தேவதேவன் கவிதைகள்
அபிநயம்அவன் எப்படித் தான் கண்டதைக்கூறாமலே தவிர்ப்பான்,இந்த உலகிற்கு,இலைகளுதிர்ந்து பட்டுப்போனகிளைச் சுள்ளி ஒன்றும்அபிநயித்ததே அதை?இளைப்பாறல்போராளிகளும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்,தோழமையின் நிழலில்.ஒவ்வொரு மனிதனையும்ஒவ்வொரு மனிதனையும்அவன் தன்னந்தனியாகவேதான்சந்திக்க விரும்புகிறான்.காதலர்கள் தங்கள் காதலர்களைத்தன்னந்தனியாகவேதானேசந்திக்க விரும்புகிறார்கள்?கடவுளும் சாத்தானும்அய்யா, நீங்கள் இந்தஇந்தியப் புண்ணிய...
பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்
சுவிட்சுகளை மனனம் செய்தல்பறவையினங்களில் இந்த மின்விசிறிதான்அமானுஷ்ய குணம்கொண்டதுபோலும் இரக்கம் கொண்டு ஒருநாள்அதைக் கூண்டிலிருந்து விடுவித்து வானத்தில் மாட்டி வைத்தேன்இப்போதுஇந்நகரத்திற்கேயான மின்விசிறியென கழுகொன்று சுழன்றுகொண்டிருக்கிறது மேலும்விசிறியை இணைக்கும் மின்-வயர்களை அது பாம்புகளென நினைத்துக்கொள்ள இந்த அபத்தத்தை நிறுத்தவேண்டிஅறையில் ஒவ்வொரு சுவிட்சாக அமர்த்தி அமர்த்தி...
பா.திருச்செந்தாழை கவிதைகள்.
ரகசியங்களற்றவனின்
நிழலில்
கண்ணாடி வளர்கிறது.எப்படியாயினும்,
இதற்கு ரகசியமெனப் பெயரிட
நான் இன்னொருவருக்கும்
இதனை தத்துக்கொடுக்க வேண்டியதிருக்கிறது.ரகசியங்கள் பெறுமதியானவை
என்பதிலிருந்து
வெளியேறிவிட்ட என் புதுவயதில்
நான் சிறிய காற்றாடிகளை
நீண்ட தொலைவில் செலுத்தும்
ஞானம் பெற்றேன்.எல்லாவற்றிலிருக்கும்
ரகசியங்களை
என் வெகுளித்தனம் சுரண்டி விலக்குகிறது.
அங்கே குருதியற்ற ஓருடல்...
முத்துராசா குமார் கவிதைகள்
எச்சித்தட்டு
புதையலாகத் தென்பட்டது
தட்டில் பொறித்தப் பெயர்.
வழித்தாலும் உட்கொள்ள முடியவில்லை.
இரவில் எப்படியும் அபகரித்துவிட
புதையலுக்கு மேலே
வனம் செய்து
நீர் தேக்கினேன்.
வனம் அழித்து வறட்சியாக்கியும்
புதையலைப் பெயர்க்க முடியவில்லை.
மூன்று வேளைத் தோல்விகள் தாளாது
பெயருடைய ஆளையே
விழுங்க எழுந்தேன்.
சுவரில் தொங்கும்
கண்ணாடிச் சட்டகத்துக்குள்
சேரில் அமர்ந்திருந்தார்...
ச.துரை கவிதைகள்
செம்மந்திகிழவி தனது விற்பனை மீன்களுக்குத்
தானாகவே புதுப் பெயரிடுவாள்
தரிசு தாண்டி சர்ச் போகும் வழியே
அந்தக் கூடையை தூக்கித்தாவென்றாள்
என்ன மீனென்று கேட்டேன்
செம்மந்தி என்றாள்
வித்தியாசமான பெயர்
உச்சரித்துக்கொண்டே கரையில் நிற்கிறேன்
அதைக் கேட்டதும் கடல் தனது உடலை
பாத்திரத்தைப் போல...
இன்பா கவிதைகள்
தையல்காரர்கள் வீதிநடைபாதையின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருக்கிறார்கள்கால் விரல்கள் தன்னிச்சையாய்மிதித்துக்கொண்டே இருக்கின்றனபெரும்பாலும் புதுத்துணிகளையேதைக்க விரும்புகிறார்கள்பழைய கிழிந்துபோன துணிகளையாரும் தைக்கக் கொடுப்பதில்லையாரும் தைத்துப் போடுவதையும் விரும்புவதில்லைநறுக்கிப்போட்ட வானவில்லாய்வார்த்தைத் துணிகள் வெட்டப்பட்டுசுற்றிலும் சிதறிக் கிடக்கின்றனதலைக்கு மேலே மெதுவாக...
பா.ராஜா கவிதைகள்
நிலுவைஏமாற்றிடஎண்ணமில்லை.நம்பிக்கொடுத்தவர் முன்நாணயம்அரூபமாய்ச் சுழன்றுதள்ளாடுகிறது.தாமதம் வேண்டாம் எனரீங்காரமிடுகிறதுஇரவுப்பூச்சி.வாகனமில்லையேஎன்றதும்கால்கள் இருக்கிறதேஎன்கிறது.காலணி இல்லையேபாதங்களை விடச் சிறந்த காலணி ஏது.கால்களில் பெரு நோவுகைகள் இருக்கிறதே.கைகளால் எப்படி?சரி விடுசரீரத்தைப்பயன்படுத்துசாலையில் உருட்டு.•வட்ட வடிவப்பாதைவிருப்பம்விருப்பமில்லைஎன்பதற்கெல்லாம் மாறாகமுந்திச்செல்லபின் சக்கரத்தால்எப்போதும் முடிவதில்லைஎன்பதே நியதிஇருந்தும்அதுதன்னை முந்தவேஇத்தனை வேகமாய்ச்சுழல்வதாய்...
இன்பா கவிதைகள்
1)நாடு மாறி நான்சிவப்புக் காதோலைகருப்பு வளையல்ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய்களக்கக் கட்டிய பூச்சரங்களெனபிரப்பாங்கூடையில் எடுத்துச்சென்றுக்காவிரிக்கரையில்முழு ஆடையோடு முழுகிவெண்மணலைத் தாம்பாளங்களில் அள்ளிக்கொண்டுகரையேறும் கட்டுக்கழுத்திகள்படுகையில் வாசல் வைத்த நீள்சதுர வீடு கட்டிமஞ்சள் தோய்த்தச் சரடைக்கழுத்தில் கட்டி முடித்தபின்முகூர்த்த மாலைகள் ஆற்றில்...
ஆனந்த் குமார் கவிதைகள்
அம்மும்மாவின் பால்கனித் தோட்டம் நிறைந்துவிட்டது.கத்தரி புதினா தக்காளி இருந்தாலும்அம்மும்மாவிற்கோ ரோஜா பைத்தியம்வளர்ந்த ஒரு ரோஜாவின்கிளைமுறித்து கிளைமுறித்துவேறுவேறு தொட்டிகளில் வளர்த்தெடுத்தாள்.இனி இடமில்லை என ஆனபின்னும்குட்டி ரோஜாத் தைகளாய் ஒடித்துஅதன் கீழேயே நட்டுவைத்தாள்.ஒரு தொட்டியில் இத்தனை நட்டால்ஒன்றுமே பிழைக்காது என்றதைஅவள் கேட்டமாதிரியில்லைகாய்ந்த ரோஜா பதியன்களுக்குதளும்பத் தளும்ப நீர் ஊற்றுகிறாள்அம்மும்மா உறங்கும் மதியவேளையில்குத்தி நிற்கும் சுள்ளிகளின் மீதுபூக்களின் நிழல்பரப்பி நிற்கிறதுபெரிய ரோஜாச்செடிஅவள் எழுந்து வந்து பார்க்கிறாள்மூட்டில் கையூன்றிஉதிர்ந்த இலைகளின் நிழல்களுக்கடியில்கண்டுபிடிக்கிறாள்இன்னுமோர் இடைவெளியை விழித்தபின் நகர் நடுவேஅந்த ஏரியைவேலியிட்டு வைத்திருந்தார்கள்.தொட்டிலுக்குள்எழுந்துவிட்ட குழந்தைபோல்கவிழ்ந்து கிடந்து உருள்கிறதது,அழவில்லை சமர்த்து. கம்பித் தடையின்றிஏரியைப் பார்க்கசுற்றி வந்தேன்.சாலை தாழும்ஒரு பழையஓடையருகேவிரல்விட்டு வெளியேமணல் அளைந்துகொண்டிருந்ததுஏரி. மலையெனக்கருதி இருளைபாதிவரை ஏறிவிட்டேன்இடரும் எதன்தலையிலும்அழுந்த மிதித்தேவந்திருக்கிறேன். வழியென்பது ஒன்றேதான்,மேலே.விடிய நான் தொட்டதுபாழ்வெளியின் பெருமூச்சு.எனக்குத் தெரியும்ஏறுவதை விட இறங்குவதுகடினமென.ஆனாலும்,மலையில்லாத உச்சியிலிருந்துஎப்படி இறங்க? ஆனந்த் குமார்தற்போது திருவனந்தபுரத்தில் குழந்தைகள் புகைப்படக் கலைஞனாக இருக்கிறார்.குறும்படங்கள் ஆவணப்படங்கள் எடுப்பதிலும் பங்காற்றி வருகிறார் . சிறார் இலக்கியம், கதை சொல்லலிலும் ஆர்வம் உண்டு.
பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்.
Bestseller வார்த்தைஒரேயொரு மன்னிப்பானது உடனிருந்தால் போதும்எதிலிருந்தும் தப்பிவிடலாமென்கிற தைரியம்ஒருவகையில் அதுவும் உண்மைதான்மன்னிப்புகள் ஒருபோதும் தீர்ந்துபோகாததுமன்னிப்புகளால் ஒருபோதும் பழசாகவும் முடியாதுவருடாவருடம் அதிகளவில் விற்றுத்தீர்கிறஅவ்வார்த்தைக்குத்தான் சந்தையில் எப்போதும் மவுசு அதிகம்பிற்பாடு தன் தேவைகள் அதிகமாவதை உணர்ந்தபின்னர்பகிரங்கமாகவே...