ச. துரை கவிதைகள்
நூற்றாண்டுகளாக சுழலும் இசைத்தட்டு
.
இந்த இசைத்தட்டு முடிந்ததும்
யாருடைய வீட்டு கதவை
தட்டப்போகிறேன் என நினைத்ததும்
அச்சம் அவன் தலையை கோதியது
அமர்ந்திருக்கும் இடத்தில்
கடலும் எரிமலையும் முளைத்தது
ஏன் இலைகள் என் மீது மட்டுமே
உதிர்கின்றன என்று கத்தினான்
அந்த சப்தம் எங்கேயோ நீண்டு...
ஔஷதக் கூடம்
அப்பாவுக்கு புற்றுதானாம்.
உறுதியாகிவிட்டது.
மூப்பின் பொருட்டு இரண சிகிச்சையை
நிராகரித்துவிட்டார் மருத்துவர்.
சங்கதி தெரியாமல்
பேத்தியின் பிரதாபங்களில்
தோய்கிறார் அப்பா.
கதாபிரசங்கியின் துடிமேளக்காரனாக
அப்பாவின் பேச்சுக்கெல்லாம்
பக்கத்துப் படுக்கைக்காரர்
முகிழ்நகை செய்கிறார்.
அவரது தொண்டையில்
துளையிட்டிருக்கிறார்கள்.
இப்போது எப்படி இருக்கிறது?
’பரவாயில்லை’
’காற்றோட்டமில்லை .... நல்ல படுக்கையில்லை’
’பரவாயில்லை’
”செவிலியர் இல்லை ......மருந்து போதவில்லை’
’பரவாயில்லை..... பரவாயில்லை’
’வலி மிகும்...
கு.அ.தமிழ்மொழி கவிதைகள்
1) மிதிபடும் காலம்
I.
என் அளவுக் காலணிகள் எளிதில் கிடைத்துவிடுவதில்லை என்றுதான் இவ்வளவு நாட்களாக நம்பியிருந்தேன்
நேற்று சுய்ப்ரேன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது
அதைத் தற்செயலாகப் பார்த்தேன்
அத்தனைப் பொருத்தமாக என் கால்களை அணைத்தது
ஓ! என் அன்புக் காலணியே! நீ...
உணவெனும் கலை
வாத்துகளாயிரம் அல்லிகளாய் மலர்ந்திருக்க
குருவியின் சிறுமனை
கிளைகளில் நிலவாய் தொங்கும்
ஆற்றின் அருகமர்ந்து
தீ பொசுக்கும் கறியிலிருந்து
சொட்டும் எண்ணை எச்சிலாகி
உடலை நனைத்த கதையைச் சொல்லியவாறு
குடல், ஈரல், தொடைக்கறியென
பந்தி விரித்து
பாங்காய் இது பக்கோடாவென
பொட்டலம் பிரித்த
ததும்பும் பிரியங்களால்
மாட்டுக்கறியின் ருசியை
அரூரில் சுவைக்கக் கற்றேன்.
ஆம்பூர்,...
எலுமிச்சங்கனியின் சுயசரிதையிலிருந்து சில குறிப்புகள்.
1.
சதுர வடிவப் பானையாய் மெல்ல அசைந்துகொண்டிருந்தது வீடு.
கையறு பாடல்களின் புளிப்பு
ஊறிப் பெருகி
பழங்கஞ்சியாயிருந்தது.
சோற்றுப் பருக்கைகளைப்போல
குழந்தைகள் நீந்திக் களித்தனர்.
வெளுத்தத் துணிகளின்மேல்
எச்சமிடும் காகங்கள்
மீன் செவுள்களையும்
கோழிக் குடலையும்
பானையின் தூரில் மறைத்துச் சென்றன.
மரத்தடி தெய்வங்கள்
கனிந்தனுப்பிய
எலுமிச்சம் பழங்களால்
பனங்கிழங்கு அலகுடைய செங்கால்
நாரைகள்
ஆடும் வீட்டினை
அடை...
ஸ்ரீநேசன் கவிதைகள்
சூரியனுடன் வருவேன்
நான் இங்கிருப்பேன்
இதே நேரம் ஏதோ மலையேறிப் பாதி வழியில் ஒரு பாறைமேல் தங்கியிருப்பேன்
மன்னியுங்கள் உங்களை இளங்கதிரில் வரச் சொல்லி
இப்படி எங்கென்றே தெரியாமல் எங்கேயோ போய்க் கொண்டிருப்பதற்கு
நீங்கள் பழியுரைக்கவோ நான் பொறுப்பேற்கவோ...
நகுலனின் வளர்ப்புக் கிளிகள்
1]
நகுலன் வீட்டில்
தரை வீழும்
கண்ணாடிக் கோப்பைகள்
உடைந்து நொறுங்குவதில்லை.
2]
நகுலன் வீட்டில் யாருமில்லை.
பூனைகள் பாதயாத்திரை
போய்விட்டன.
3]
நாலங்குலம் பாசம் காட்டும்
மனிதர்களைவிட
நாய்கள் மேல் என்பது
நகுலன் வாக்கு.
4]
மதுக் குப்பிகள் இல்லாத நகுலன் வீட்டில்
கவிதை காணாமல் போய்விட்டிருந்தது.
5]
புறவாசல் வரை வரும் சுசீலா
நகுலன் வீடேகுவதில்லை.
விந்தைதான்
ரோகிகள் சூழ்...
பா.ராஜா கவிதைகள்
உறங்கும் ஒருவன்.
அதிகாலை 4:43, எழுப்புகிறது
எழு ஒரு சேதி சொல்ல வேண்டுமென்று
காதோரம் கிசுகிசுக்கிறது
ஆர்வம் மேலிடவில்லை
ஒரு வீட்டை திடீரெனக் காணவில்லை பார் என்கிறது
அதற்கும் அலட்சியம்
தொலைந்த அந்த வீட்டில் தொங்கும் ஹோல்டரில்
உன்னை
காலத்திற்கும் தொங்கவிடப்போகிறேன்
என்ற போதும் கூட
அச்சமோ...
பாலை – பொதுத் திணையின் அவலம்.
1.அதிகரிக்கும் சிறுபொழுது.
காடுறை உலகில் மேகங்கள் இறங்கவில்லை
நிலத்தின் தலைமக்கள் மரம் சுமக்கிறார்கள்
சுமை மனிதனாக இருக்கும் தலைவன்
லாரி டயர்களுக்கு இடையே கண்ணயரும் தருணம்
குளம்படிச் சத்தம் கேட்டு தூக்கம் அழிகிறான்
எல்லைக்கு அப்பாலுள்ள அவன் வரும் நாள் தெரியவில்லை
இங்கு,...
பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்
சுவிட்சுகளை மனனம் செய்தல்
பறவையினங்களில் இந்த மின்விசிறிதான்
அமானுஷ்ய குணம்கொண்டதுபோலும்
இரக்கம் கொண்டு ஒருநாள்
அதைக் கூண்டிலிருந்து விடுவித்து
வானத்தில் மாட்டி வைத்தேன்
இப்போது
இந்நகரத்திற்கேயான மின்விசிறியென
கழுகொன்று சுழன்றுகொண்டிருக்கிறது
மேலும்
விசிறியை இணைக்கும் மின்-வயர்களை
அது பாம்புகளென நினைத்துக்கொள்ள
இந்த அபத்தத்தை நிறுத்தவேண்டி
அறையில் ஒவ்வொரு சுவிட்சாக
அமர்த்தி அமர்த்தி...