படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

கம்மா > மடைகள் > வாமடை

கம்மா காய்ந்த தென்னம்பாளைப் பிளவுக்குள் தனித்தனி மழைகள் சேர்ந்து தேங்கியது படகினுள் மிதக்கும்  சமுத்திரமென தெரிந்தது. தளும்பும் சமுத்திரக் குட்டியென்று எனது கையின் பதினோறாவது  குறுவிரல் வியப்பானது. பாளையை மாதிரியாக வைத்து சந்ததித் தொடர்ச்சியாய் வெட்டாத நகங்களால் சமுத்திரத்தின் குட்டியான  கம்மாவைத் தோண்டினேன். கருவாச்சி மடை கொடியறுக்காத சிசுவாய் கருவுக்குள் நானிருக்கையில் பால்சோறு பிசையும்  கிண்ணத்தின் அளவே...

இராவணத் தீவு – பயணத் தொடர் 4

மலைக்கோவில் நோக்கி ( மாத்தளை அலுவிகாரை)   " உனக்கென விடுக்கும் சமிக்ஞைகளைத் தொடர்ந்து கொண்டே இரு " - ரூமி விடுதலைக்கும் , அமைதிக்குமான சமிக்ஞை எதுவாக இருக்கக்கூடும். விடுதலை உணர்வென்பது எடையற்ற பறக்கும் தன்மையானதாக நிச்சயம் இருக்க...

மரணம்

அறையின் மூலையில் மரணம் தன் கால்களைப் பரப்பியபடி நின்று கொண்டிருந்தது. அதன் கைகள் அந்தரத்தில் நீள்வாக்கில் படர்ந்திருந்தன. அது நின்றிருந்த மூலை மற்ற இடங்களை விட இருண்டும் சில்லென்றும் இருந்தது. அவ்வறையின் நடுவேயிருந்த...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – 6

6. காலம் எனும் மாயகண்ணாடி நிஜம் என்னும் யதார்த்தத்தின் தளைகளைக் கடந்து போகவேண்டும் என்ற கனவே புனைவைப் பரிசளித்தது. புனைவு என்ற ஒரு வெளி தோன்றியதுமே, அதிலேறி காலத்தில் பின்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற...

பிடிமானம்

  லேசான மழைதூறி இந்த மாலைப்பொழுதை ஈரப்படுத்தியிருந்தது. வானில் இருள் மேகங்கள் கலைந்து வெளிச்சம் படரத் தொடங்கிய நேரம். தவிட்டு குருவிகள் தாவித்தாவி ஈரம்படர்ந்த  சிறகுகளை பொன்னொளியில் உலர்த்திக்கொண்டிருந்தன. சில்லென்ற காற்றில் மகிழம்...

குடிகாரக் கடிகாரம்

கோலப்பனுக்கு ஒரு வினோதமான மனோ வியாதி இருந்தது. அது வியாதியா அல்லது வினோதமா என்பது கோலப்பனுக்கே தெரியாது. அப்படியே தெரிந்தாலும் கூட அதை ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் கோலப்பனுக்கு இல்லாமல் போனதுதான் வினோதம்....

கோபி கிருஷ்ணன் எனும் அன்றாட வாழ்வியலின் கதை சொல்லி

கோபி கிருஷ்ணன் கதைகளைப் பற்றி முதன் முறையாக சாரு எழுதிய கட்டுரையில்தான் படித்தேன். அதன் பிறகு வெகு காலம் கழித்தே அவருடைய கதைகள் அடங்கிய முழுத்தொகுப்பை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். முதல் கதையை...

ஈடிபஸ்

நான் சென்னைக்காரன், வகைதொகையற்றவன், கோபம் வரும்போது ங்கொம்மால என்ன என்று அம்மாவிடமே பேசுகிறவன்,எனக்கு எப்படி இவர்களின் காரியம் எல்லாம் புரிய வரும்? எங்கே தான் என்னை அழைக்கிறாய் என்று கேட்டதற்கு அவன் ஒரு...

ஊரின் அழகான ஆண்

கதிர் இப்போது ஜவ்வரிசி மில்லில் அரிசி வறுக்கிறான்.  அவன் வாழ்க்கை எந்த வித சம்பவங்களும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் எந்த வித்தியாசமும் இல்லாமல் கழிந்தபடி இருக்கிறது. ஆனால் அவன் குழந்தையாய் இருக்கும் போது...

நிலம் மூழ்கும் சாமந்திகள்

நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களைச் சந்திக்கும், பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி...