அனார் கவிதைகள்
நீங்குதல்
எறும்புகள் பகல் கனவுகளை மொய்க்கின்றன
பின் இழுத்துச் செல்கின்றன.
தாரை தாரையாக
உருகிக் கரிக்கின்ற உப்புத்துளிகளை
காயங்களில் இருந்து குடைந்து
எடுத்துச் செல்கின்றன
மணல் புற்றுகளின் களஞ்சியங்களுக்கு
குருத்தெலும்புகளை அரித்துக் கொண்டிருந்த
வெறுமையின் உதிரத்தை மணந்து
ஒன்றுக்கொன்று கனவுக்குள் சம்பாஷித்துக் கொள்ளுகின்றன
தனக்குத்தானே தூபமிடும்
வசியமறிந்தவர்கள் அறிவார்கள்
காலத்தை தூவி...
தன் கல்லறையில் புரண்டு படுத்தார்
பொறியாளர் ஹென்றி வில்லியம்ஸ் தான் 1878
அந்த வாய்க்காலை
வடிவமைத்தார்.
அரசு அதை செலவு பிடித்த திட்டமென
நிராகரித்தது.
187 கி.மீ நீள
வாய்க்கால் அது.
விடாப்பிடியாக
போராடி
வாய்க்காலை
நிகழ்த்தினார் வில்லியம்ஸ்
கட்டி முடித்த ஆண்டிலிருந்து
மூல நதியில்
வெள்ளம்
பெருக்கெடுக்கவேயில்லை.
அந்நூற்றாண்டில்
செலவு கூடிய
வீணான திட்டமென
பொருளியல் வல்லுனர்கள் அதை சொல்வதுண்டு.
William's waste
என்றொரு புதிய...
வின்சென்ட் வான்கோவின் மஞ்சளும் வெண்கல மஞ்சளும்
1
இருளும் ஒளியும் சமமாய்ப் புணர்ந்த சித்திரத்தில்
அவித்த உருளைக் கிழங்கைப் புசிக்கிறவர்களின்
துயர விகாசம்
கழுவாத வெண்கலக் கும்பா மஞ்சளுடன்
கரைகஞ்சி குடிப்பவனின்
மனவிலக்கம்.
2
அங்கம் அறுபட்டு
மரணித்த உறவின்
வாய்க்குள்
நினைவுப் பால் நனைத்த
வீர ராயன் காசுகளாய்
வின்சென்ட்டின் மஞ்சள்
கறுத்த சொற்கள்
கவிதைக்குள்.
3
வின்சென்ட்டின்
மஞ்சள் நாற்காலித் தனிமை
புகையிலையும்
புகைக் குழாயும்
இருக்கை...
காத்தாடி கவிதைகள்-லீனா மணிமேகலை
கைவிடப்பட்ட மூச்சுகளைப் பிடித்துப் பிடித்துஉடலுக்குள் ஏற்றுகிறேன்ஆனாலும் எட்டு வைப்பதற்குள்தட்டையாகிவிடுகிறதுகாற்றுப் போன உடலை மூங்கிலில் கட்டி காற்றாடியாக்குகிறேன்கயிறு என் நஞ்சுக் கொடிமாஞ்சாவில் கலந்திருப்பதுஎன் எலும்புத் துகள்பசை என் ரத்தம்பறத்தலின் இடையில்வரும் தலைகள் ஏன் அறுந்து விழுகின்றனஎன்று...
வெள்ளை நிறக்காலம்.
நோயின் வாசலில் நின்று அல்லது கதவின்
மறு புறம் நின்று
அல்லது அழகான சொற்சேர்க்கையின் நடுவிலிருந்து
அவர்கள் அவனை வழியனுப்புகிறார்கள்
பழைய கிட்டாருக்கெல்லாம் உள்ளே அனுமதி கிடையாது
சுகவீனம் இழந்த தோற்றத்தை கண்ணுறும் குழந்தைகள்
அம்மையின் பின்னே கடவுளைப்போல ஒளிந்துகொள்கிறார்கள்.
பீடித்திருந்த நோய்மையோ...
செல்வசங்கரன் கவிதைகள்
பாவனை
வெறும் விரல்களை வைத்து சிகரெட் குடிப்பது போல பாவனை செய்ய
விரல்களும் என் பாவனைக்கு இணங்கி
வாய் வரை வந்து போய்க்கொண்டிருந்தது.
வாயைக் குவித்தால் தான் சிகரெட் பிடிக்கிறோமென்றே அர்த்தம்.
உள்ளே சொன்னேன்.
வெளியே வாய் வந்து குவிந்து...
அகச்சேரன் கவிதைகள்
1) தேட்டம்
பாறைகளை வெட்டி வெட்டிச் சமைத்த
மலைப்பாதையில் மேலேறுகிறேன்
சிதைக்கப்பட்ட பக்கவாட்டுப் பாறைகள்
தம் ஹீனஉடல்களால் பள்ளத்தாக்கை நோக்குகின்றன
சாலையைப் பொருட்படுத்தியதாகத்
தெரியவில்லை.
●●●
செத்தவன் பிழைத்தானெனில்
சங்கொலி நிறுத்தம்
சங்கொலி நின்றிடிலோ
சடங்குகள் முடக்கம்
சடங்குகள் முடங்கியபின்
மலர்பாடை கலைப்பு
பாடை கலைந்த பின்னர்
திரண்டவர் தளர்நடை
திரண்டவர் சென்ற தன்பின்
ஏங்குமொரு வெட்டுகுழி
●●●
...
க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்
தலைகுப்புற விழுகின்ற எண்ணெய்க் குப்பியென்ன ஒளிவிளக்கா?
விழுந்தணைந்தபின்
குப்பென்று பற்றியடங்கும்
உயிரென்ன மெல்லிய இருளா??!!
நீர் தழும்பத் திரண்டிருக்கும் கண்களை
செந்தாமரைகளென்கிறாய்
இரு புருவங்களுக்கு மத்தியில்
முழங்கு படிகத்தை வைத்தது போலிருக்கிறது
விழிக்கோளங்கள்
பாடும் கிண்ணங்களாக ஒலிக்கின்றன....
-க.சி.அம்பிகாவர்ஷினி
பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்
சுவிட்சுகளை மனனம் செய்தல்
பறவையினங்களில் இந்த மின்விசிறிதான்
அமானுஷ்ய குணம்கொண்டதுபோலும்
இரக்கம் கொண்டு ஒருநாள்
அதைக் கூண்டிலிருந்து விடுவித்து
வானத்தில் மாட்டி வைத்தேன்
இப்போது
இந்நகரத்திற்கேயான மின்விசிறியென
கழுகொன்று சுழன்றுகொண்டிருக்கிறது
மேலும்
விசிறியை இணைக்கும் மின்-வயர்களை
அது பாம்புகளென நினைத்துக்கொள்ள
இந்த அபத்தத்தை நிறுத்தவேண்டி
அறையில் ஒவ்வொரு சுவிட்சாக
அமர்த்தி அமர்த்தி...
க.மோகனரங்கன் கவிதைகள்
1)புகல்
பகல் வெளிச்சத்தில்சற்றே துலக்கமாகவும்ஆற்றவியலாத துயரமாகவும்சுமக்கமாட்டாத பாரமாகவும்தோன்றும்எனது தோல்விகள்,இயலாமைகள்,ஏக்கப் பெருமூச்சுகள்எல்லாவற்றையும்மறைத்துக் கொள்ளவோஅல்லதுமறந்தாற்போலஇருந்துவிடவோ முடிகிறஇந்த இரவுதான்எவ்வளவு ஆறுதலானது?உந்தன்கண்மைக் கருப்பிலிருந்துபிறந்து,கார்குழல் சுருளுக்குள்வளரும் இருள்தான்என் மருள் நீக்கும்மருந்து.
2) மிச்சில்
உன்னொடுஇருந்த பொழுதில்மறந்த காலம்முழுவதும்உன்னைப்பிரிந்த பிறகு,ஒன்றுக்குப் பத்தாகத்திரண்டுபூதவுருக் கொண்டுஎழுந்து வந்து,இருந்தாற் போல்இருக்கவிடாமல்மருட்டுகிறது.உறக்கம்...