தொழுவத்து மருத்துவக் குறிப்புகள்

1 தைப்பனிக்குள் அசைந்தாடும் மாமரத்தை மேய்ந்துகொண்டிருக்கிறது மாடு சற்று தூரத்தில் சாரணத்தி வேர்களை கோணிப்பையில் சேமித்தவன் கல்லெடுத்து கிளையின்மீது எறிகிறான் அதிர்ந்து பார்த்த மாட்டின் கண்களில் செம்மஞ்சள் துவரை. சூரியன் உதிர்ந்த மாலையில் உரலைப் பின்னும் கயிறு பனிக்காலத்தில் வெடித்த மடிக்காம்புகளை நெய்யும் வெண்ணையும் துழாவும் 2 தோட்டிகுளத்தில் உலாவரும் மேகங்களை உறிஞ்சிக்...

தி.பரமேசுவரி கவிதைகள்

தப்பித்தல் அனுமதியின்றி என் வீட்டில் சிலர் என் முன்னால் அமர்ந்து உறுத்து நோக்கும் விழிகளைக் காண முடியவில்லை யாரோ என்னை வெறிக்கின்றனர் அழைக்கின்றனர் கடக்கின்றனர் அவர்களுக்கு அழுகை என்று பெயர் சூட்டினேன் தப்பிக்க முயன்றால் எப்போதும் சிக்கிக் கொள்வேன் என் உறக்கத்தைத்...

அனார் கவிதைகள்

நீங்குதல் எறும்புகள் பகல் கனவுகளை மொய்க்கின்றன பின் இழுத்துச் செல்கின்றன. தாரை தாரையாக உருகிக் கரிக்கின்ற உப்புத்துளிகளை காயங்களில் இருந்து குடைந்து எடுத்துச் செல்கின்றன மணல் புற்றுகளின் களஞ்சியங்களுக்கு குருத்தெலும்புகளை அரித்துக் கொண்டிருந்த வெறுமையின் உதிரத்தை மணந்து ஒன்றுக்கொன்று கனவுக்குள் சம்பாஷித்துக் கொள்ளுகின்றன தனக்குத்தானே தூபமிடும் வசியமறிந்தவர்கள் அறிவார்கள் காலத்தை தூவி...

கவிதைகள் மனச்சாட்சிக்குப் பக்கத்திலிருக்கின்றன.

1. வெப்பம் பரவும் நெற்றியை விரல்கள் தேய்க்கின்றன. காதுகளில் வண்டொன்று சத்தமிடுகிறது. காலங்கள் கலைந்து தோன்றுகின்றன. கண்கள் நிறங்களைச் சுமக்க முடியாமல் கனக்கின்றன. மனநிலை குழம்புவதை உணரும் எப்போதும் சமாந்தரமாகக் காதற்பனியும் துாவுகிறது. அச்சத்தின் கதகதப்பைப் பற்றியபடி கள்மனம். மெய்யானவொன்றைத் தீரத்தீர அருந்தாததாக மறுகிய உடல். இடைவெளிகளை உடைத்து விடுகின்ற காலம். கற்பனைகளை அள்ளிய கைகள்...

நேசமித்ரன் கவிதைகள்

சீசாச் சில்லுகள் சக்கர நாற்காலியொன்று நகரத்தின் மழைக்கும் சாலையை தன்னந்தனியாக கடந்து வீடு சேர்வதாய் ஓர் மன்னிப்பு திமிரின் சீசாச்சில்லுகள் பதித்த சுவர்களை பூனையின் பாதங்களுடன் கடந்து உன் அழும் முகம் அருகே நிற்கிறது கண்ணாடிக் கூம்புக்குள் எரியும் சுடர் மிக நெருங்கின மூச்சுக்கு...

ச.துரை கவிதைகள்

ஏனெனில் கைகள் தேயிலை தோட்டத்திற்கு குத்தகைவிடப்பட்டதும் சிலந்திகளோடு உறங்கி எச்சில் கோப்பைகளை கழுவுவேன் என்னிடம் அறுபது மணிநேரம் இயங்ககூடிய போதை வஸ்து இருந்தாக நம்பினார்கள் தோட்டத்திலிருக்கு சூளைக்கு மாற்றப்பட்டதும் எனது கைகள் வெட்டப்பட்டு வேறு கைகள் பொருத்தப்பட்டன யார் இந்த அந்நியனென்று கேட்ககூடாது என் உடையென்று கதறகூடாது கொஞ்சமும் பொருத்தமற்ற உணவுக்காக சட்டங்களில் மணல்களை நிரப்பி...

பாலை – பொதுத் திணையின் அவலம்.

1.அதிகரிக்கும் சிறுபொழுது.   காடுறை உலகில் மேகங்கள் இறங்கவில்லை நிலத்தின் தலைமக்கள் மரம் சுமக்கிறார்கள் சுமை மனிதனாக இருக்கும் தலைவன் லாரி டயர்களுக்கு இடையே கண்ணயரும் தருணம் குளம்படிச் சத்தம் கேட்டு தூக்கம் அழிகிறான் எல்லைக்கு அப்பாலுள்ள அவன் வரும் நாள் தெரியவில்லை இங்கு,...

காணாமல் போவது எத்தனை வசீகரமானது.

தினம் தினம் எத்தனையோ பேர் காணாமல் போகிறார்கள் குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் மனநிலை சரியில்லாதவர்கள். காணவில்லை விளம்பரங்கள் செய்தித்தாள்களில் தொடர்ந்து வருகின்றன.   அவள் மட்டும் தொலைவதே  இல்லை எங்கு போனாலும் வழி தெரிந்து விடுவது கொடுந் துயரம். காணாமல் போகக்கூட ஆணாக வேண்டும்   தொலைவதற்கு முன்பான முன்னேற்பாடுகளின் பட்டியல் நெடுஞ்சிகை மழித்தல் காயம் முற்றும் மூடும் காவி ருத்ராட்ச மாலை திருவோடு அணங்கெனும் அடையாளம் அழிந்தோர் யாக்கை ஏதோவொரு...

முத்துராசா குமார் கவிதைகள்

எச்சித்தட்டு புதையலாகத் தென்பட்டது தட்டில் பொறித்தப் பெயர். வழித்தாலும் உட்கொள்ள முடியவில்லை. இரவில் எப்படியும் அபகரித்துவிட புதையலுக்கு மேலே வனம் செய்து நீர் தேக்கினேன். வனம் அழித்து வறட்சியாக்கியும் புதையலைப் பெயர்க்க முடியவில்லை. மூன்று வேளைத் தோல்விகள் தாளாது பெயருடைய ஆளையே விழுங்க எழுந்தேன். சுவரில் தொங்கும் கண்ணாடிச் சட்டகத்துக்குள் சேரில் அமர்ந்திருந்தார்...

பா.திருச்செந்தாழை கவிதைகள்.

ரகசியங்களற்றவனின் நிழலில் கண்ணாடி வளர்கிறது. எப்படியாயினும், இதற்கு ரகசியமெனப் பெயரிட நான் இன்னொருவருக்கும் இதனை தத்துக்கொடுக்க வேண்டியதிருக்கிறது. ரகசியங்கள் பெறுமதியானவை என்பதிலிருந்து வெளியேறிவிட்ட என் புதுவயதில் நான் சிறிய காற்றாடிகளை நீண்ட தொலைவில் செலுத்தும் ஞானம் பெற்றேன். எல்லாவற்றிலிருக்கும் ரகசியங்களை என் வெகுளித்தனம் சுரண்டி விலக்குகிறது. அங்கே குருதியற்ற ஓருடல்...