அல்ஹமதுலில்லாஹ்
அல்ஹமதுலில்லாஹ்
என நீ உச்சரிக்கும்போதெல்லாம்
இருவாட்சியின் பெரும்பாத நிழல்
என் மேல் கவியும்
உன் நாக்கு
மேல் அண்ணத்தை தொட்டுத் திரும்பி
பற்களில் பட்டு
உதடுகளைக் குவிக்கும்போது
பனி பிளந்து இலை குளிர்ந்து
காற்று தணியும்
மழைப் பெய்து ஓய்ந்த கடலின்
நீலம் பாய்ந்த உன் முகத்தில்
அச்சொல் பூரணமடையும் போது
பிறை தோன்றும் பின் மறையும்
இடையில் விரியும் துண்டு வானம்
எனக்கும் உனக்கும் மட்டுமே.
————————————————
பூப்பனி பெய்யும் ஒரு...
ஏதேன் காட்டின் துர்க்கந்தம்
போதையின் உச்சத்தில் சரிந்து கிடப்பதைப் போன்றதொரு சிலை, அந்த மதுக் கூடத்தின் வாயிலருகில் அமைக்கப்பட்டிருக்கும். அதன் தோரணையிலிருக்கும் லயிப்பே கிறங்கடிக்கச் செய்வதாக முன்னரும் சில முறைகள் அவனுக்குத் தோன்றியிருக்கிறது. அப்படி விழுந்து கிடப்பதில்...
நித்தியமானவன்
இரண்டு மாத வாடகை பாக்கி இருந்தது அட்வான்ஸ் தொகையில் கழித்துக் கொள்ளச் சொல்லி ‘ரூம் நண்பரிடம்’ சொல்லிவிட்டேன்.
புத்தகங்களையும், துணிமணிகளையும் மட்டும் இரண்டு அட்டைப் பெட்டிகளில் வைத்து கட்டி வைத்துக் கொண்டேன். வெவ்வேறு தருணங்களில்...
சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்
மயக்கம் தந்த பெண்
என் மேலதிகாரியாக ராமன் நாயர் இருந்தார். கடுமையான ஆள். ஒரு தடுப்புக்குப் பின்னால் அவருடைய உதவியாளனான நானும், தட்டச்சரும் அமர்ந்திருப்போம். இந்தக் கண்ணாடி அறைக்குள் வருவதற்கே கீழே உள்ளவர்கள் பயப்படுவார்கள்....
கம்மா > மடைகள் > வாமடை
கம்மா
காய்ந்த தென்னம்பாளைப் பிளவுக்குள்
தனித்தனி மழைகள் சேர்ந்து தேங்கியது
படகினுள் மிதக்கும்
சமுத்திரமென தெரிந்தது.
தளும்பும் சமுத்திரக் குட்டியென்று
எனது கையின் பதினோறாவது
குறுவிரல் வியப்பானது.
பாளையை மாதிரியாக வைத்து
சந்ததித் தொடர்ச்சியாய்
வெட்டாத நகங்களால்
சமுத்திரத்தின் குட்டியான
கம்மாவைத் தோண்டினேன்.
கருவாச்சி மடை
கொடியறுக்காத சிசுவாய்
கருவுக்குள் நானிருக்கையில்
பால்சோறு பிசையும்
கிண்ணத்தின் அளவே...
இராவணத் தீவு – பயணத் தொடர் 4
மலைக்கோவில் நோக்கி
( மாத்தளை அலுவிகாரை)
" உனக்கென விடுக்கும் சமிக்ஞைகளைத் தொடர்ந்து கொண்டே இரு "
- ரூமி
விடுதலைக்கும் , அமைதிக்குமான சமிக்ஞை எதுவாக இருக்கக்கூடும். விடுதலை உணர்வென்பது எடையற்ற பறக்கும் தன்மையானதாக நிச்சயம் இருக்க...
மரணம்
அறையின் மூலையில் மரணம் தன் கால்களைப் பரப்பியபடி நின்று கொண்டிருந்தது. அதன் கைகள் அந்தரத்தில் நீள்வாக்கில் படர்ந்திருந்தன. அது நின்றிருந்த மூலை மற்ற இடங்களை விட இருண்டும் சில்லென்றும் இருந்தது. அவ்வறையின் நடுவேயிருந்த...
நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – 6
6. காலம் எனும் மாயகண்ணாடி
நிஜம் என்னும் யதார்த்தத்தின் தளைகளைக் கடந்து போகவேண்டும் என்ற கனவே புனைவைப் பரிசளித்தது. புனைவு என்ற ஒரு வெளி தோன்றியதுமே, அதிலேறி காலத்தில் பின்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற...
பிடிமானம்
லேசான மழைதூறி இந்த மாலைப்பொழுதை ஈரப்படுத்தியிருந்தது. வானில் இருள் மேகங்கள் கலைந்து வெளிச்சம் படரத் தொடங்கிய நேரம். தவிட்டு குருவிகள் தாவித்தாவி ஈரம்படர்ந்த சிறகுகளை பொன்னொளியில் உலர்த்திக்கொண்டிருந்தன. சில்லென்ற காற்றில் மகிழம்...
குடிகாரக் கடிகாரம்
கோலப்பனுக்கு ஒரு வினோதமான மனோ வியாதி இருந்தது. அது வியாதியா அல்லது வினோதமா என்பது கோலப்பனுக்கே தெரியாது. அப்படியே தெரிந்தாலும் கூட அதை ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் கோலப்பனுக்கு இல்லாமல் போனதுதான் வினோதம்....















