உணவெனும் கலை
வாத்துகளாயிரம் அல்லிகளாய் மலர்ந்திருக்க
குருவியின் சிறுமனை
கிளைகளில் நிலவாய் தொங்கும்
ஆற்றின் அருகமர்ந்து
தீ பொசுக்கும் கறியிலிருந்து
சொட்டும் எண்ணை எச்சிலாகி
உடலை நனைத்த கதையைச் சொல்லியவாறு
குடல், ஈரல், தொடைக்கறியென
பந்தி விரித்து
பாங்காய் இது பக்கோடாவென
பொட்டலம் பிரித்த
ததும்பும் பிரியங்களால்
மாட்டுக்கறியின் ருசியை
அரூரில் சுவைக்கக் கற்றேன்.
ஆம்பூர்,...
குலாபிகளாகும் வரை நீட்டி எழுதப்பட்ட நான்கள்
முஸ்தீபு: நானின் கற்பிதம் உடையும் போது நாமனைவரும் அல்பைகள் ஆகிறோம்
அது ஒரு ஆனந்தக் களி நடனம்தான்.
நான் பேசிக்கொண்டிருக்கிறேன்
அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்
நான் பேசிக் கொண்டிருந்தேன்
அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்
அவன் பேச ஆரம்பித்தான்
எனக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது
நான் கோவமாய்...
நினைவு கொண்டிருப்பது
நினைவு கொண்டிருப்பது
இன்று மாலை
யாருமற்ற பூங்காவுக்குள் நுழையும்போது
எதிர் வரிசையில்
புன்னகையுடன் தோன்றி
முகமன் கூறுவாள்
ஒரு நாய்க்கார சீமாட்டி.
அவளைக் கடந்து
வெட்கத்தை விட்டு
ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்திருக்கும்
மரங்களின் கீழ்,
இலைகளின் படுகையின் மீது
ஓசை எழும்ப
நடைப்பயிற்சி பழகும்போது,
வழமை போலவே
தன் கவிகையில்
நிறங்களை நிறைத்தபடி
நின்று கொண்டிருக்கும்
அந்த
அழகு மரம்.
வட...
க.மோகனரங்கன் கவிதைகள்
1)அணுக்கம்
எனது
ஆயுள் பரியந்தம்
நீந்தினாலும்
கடக்கமுடியாத
கடலுக்கு அப்பால்
அக்கரையில்
நிற்கிறாய்
நீ
நினைத்தால்
நிமிடங்களில்
நீர்மேல் நடந்துவந்து
காணும்படிக்கு
இதோ
இக்கரையில்தான்
இருக்கிறேன்
நான்.
2) பிராயம்
அப்படியேதான் இருக்கிறாய்
என்பது அம்மா
எவ்வளவோ மாறிவிட்டேன்
என்கிறாள் மனைவி
தொட்டுப்பேசக் கூசுகிறான்
வளர்ந்துவிட்ட மகன்
நீயே பார்த்துக்கொள் என்று
காதோர நரையைக் காட்டுகிறது
கண்ணாடி
இடுப்பிலிருந்து
இறங்கப் பார்க்கும் கால்சட்டையை
ஒரு கையால்
இழுத்துப் பிடித்தபடி
மறுகையால்
பையில் உருளும்
கண்ணாடி கோலிகளைத்
தொட்டெண்ணும்
சிறுவன் எனது
விரலுக்குச் சிக்கியும்
மனதுக்குத் தப்பியும்
நடுவில்...
அதிரூபன் கவிதைகள்
1. நொய்யல் ஆறே நொய்யல் ஆறே (அ) தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி
வாசனை மரங்கள் நீரில் பேசிவரும் ரகஸிய மூச்சின் இழை
அதன் நாமத்தை அழைக்கும் உடம்பின் உப்பு
சிற்றாற்றுப் பொடிகளை உணவில் தூவி
காட்டைத் திரிக்க பெரிய...
தாமரைபாரதி கவிதைகள்
சோதனை
1.
என்னைச்சோதனை செய்து பார்க்க,பரி சோதனை செய்து பார்க்க,சுய பரி சோதனை செய்து பார்க்க,என்னைத் தவிரச்சோதனை மாதிரிவேறு எது/யார்இருக்க முடியும்
2.இன்ப துன்பியல்நாடகம் இதுஇரு வேளைஇரு உணர்வுபோவதும் வருவதும்இல்லவும் உள்ளவும்ஒன்றே
3.பவளமல்லிகை உதிர்கிறதுஇளஞ்சிவப்புச் செம்பருத்தி மலர்கிறதுஒன்றில் நாற்றம்ஒன்றில்...
ஆனந்த்குமார் கவிதைகள்
சில்லறை
ஒரு பெரியரூபாய் நோட்டு மொத்தமும்சட்டென உடைந்துசில்லறைகளாய் மாறிவிட்டதைப்போலஒரு சின்னத் தடுக்கல்அந்த ஆளுயரக் கண்ணாடியைப்பிரித்துவிட்டதுஆயிரம் சின்ன கண்ணாடிகளாய்.ஒவ்வொரு சில்லிலும்இப்போது தெரிவதுஒரு குட்டி மிட்டாய்.சுவைத்துச் சுவைத்தாலும்ஒரு மிட்டாயின் ஆயுள்குறைந்தது இரண்டு நிமிடங்கள்.அவனது ஆளுயரம் இப்போதுஇரண்டிரண்டு குட்டி...
ஸ்ரீவள்ளி கவிதைகள்
திருவிருந்து
விரல்கள் என நாம் நினைப்பவை நிஜத்தில்
கோரைக் கிழங்குகள்
கைகள் எனத் தரப்பட்டிருப்பவை நிஜத்தில்
காட்டுக் காளான்கள்
பயனில்லை அவற்றால்
நேசிப்பவரைத் தொடும் போது
இருப்பின் சிவப்பு மொத்தமும்
விரல்களாகித் தொட வேண்டும்
துடிக்கும் மூளைப் பிசுபிசுப்பைக்
கைகளாகக் குழைத்து அணைக்க வேண்டும்.
காதலின் பரிசுத்த...
அழுகைக்கு மார்பை திருப்புதல்
இந்த வாழ்வில் என்ன இருக்கிறதென தேடினேன்
என்னோடு ஒரு மருத்துவச்சியும் தேடினாள்
அப்போதுதான் முதன்முறையாக
சுடரைப் பெற்றெடுத்துக்கொண்டிருந்த பெண்ணுறுப்பை பார்த்தேன்
அச்சு அசல் அது
மாடத்தில் விளக்கெரிவதை ஒத்திருந்தது
நெல்லிக்கட்டையூரிய இனிப்புக்கிணற்றின் தண்ணீரை கைகளில் அள்ளினேன்
அதன் முதல் சுவாசம் பின்னப்பட்டது ஆகாசமயத்தோடு
வலியும்...
செல்வசங்கரன் கவிதைகள்
லலிதா அக்கா
எனக்குச் சின்ன வயதில் பக்கத்து வீட்டில்லலிதா அக்கா இருந்தார்எனக்குச் சின்ன வயதில் ரயிலில் மோதி அவர் இறந்து போனார்எனக்குச் சின்ன வயதில் அவருக்கு கவிதா மஞ்சு என இரண்டு மகள்கள்எனக்குச் சின்ன...