிழலுமற்ற
நம் மரங்களும் வாடிவிட்டன
மழைக்காலம் சமீபத்தில் இருப்பதன்
அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன
நம் சிறிய இனிப்புகளை
முன்பு போலவே
பாதுகாக்க இம்முறையும் முயன்றோம்
இம்முறையும் நம் இனிப்புகள்
கரைந்துவிட்டன
சொன்னபடியே ஒரு மழைக்காலம்
பெய்யத் தொடங்கியிருக்கிறது
ஒரு நிழலுமற்ற
நம் மரங்களின் மேல்.
....
2....
கவிதைகள் மனச்சாட்சிக்குப் பக்கத்திலிருக்கின்றன.
1.
வெப்பம் பரவும் நெற்றியை விரல்கள் தேய்க்கின்றன.
காதுகளில்
வண்டொன்று சத்தமிடுகிறது.
காலங்கள்
கலைந்து தோன்றுகின்றன.
கண்கள்
நிறங்களைச் சுமக்க முடியாமல் கனக்கின்றன.
மனநிலை குழம்புவதை உணரும் எப்போதும்
சமாந்தரமாகக் காதற்பனியும் துாவுகிறது.
அச்சத்தின் கதகதப்பைப் பற்றியபடி
கள்மனம்.
மெய்யானவொன்றைத் தீரத்தீர அருந்தாததாக மறுகிய
உடல்.
இடைவெளிகளை உடைத்து விடுகின்ற
காலம்.
கற்பனைகளை அள்ளிய கைகள்...
பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்
1) காலம்போன காலம்
அதிகாலை குளிரில் அலுவலகம் கிளம்புகையில்
நாயொன்று கண்முன்னே
சாவகாசமாய்த் திரிகிறது
நாயென்றால் வெறும் நாய்
ஒரு நொடியென்பது ஒரு மணிநேரம்போல்
முன்னங்கால் நீட்டி
சோம்பல் முறிக்கும் அதன்மீது
ஏன் இவ்வளவு வன்மம் பெருக்கெடுக்கிறது
வேகமாய் வெறுங்கையை வீசுகிறேன்
நாய் கற்பனை செய்துகொண்ட அந்த...
அனார் கவிதைகள்
நீங்குதல்
எறும்புகள் பகல் கனவுகளை மொய்க்கின்றன
பின் இழுத்துச் செல்கின்றன.
தாரை தாரையாக
உருகிக் கரிக்கின்ற உப்புத்துளிகளை
காயங்களில் இருந்து குடைந்து
எடுத்துச் செல்கின்றன
மணல் புற்றுகளின் களஞ்சியங்களுக்கு
குருத்தெலும்புகளை அரித்துக் கொண்டிருந்த
வெறுமையின் உதிரத்தை மணந்து
ஒன்றுக்கொன்று கனவுக்குள் சம்பாஷித்துக் கொள்ளுகின்றன
தனக்குத்தானே தூபமிடும்
வசியமறிந்தவர்கள் அறிவார்கள்
காலத்தை தூவி...
சுஜய் ரகு கவிதைகள்
1
பித்தானவள் தொடர்ந்து
தேடிக்கொண்டே இருந்தாள்
ஒரு பஸ் நிறுத்தத்திற்கு முன்னால்
கிடந்ததாக எல்லோரும்
சொன்னார்கள்
அதைக் கேட்டு
அவள் வெடித்துச் சிரித்தாள்
மீண்டும் மீண்டும்
தொடர்ந்து சிரித்தாள்
சொன்னவர்கள் ஒருசேரத் திரும்பிப் பார்த்தார்கள்
ஒன்றுமேயில்லை
அங்கும் அதே வெடித்த சிரிப்பு
2
"ஊரே காலியாகிவிட்டது .."
எறும்புகளின் தலைவன் சொன்னான்
தலைவி
சிவந்த கொடுக்கு கொண்டு
அவனை...