தாமரைபாரதி கவிதைகள்

சோதனை1.என்னைச்சோதனை செய்து பார்க்க,பரி சோதனை செய்து பார்க்க,சுய பரி சோதனை செய்து பார்க்க,என்னைத் தவிரச்சோதனை மாதிரிவேறு எது/யார்இருக்க முடியும்2.இன்ப துன்பியல்நாடகம் இதுஇரு வேளைஇரு உணர்வுபோவதும் வருவதும்இல்லவும் உள்ளவும்ஒன்றே3.பவளமல்லிகை உதிர்கிறதுஇளஞ்சிவப்புச் செம்பருத்தி மலர்கிறதுஒன்றில் நாற்றம்ஒன்றில்...

பா.ராஜா கவிதைகள்

1)இதய வடிவ பலூன். வெறுங்காலுடன் மலையுச்சியை அடைந்தது சிரமம் தான் என்றாலும் உயரப்பறக்கும் இதய வடிவிலான பலூன் கையிலிருந்ததால் பெரிதாய் ஏதும் அயற்சியில்லை அல்லது அது கூட இங்கு தூக்கிக்கொண்டு வந்திருப்பதாய் கற்பனை செய்துப் பார்க்கலாம் இதயத்தையும் கிட்டத்தட்ட அந்த பலூனைப்போல பரிசளிக்க நினைத்தால் அடிவாரத்திலிருந்தா கையை நீட்டுவது.2)கடகம். உலக புன்னகை தினம் என்று ஒன்று இருப்பதை...

உணவெனும் கலை

வாத்துகளாயிரம் அல்லிகளாய் மலர்ந்திருக்க குருவியின் சிறுமனை கிளைகளில் நிலவாய் தொங்கும் ஆற்றின் அருகமர்ந்து தீ பொசுக்கும் கறியிலிருந்து சொட்டும் எண்ணை எச்சிலாகி உடலை நனைத்த கதையைச் சொல்லியவாறு குடல், ஈரல், தொடைக்கறியென பந்தி விரித்து பாங்காய் இது பக்கோடாவென பொட்டலம் பிரித்த ததும்பும் பிரியங்களால் மாட்டுக்கறியின் ருசியை அரூரில் சுவைக்கக் கற்றேன். ஆம்பூர்,...

ஆனந்த்குமார் கவிதைகள்

சில்லறைஒரு பெரியரூபாய் நோட்டு மொத்தமும்சட்டென உடைந்துசில்லறைகளாய் மாறிவிட்டதைப்போலஒரு சின்னத் தடுக்கல்அந்த ஆளுயரக் கண்ணாடியைப்பிரித்துவிட்டதுஆயிரம் சின்ன கண்ணாடிகளாய்.ஒவ்வொரு சில்லிலும்இப்போது தெரிவதுஒரு குட்டி மிட்டாய்.சுவைத்துச் சுவைத்தாலும்ஒரு மிட்டாயின் ஆயுள்குறைந்தது இரண்டு நிமிடங்கள்.அவனது ஆளுயரம் இப்போதுஇரண்டிரண்டு குட்டி...

நிலாகண்ணன் கவிதைகள்

அவளொரு வயலினிஸ்ட்பெண்மையின் பொருள்படும் நிழலும் அன்பு திரண்ட கனியுமாக தன்னை மூடிக்கொள்ளாத அம்மரம் எப்போதும் திறந்திருந்ததுகன்னி மரியாவைப் போல அவளுடைய கண்களின் ஆழத்தில் எப்போதும் இரக்கத்தின் சொல் இருக்கும்அவள் ஒரு வயலினிஸ்ட்கிழிந்த ஆடைகளைசிறு...

ஆனந்த் குமார் கவிதைகள்

அம்மும்மாவின் பால்கனித் தோட்டம்   நிறைந்துவிட்டது.கத்தரி புதினா தக்காளி இருந்தாலும்அம்மும்மாவிற்கோ ரோஜா பைத்தியம்வளர்ந்த ஒரு ரோஜாவின்கிளைமுறித்து கிளைமுறித்துவேறுவேறு தொட்டிகளில் வளர்த்தெடுத்தாள்.இனி இடமில்லை என ஆனபின்னும்குட்டி ரோஜாத் தைகளாய் ஒடித்துஅதன் கீழேயே நட்டுவைத்தாள்.ஒரு தொட்டியில் இத்தனை நட்டால்ஒன்றுமே பிழைக்காது என்றதைஅவள் கேட்டமாதிரியில்லைகாய்ந்த ரோஜா பதியன்களுக்குதளும்பத் தளும்ப நீர் ஊற்றுகிறாள்அம்மும்மா உறங்கும் மதியவேளையில்குத்தி நிற்கும் சுள்ளிகளின் மீதுபூக்களின் நிழல்பரப்பி நிற்கிறதுபெரிய ரோஜாச்செடிஅவள் எழுந்து வந்து பார்க்கிறாள்மூட்டில் கையூன்றிஉதிர்ந்த இலைகளின் நிழல்களுக்கடியில்கண்டுபிடிக்கிறாள்இன்னுமோர் இடைவெளியை விழித்தபின் நகர் நடுவேஅந்த ஏரியைவேலியிட்டு வைத்திருந்தார்கள்.தொட்டிலுக்குள்எழுந்துவிட்ட குழந்தைபோல்கவிழ்ந்து கிடந்து உருள்கிறதது,அழவில்லை சமர்த்து. கம்பித் தடையின்றிஏரியைப் பார்க்கசுற்றி வந்தேன்.சாலை தாழும்ஒரு பழையஓடையருகேவிரல்விட்டு வெளியேமணல் அளைந்துகொண்டிருந்ததுஏரி.  மலையெனக்கருதி இருளைபாதிவரை ஏறிவிட்டேன்இடரும் எதன்தலையிலும்அழுந்த மிதித்தேவந்திருக்கிறேன். வழியென்பது ஒன்றேதான்,மேலே.விடிய நான் தொட்டதுபாழ்வெளியின் பெருமூச்சு.எனக்குத் தெரியும்ஏறுவதை விட இறங்குவதுகடினமென.ஆனாலும்,மலையில்லாத உச்சியிலிருந்துஎப்படி இறங்க? ஆனந்த் குமார்தற்போது திருவனந்தபுரத்தில் குழந்தைகள் புகைப்படக் கலைஞனாக இருக்கிறார்.குறும்படங்கள் ஆவணப்படங்கள் எடுப்பதிலும் பங்காற்றி வருகிறார் . சிறார் இலக்கியம், கதை சொல்லலிலும் ஆர்வம் உண்டு.

ஔஷதக் கூடம்

அப்பாவுக்கு புற்றுதானாம். உறுதியாகிவிட்டது. மூப்பின் பொருட்டு இரண சிகிச்சையை நிராகரித்துவிட்டார் மருத்துவர். சங்கதி தெரியாமல் பேத்தியின் பிரதாபங்களில் தோய்கிறார் அப்பா. கதாபிரசங்கியின் துடிமேளக்காரனாக அப்பாவின் பேச்சுக்கெல்லாம் பக்கத்துப் படுக்கைக்காரர் முகிழ்நகை செய்கிறார். அவரது தொண்டையில் துளையிட்டிருக்கிறார்கள்.இப்போது எப்படி இருக்கிறது? ’பரவாயில்லை’ ’காற்றோட்டமில்லை .... நல்ல படுக்கையில்லை’ ’பரவாயில்லை’ ”செவிலியர் இல்லை ......மருந்து போதவில்லை’ ’பரவாயில்லை..... பரவாயில்லை’ ’வலி மிகும்...

வாராணசி கவிதைகள்

  காலம்         இங்கே  காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று காலங்களுக்கு அப்பாலான  காலம்  இங்கே  இன்று பிறந்த இன்றும் நாளை பிறக்கும் நாளையும் பிறந்ததுமே  இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன  இங்கே  அன்றாடம் உதிக்கும் சூரியன் முதன்முதல் உதித்ததுபோலவே உதிக்கிறது முதன்முதல் மறைந்ததுபோலவே மறைகிறது  இங்கே காற்றில் எம்பும் புழுதிச்சுழலில் யுகங்களுக்கு முன்பே மலர்ந்த பூவின் மகரந்தம் மிஞ்சியிருக்கிறது.  இங்கே  ஒசிந்து...

நீலவ்னா

என் கனவு பிரதிமை நீலவ்னாதொலைதூர மலைத்தொடரில் காட்டு மிருகங்கள் இனப்பெருக்கம் செய்துகொண்டிருக்கலாம்ஆரண்யம் முயங்கும் உயிரியக்கம்பரிணாமத்தை மேலும் உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறதுவான் வெளி மண்டலத்தில் நீலம் தரித்திருக்கிறதை இப்போழ்து பார்க்க வேண்டுமே நீமகா அற்புதம் நட்சத்திரக் கூட்டு மந்தையில் தனித்து ஔிரும்...

ஓவியக் கவிஞன்

நினைப்பில் நானொரு ஓவியன்முன்பே சொல்லி இருக்கிறேன் அல்லவா?நிஜத்திலும் நானொரு ஓவியனாகி இருந்தால்என்னவெல்லாம் வரைந்திருப்பேன்??முதலில் என் பொம்மையாய் வரைந்து தள்ளி இருப்பேன்...அதில் எனக்கு ஒற்றை றெக்கை பூட்டி இருப்பேன்...தலையில் சேவல் கொண்டை தரித்திருப்பேன்...அன்றி, ஒரு...