தூரிகை

இந்த பட்டாம்பூச்சி வாழ்வை  எவ்வாறு ரசிக்கின்றது  காற்றில் மிதந்து கொண்டிருக்கும் தும்பிகள் பட்டாம்பூச்சிக்கு வழிவிடுகின்றன  வானிலிருந்த விழுந்த மழைத்துளி  சிலையாகிவிட்ட பட்டாம்பூச்சியின்  தவத்தினை கலைத்துவிட்டது  பசிய காட்டில்  திரியும் பட்டாம்பூச்சிகள்  மனிதர்களையே பார்த்திருக்காது  பச்சை போர்த்திய இவ்வுலகம்  பட்டாம்பூச்சிகளுக்கானது  கடவுள் தனது  தூரிகை வண்ணங்களால்  பட்டாம்பூச்சியை அழகுறச் செய்கிறார்  மனிதன் சுதந்திரத்தின்  ஆனந்தத்தை அனுபவிக்க  பட்டாம்பூச்சியாகத்தான்  பிறவியெடுக்க வேண்டும்!   ப.மதியழகன் 

வீடு – நான்கு கவிதைகள்

மழை நின்றுவிட்டதுகுழந்தைகள்பள்ளிக்குச் சென்றுவிட்டனர்பெரியவர்கள்வேலைக்கு கிளம்பி விட்டனர் தளர்ந்து ஆடுகின்றனகுளிருக்கு விரிந்துதாழிடமுடியாத உள்ளறைக் கதவுகள் உலகம் அடுக்கிவைத்தபொறுப்புகளின் இடுக்கிலிருந்துஇலகுவாகி வெளிவருகிறதுஇல்லம் தினம் தினம் வெளிச்சுவற்றைமுட்டிப் பார்க்கும் பட்டாம்பூச்சியேஎங்கிருக்கிறாய் நீ? இதோ பூக்கிறதுஎன் வீடு 2 தனியாக இருப்பவன் கையில்ஒரு மலரைக் கொடுத்தது போலஎனக்கு...

செல்வசங்கரன் கவிதைகள்

பழக்குதல்எங்கும் வரவில்லையென்று சொல்லிவிட்டேன்முன்னால் இருக்கின்ற காட்சியை விட்டுவிட்டுஎங்கு செல்வதுபின் அவை யாவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும்பார்த்துக் கொண்டிருப்பதற்கு எல்லாருக்கும் ஒன்று வேண்டும்பழைய சுவர்கள் பழைய ஜன்னல்கள் எனக்குமிகவும் வசதிஎத்தனை இடங்களை நபர்களை பழையதாக்கியுள்ளேன்என்னை நினைத்தாலே...

சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்

1). சாட்சியமிருக்க நேர்ந்துவிட்டது எந்த அநீதியின் பிள்ளைகள்நாங்கள்?செய்த செய்யாத எல்லாவற்றுக்கும்சாட்சியமிருந்தபடி இருந்தோம்.அந்திகள் அவசியமா?அதுபோலபகல்களும் இரவுகளும்.அறுத்தோடும் காலத்தில்எம்மீன் என் மீன்அல்லதுதூண்டிலாகும் விதியாஅறுத்தறுத்துக்கடந்தால்வழியெங்கும் மணற்பாதைகள்வெகுதூர கானலின் மயக்கங்கள். 2). தொட்டதெல்லாம் பரிபூரணமாய் நிகழ்ந்தது அழிவுமதுவிடுதிகள்வேசையர் விடுதிகள்போதை வஸ்துக்கள்காதல்கள்பணம்நீதி கோரல்கள்எல்லாவற்றையும்தாண்டிநிகழ்ந்துகொண்டிருந்தது அதுதொட்டதெல்லாம்...

கூதல்மாரி நுண்துளி தூங்கா நிலம் -லீனா மணிமேகலை

1. பொழியும் பொழியும் போதே உறையும் இறுகும் இறுக இறுக கனக்கும் உடையும் உடைந்து கீறி வாளென அறுக்கும் மிதக்கும் மிதந்து மேகதாதாகி புகையும் உறிஞ்சும் உறிஞ்சிய நிறங்களை வெண்மையாக்கித் துப்பும் நகர்த்தும் நகர்த்திய நட்சத்திரங்களிடையே கூதலை நிரப்பும் நிறையும் நிறைந்து நிலத்தைப் பாலையாக்கித் தகிக்கும் அதன் பெயர் பனியென்கிறார்கள் அதன் பெயர் நாம்   2 இந்த அதிகாலையில்...

பா.ராஜா கவிதைகள்

1)இதய வடிவ பலூன். வெறுங்காலுடன் மலையுச்சியை அடைந்தது சிரமம் தான் என்றாலும் உயரப்பறக்கும் இதய வடிவிலான பலூன் கையிலிருந்ததால் பெரிதாய் ஏதும் அயற்சியில்லை அல்லது அது கூட இங்கு தூக்கிக்கொண்டு வந்திருப்பதாய் கற்பனை செய்துப் பார்க்கலாம் இதயத்தையும் கிட்டத்தட்ட அந்த பலூனைப்போல பரிசளிக்க நினைத்தால் அடிவாரத்திலிருந்தா கையை நீட்டுவது. 2)கடகம். உலக புன்னகை தினம் என்று ஒன்று இருப்பதை...

செல்வசங்கரன் கவிதைகள்

பொன் நிற டிசைன்பண்டிகை தினத்தன்று இறந்தவன்துக்கத்தின் அளவை சிறியதாக்கினான்பெரிய பாறாங்கல் சிறிய கல்லாக மாறஒப்புக் கொள்ளாதுஅப்படி வேண்டுமென்றால் அங்கிருந்துநகர்ந்து செல்ல வேண்டும்துக்கத்திலிருந்து கிளம்பிஎல்லாரும் வெகுதூரம் சென்றனர்இறுதிஊர்வலத்தில் தான்அந்த நிகழ்வு எல்லாருக்கும் நடந்தேறியதுஒலியெழுப்பியபடி வானத்திற்குச்...

நீரை மகேந்திரன் கவிதைகள்

1. அப்பாவின் கால்கள் மரமாகி இருந்தன! அப்பாவின் கால்கள் ஆலமரம்போல உருக்கொண்டிருந்தன. அதிலிருந்து கிளை பரவியிருந்தோம் பூக்களும் கனிகளுமாக வசந்தம் கொண்ட காலத்தில் கீழவாடையின் கொடும் மின்னல்போல, துயரச் செய்தியானது அப்பாவின் இழப்பு. ஆயிரங்கரங்களில் பலங்கொண்ட மட்டும் யாரோ மரத்தை ஆட்டினார்கள் கொப்புகள் உதிர்ந்தன, கூடுகள் சிதறின, இன்றோ நாளையோ...

நுண் கவிதைகள்

காலுக்கடியில் பாதாளம். முறிந்த கிளையின் நிழலில் தொங்கும் என் சிறுபொழுது. --------- ஒரு கத்தியை செருகி வைக்க மற்றொரு கத்தியையே உறையாக்குகிறேன். --------- வாதிடாமல் குப்பைத் தொட்டியாக்குகிறேன் உன்னை. நீயும் ஒதுங்கியே நடக்கிறாய். --------- மெளனப் பந்தை உன்னிடம் உருட்டிவிடுகிறேன். அந்த விலங்கு உன்னை விளையாட்டாக்குகிறது. --------- இன்னும் கிழியாமல் கசங்காமல் ஒரு குழந்தை போட்டோ. அந்தப் பைத்தியக்காரன் வெய்யிலில் சிலுவையோடு அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான். --------- சிலுவை சுமந்தலையும் மனிதனுக்கு...

பத்மபாரதி கவிதைகள்

வழித்துணை அனாந்தர ஊஞ்சலிலிருந்து தவறி விழுந்து ஓவென்று அழுகிற அவள் சின்னஞ்சிறுமி எம்பிக்குதித்து அவள் கன்னத்தை வருடும் செல்ல நாய்க்குட்டியின் வால்சுழட்டலில் வலி கரைந்தே போகிறது சதா கோபிக்கும் அப்பா தவறவிட்ட பொற்கணங்கள் முப்பது முக்கோடி அப்படி ரகசியங்களால் வளரும் சிறுமியின் பின்னலிடையில் அம்மா சொருகிய வேப்பங்கொழுந்து பச்சை மாறாது...