நுண் கவிதைகள்
காலுக்கடியில்
பாதாளம்.
முறிந்த கிளையின் நிழலில்
தொங்கும் என் சிறுபொழுது.
---------
ஒரு கத்தியை
செருகி வைக்க
மற்றொரு கத்தியையே உறையாக்குகிறேன்.
---------
வாதிடாமல்
குப்பைத் தொட்டியாக்குகிறேன்
உன்னை.
நீயும் ஒதுங்கியே நடக்கிறாய்.
---------
மெளனப் பந்தை உன்னிடம்
உருட்டிவிடுகிறேன்.
அந்த விலங்கு
உன்னை விளையாட்டாக்குகிறது.
---------
இன்னும் கிழியாமல்
கசங்காமல்
ஒரு குழந்தை போட்டோ.
அந்தப் பைத்தியக்காரன்
வெய்யிலில் சிலுவையோடு
அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான்.
---------
சிலுவை சுமந்தலையும்
மனிதனுக்கு...
பயோ வார்
இறக்கப்போகிறேன்
எதனால் இறப்பேன் என்பதை
அறிந்து விடுபடுதல் ஆகத்துயரம்
உங்களிடம் சொல்லிப் போகிறேன்
பிறந்து ஒருவாரமான பச்சிளம்குழந்தையை
விட்டுப் போகிறேன்.
விரிசலில்லாத பழுத்தக் காதலை
விரிந்த மேகத்தில் பதித்து
மெல்ல மெல்ல கனிச்சாறு
என் இதயத் திரட்சியில் கனக்கச் செய்த
காதல் கணவரை விட்டுப்போகிறேன்.
கரம்கொடுப்பேன் என மூளையின்
சிவந்த...
தன் கல்லறையில் புரண்டு படுத்தார்
பொறியாளர் ஹென்றி வில்லியம்ஸ் தான் 1878
அந்த வாய்க்காலை
வடிவமைத்தார்.
அரசு அதை செலவு பிடித்த திட்டமென
நிராகரித்தது.
187 கி.மீ நீள
வாய்க்கால் அது.
விடாப்பிடியாக
போராடி
வாய்க்காலை
நிகழ்த்தினார் வில்லியம்ஸ்
கட்டி முடித்த ஆண்டிலிருந்து
மூல நதியில்
வெள்ளம்
பெருக்கெடுக்கவேயில்லை.
அந்நூற்றாண்டில்
செலவு கூடிய
வீணான திட்டமென
பொருளியல் வல்லுனர்கள் அதை சொல்வதுண்டு.
William's waste
என்றொரு புதிய...
சுஜா கவிதைகள்
வாழ்ந்தென்ன?
தரையில் கையூன்றி எழுந்தவாறே
எதிர்ச்சுவர்க் கடிகாரத்தைப் பார்க்கிறாள்.
மாலை நான்கு
நல்ல நேரம்தான்
யாருக்கும் அகாலத் தொந்தரவாகாத நேரம்
வீடு திரும்பும்போது செய்தியாகக் காதை எட்டும்.
அள்ளி முடிந்து கொண்டையிட்டு
வாசற்கதவைத் திறக்கிறாள்.
மேல்மாடிக்குச் சென்று குதித்துவிட்டால்
அவ்வளவுதான்
முடிந்தது.
வழக்கம்போல் தடுக்கிவிடாமல் இருக்க
சற்றே தூக்கிப் பிடித்தபடி
படிக்கட்டில் கால்...
மூட்டைப்பூச்சிகள்
இன்று இரவுதான் முதன் முதலாக அந்த கட்டிலிலிருந்த மூட்டைப்பூச்சிகள் அவரை கடிக்கத் தொடங்கின. எத்தனை அசதியில் தூங்கினாலும் அவருக்கு முழுமையான தூக்கம் கிடைப்பதில்லை.
இரண்டாம் லயன் பதினெட்டாவது வீடு (எண் கொஞ்சம்...
மாபெரும் நாவல் குறைதீர்ப்பு முகாம்
சன்னமான காற்றில் அலைந்துக்கொண்டிருந்த புளிய மரத்திலிருந்து, அதன் நிழலில் மரப்பலகையில் ஒட்டியிருந்த மைக்கா பெயர்ந்து விந்தையான நிலப்பரப்பின் வரைபடங்களை உருவாக்கியபடி இருந்த துருவேறிய பழைய இரும்பு மேசையில் கைவைத்தப்படி நின்று சூனியத்தை வெறித்துக்கொண்டிருந்த...
பாலியல் குறித்தான தமிழ்ச்சமூக வெளி
மனிதன் எந்தச் சூழலிலும் ஒரு பாலியல் விலங்கு தான்
- (க. பஞ்சாங்கம்,ப.40)
நீண்ட நெடிய சமூகப் பின்புலமும் இலக்கியப் பின்புலமும் கொண்ட தமிழ்ச் சமூக வெளியில்,...
தமிழ்ச் சிறுகதைகளில் இஸ்லாமிய மக்களின் வாழ்வியல்.
இலக்கியத்தில் ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு விதமான மனவெழுச்சி உண்டாக்க வல்லது. அதில் எது சிறந்தது என்று வகைப்படுத்துவது இலக்கியத்துக்கும் நல்லதல்ல மொழிக்கும் நல்லதல்ல. அதது அதனதன் பணியை அதன் போக்கில் செய்கின்றது. ஒரு...
இராவணத் தீவு – பயணத் தொடர் 1
ஆதாம் மலை
ஒரு சிறு பூவை
நீ அசைத்தால்
ஒரு நட்சத்திரம்
அணைந்து போகலாம்
என்றான் பிரான்சிஸ் தொம்ஸன். ஒரு நாளில் ஆயிரக் கணக்கில் சிவனொளிபாதமலையை நோக்கி வருகின்ற பட்டாம்பூச்சிகளின் சிறு அசைவு, அந்த இரவு முழுவதும் பரவி...
நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -2
2.கொடுமுடியுச்சி.
ஆணின் தனிமையும் பெண்ணின் தனிமையும் வெவ்வேறானவை. பெண்ணின் தனிமை உடைமை போல, பொக்கிசம் போல சொந்தம் கொண்டாடப்படுகின்ற, காவலுக்குட்பட்ட தனிமை. ஆனால் ஆணின் தனிமை என்பது நிர்கதி. இன்னும் சொல்லப் போனால் பெண்...















