நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -4
4.சலனச் சுவரோவியங்கள்
காதல் தான் நடனமாட எடுத்துக் கொள்ளும் கலங்கள் மட்டுமே மனிதர்கள். ஒரு குறிப்பிட்ட பாலினம் எதிர் பாலினத்துடன் மட்டுமே ஈர்ப்பு கொண்டாக வேண்டும் என்பதை வழக்கம் போல பெரும்பாலான மதங்கள் கட்டுப்பாடு...
பேதமுற்ற போதினிலே – 8
உணர்தலும் அறிதலும் - 2
ஓஷோ கதை ஒன்று. தத்துவவியல் பேராசிரியர் தன் மனைவியை மனநல மருத்துவமனையில் சேர்த்திருந்தார். மனைவியின் நிலை குறித்து தலைமை மருத்துவரிடம் விசாரித்தார்.
“எங்க எல்லா நோயாளிகளுக்கும் ஒரு ஈசியான டெஸ்ட்...
ஒற்றை மனை
1
மணி ஒன்பதாகியும் மதில் வாசற்கதவில் சொருகப்பட்டிருந்த தினத்தந்தி எடுக்கப்படாமலிருந்தது. வீட்டில் ஆள் இல்லாத மாதிரியும் தெரியவில்லை. செருப்புகள் எல்லாம் கிடக்கத்தான் செய்கின்றன. கூத்தபெருமாள் இரும்புக் கொக்கியை புரட்டிப்போட்டபோது எழுந்த ‘டைங்’கென்ற சப்தத்தில் பக்கத்து...
சந்திரா தங்கராஜ் கவிதைகள்
மலைக்குத் திரும்புதல்
வரையாடுகளும் முள்ளம்பன்றிகளும்
மலைமான்களும் கரடிகளும் தந்தம் பெருத்த யானைகளும்
குதித்தாடும் மந்திகளும் கன்னிமார்சாமியும்
செந்நிறஅந்தியும் பூக்கும் மலையில் பிறந்தேன்
சுனையின் குளிர்ந்தநீர் என்னை பருவமாக்கியது
இரண்டு குன்றுகளை ஈன்றெடுத்தேன்
என் பிள்ளைகள் ஆடுகளை வளர்த்தார்கள்
பாறைப் புடவுகளில் படுத்துறங்கிய ஆடுகள்
குளிர்...
ரூஹின் யாத்திரை
இரவு பத்து மணியைக் கடந்து சில நிமிடங்களே ஆகி இருந்தன. பக்கத்துத் தெருவிலிருந்து மையத்துப் புலம்பல் கனத்த துயருடன் காற்றில் கிளம்பி வந்தது. பக்குல் கத்தியிராத இராப் பொழுதாக அது இருந்தாலும் மரணம்...
வலசை தொலைத்த யானை
இன்னிக்கு சுதந்திர தினமாம். காலையில இருந்து ஏழெட்டு முறை கேட்டாச்சு. ஏதோ உயரதிகாரி வராராம். அவருக்கு முன்னால என்ன பண்ணனும், எப்படி பண்ணனும்னு முருகனும், மணியும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. முகாம் களைகட்டி இருந்துச்சு....
துர்ஷினியின் பிரவேசம்
(இது ஒரு ஆன்ட்ராய்டு கதை)
இப்படியெல்லாம் நடக்குமா? நம்பவே முடியவில்லை. ஆனாலும் நம்பித்தான் ஆக வேண்டும். காற்றை விட வேகவேகமாக செய்திகள் பரவியது. முதலில் யாருக்கும் தெரியாமல்தான் இருந்தது. ஆனாலும் இப்படியொரு செய்தி எப்படித்...
எழுத்துக்களில் கரைந்த நிழல்கள்
பொதுவாக சிறுகதைகளுக்கான கதைவெளி சாத்தியங்கள் நாவல்களுக்கு வாய்க்கப் பெறுவதில்லை. காரணம் சிறுகதைகளால் ஒரு சிறு நினைவுகளைக் கூட களமாகக் கொண்டு இயங்க முடிகிறது. ஆனால் நாவல்கள் குறைந்தபட்சம் அந்த நினைவுகள் உறைந்துள்ள வெளியை...
கட்டக்கால் வேட்டை
தேர்ந்த விளையாட்டு வீரனின் சாயலில் வேல் கம்பையெடுத்து,
முடி முளைத்த ராத்திரியென ஓடும் தடிபன்றியின் முன்னெஞ்சுக்கு குறிவைத்து எறிகிறேன்.
கூரினை நெளித்துப்போட்டு வேகமெடுக்கிறது.
தலைக்கு வீசிய ஐந்தாறு
வெங்காய வெடிகளுக்கும்
பாய்ச்சல் குறையவில்லை.
பின்னால் கேட்கும்
குட்டிகளின் அலறலுக்கு
வெறிவீறிட திரும்பிய பன்றி
எனை மல்லாத்திவிட்டு
ஈரிரண்டு...
ச.துரை கவிதைகள்
செம்மந்தி
கிழவி தனது விற்பனை மீன்களுக்குத்
தானாகவே புதுப் பெயரிடுவாள்
தரிசு தாண்டி சர்ச் போகும் வழியே
அந்தக் கூடையை தூக்கித்தாவென்றாள்
என்ன மீனென்று கேட்டேன்
செம்மந்தி என்றாள்
வித்தியாசமான பெயர்
உச்சரித்துக்கொண்டே கரையில் நிற்கிறேன்
அதைக் கேட்டதும் கடல் தனது உடலை
பாத்திரத்தைப் போல...















