வியாகுலன் கவிதைகள்

1) மூஸ் கவிதைகள் I. அந்தப் பூனை என் மடியில் படுத்திருந்தது ஒரு நிலவின் அமைதியைப் போல அந்தப் பூனைக்கு வினோதமான பெயர்கள் எல்லாம் இல்லை. மூஸ்… மூஸ்… என்றுதான் அப்பத்தா கூப்பிடுவார்கள் சுருக்கங்கள் நிறைந்த அவளது கரங்களில் விளையாடிக்கொண்டிருந்தது அந்த மூஸ்   பூனைக்கு மூஸ் என்று யார்தான் பெயரிட்டு இருப்பார்கள் அந்த மூஸ் என்ற...

சிவசங்கர். எஸ். ஜே. கவிதைகள்

1) நந்தினிக்குட்டி நத்தாருக்கு இன்னும் ஒரு வாரம் கேரல் குழுவின் வழக்கமான மார்கழி சங்கீர்த்தனங்கள் ஒவ்வொரு நாளும் நத்தார் தாத்தா நடனமாடி தாவிக்குதித்து வருகிறார் தெருவெங்கும். குழந்தைகளுக்கு மிட்டாயும் பலூனும் தருகிறார்   மாடியிலிருந்து எட்டிப்பார்க்கும் நந்தினிக்குட்டிக்கும் மிட்டாய் கிடைக்கிறது. அவளுக்கு சந்தோசமில்லை   தாத்தா நம்ம வீட்டுக்கு...

சுகுமாரன் கவிதைகள்

லியான்ஹுவாவின் காதலர் திரு. காங்க்மிங்க் ரேன் பனிக்கால நள்ளிரவில் மரணமடைந்தார் திரு. காங்க்மிங்க் ரேன் மனைவியின் இல்லத்தில் உயிர்துறந்தார். திரு. காங்க்மிங்க் ரேன் மணம் முறித்திருந்தார். திரு. காங்க்மிங்க் ரேனும் திருமதி லியான்ஹுவாவும் தனித்தனியே வாழ்ந்தனர் எனினும் இருவரும் நண்பர்களாக இருந்தனர். திரு....

மன்னிக்கவும்.

மன்னிக்கவும் இதை சொல்வதற்குள் எனக்கு 38 வயது ஆகி விட்டது. மன்னிக்கவும் முலை விடாத வயதில் உனக்கு உலகத்திலேயே யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு காட்பரீஸை மென்றுக்கொண்டே சித்தப்பா என்று சொல்லியிருக்க கூடாது தான். மன்னிக்கவும் அன்று ஏதோ சடங்குக்கு ஊருக்குப் போன சித்தியுடன் கூடவே தொற்றிக்...

வின்சென்ட் வான்கோவின் மஞ்சளும் வெண்கல மஞ்சளும்

1 இருளும் ஒளியும் சமமாய்ப் புணர்ந்த சித்திரத்தில் அவித்த உருளைக் கிழங்கைப் புசிக்கிறவர்களின் துயர விகாசம் கழுவாத வெண்கலக் கும்பா மஞ்சளுடன் கரைகஞ்சி குடிப்பவனின் மனவிலக்கம். 2 அங்கம் அறுபட்டு மரணித்த உறவின் வாய்க்குள் நினைவுப் பால் நனைத்த வீர ராயன் காசுகளாய் வின்சென்ட்டின் மஞ்சள் கறுத்த சொற்கள் கவிதைக்குள். 3 வின்சென்ட்டின் மஞ்சள் நாற்காலித் தனிமை புகையிலையும் புகைக் குழாயும் இருக்கை...

மதுசூதன் கவிதைகள்

முரண்களின் முள்வேலி. இந்தப் பெரும் பாறையை எப்படியெல்லாம் செதுக்கியிருக்கலாம் ? இரண்யனைக் கிழித்த நரசிம்மனாக, விம்மிய முலைகளோடு விளக்கேந்தும் சிலையாக, ஒரு மலைக் கோயிலுக்கு முதலிரண்டு படியாக... ஒன்றுமாகாததை யோசித்து என்ன வேலை ? இப்போதைக்கு ஒரு காகம், ஓணான் குஞ்சைக் குத்திக் கிழிக்க...

சாகிப்கிரான் கவிதைகள்

கவி நிரம்பியிருந்தது அறை. எவ்வளவு புரட்டியும் அந்த நோட்டில் ஏதுமெழுதாத பழுப்பை உற்றுப் பார்த்தான் சுவரின் ஓவியத்துள் ஒளிந்திருந்து அவன் சிரித்ததை ஒரு கணம் திரும்பி மீண்ட இவன். ஏதுமற்றது வெளி. பதில் நீதானே, உன் பெயர்தானே என்றான். ஊமையாக, செவிடாக இருந்தேன். நன்றாக குலுக்கிய ஒரு பாட்டில் போலாகாதிருக்க முயன்றேன். நான் ஒரு...

அழுகைக்கு மார்பை திருப்புதல்

இந்த வாழ்வில் என்ன இருக்கிறதென தேடினேன் என்னோடு ஒரு மருத்துவச்சியும் தேடினாள் அப்போதுதான் முதன்முறையாக சுடரைப் பெற்றெடுத்துக்கொண்டிருந்த பெண்ணுறுப்பை பார்த்தேன் அச்சு அசல் அது மாடத்தில் விளக்கெரிவதை ஒத்திருந்தது நெல்லிக்கட்டையூரிய இனிப்புக்கிணற்றின் தண்ணீரை கைகளில் அள்ளினேன் அதன் முதல் சுவாசம் பின்னப்பட்டது ஆகாசமயத்தோடு வலியும்...

குரு

சுக்ர முனிக்கு வக்ரக் கண்ணாம், இல்லை இல்லை, ஒரு கண் சாவியாம் சுர குருவுக்கோ சரியான கண்ணாம். ஆமாம் ஆமாம், புத்தியும் நேராம். பதினஞ்சு மாசி பகல் துயின்றது. வானம் பார்த்தேன், வெயிலைச் சுருட்டி வெளிச்ச வலையை வாரிச் சுருக்கி பானு மறைந்தான்....

வாராணசி கவிதைகள்

  காலம்         இங்கே   காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று  காலங்களுக்கு அப்பாலான  காலம்    இங்கே   இன்று பிறந்த இன்றும்  நாளை பிறக்கும் நாளையும்  பிறந்ததுமே   இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன    இங்கே   அன்றாடம் உதிக்கும் சூரியன்  முதன்முதல் உதித்ததுபோலவே உதிக்கிறது  முதன்முதல் மறைந்ததுபோலவே மறைகிறது    இங்கே  காற்றில் எம்பும் புழுதிச்சுழலில்  யுகங்களுக்கு முன்பே மலர்ந்த பூவின்  மகரந்தம் மிஞ்சியிருக்கிறது.    இங்கே   ஒசிந்து...