தி.பரமேசுவரி கவிதைகள்
தப்பித்தல்
அனுமதியின்றி என் வீட்டில் சிலர்
என் முன்னால் அமர்ந்து உறுத்து நோக்கும் விழிகளைக் காண முடியவில்லை
யாரோ என்னை வெறிக்கின்றனர்
அழைக்கின்றனர்
கடக்கின்றனர்
அவர்களுக்கு அழுகை என்று பெயர் சூட்டினேன்
தப்பிக்க முயன்றால் எப்போதும் சிக்கிக் கொள்வேன் என் உறக்கத்தைத்...
அனார் கவிதைகள்
நீங்குதல்
எறும்புகள் பகல் கனவுகளை மொய்க்கின்றன
பின் இழுத்துச் செல்கின்றன.
தாரை தாரையாக
உருகிக் கரிக்கின்ற உப்புத்துளிகளை
காயங்களில் இருந்து குடைந்து
எடுத்துச் செல்கின்றன
மணல் புற்றுகளின் களஞ்சியங்களுக்கு
குருத்தெலும்புகளை அரித்துக் கொண்டிருந்த
வெறுமையின் உதிரத்தை மணந்து
ஒன்றுக்கொன்று கனவுக்குள் சம்பாஷித்துக் கொள்ளுகின்றன
தனக்குத்தானே தூபமிடும்
வசியமறிந்தவர்கள் அறிவார்கள்
காலத்தை தூவி...
கவிதைகள் மனச்சாட்சிக்குப் பக்கத்திலிருக்கின்றன.
1.
வெப்பம் பரவும் நெற்றியை விரல்கள் தேய்க்கின்றன.
காதுகளில்
வண்டொன்று சத்தமிடுகிறது.
காலங்கள்
கலைந்து தோன்றுகின்றன.
கண்கள்
நிறங்களைச் சுமக்க முடியாமல் கனக்கின்றன.
மனநிலை குழம்புவதை உணரும் எப்போதும்
சமாந்தரமாகக் காதற்பனியும் துாவுகிறது.
அச்சத்தின் கதகதப்பைப் பற்றியபடி
கள்மனம்.
மெய்யானவொன்றைத் தீரத்தீர அருந்தாததாக மறுகிய
உடல்.
இடைவெளிகளை உடைத்து விடுகின்ற
காலம்.
கற்பனைகளை அள்ளிய கைகள்...
வெள்ளை விழிகள்
1
மியான்மார் எல்லையில் அமைந்துள்ள தாய்லாந்தின் மேற்கு மாநிலமான தக் பிரதேசத்தின் மைலாவை நான் சென்றடைந்தபோது இருள் முழுவதுமாக கவிழ்ந்திருந்தது. வளைந்து நுழைந்து மேடுகளின் வழியாக நீண்டு கிடக்கும் சரிவுப்பாதையில் ஓடிவந்த சிவப்பு நிற...
தமிழடி
உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்
புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்
தான் வாட, வாடாத தன்மைத்தே-தென்னவன்
நான்மாடக் கூடல் நகர். - பரிபாடல்
நல்லிசைப்புலவர்கள் தமது அறிவாகிய துலாக்கோலாலே, இவ்வுலகத்தேயுள்ள நகரங்கள்...
வீரயுக நாயகன் வேள்பாரி – வாசிப்பு அனுபவம்
பாரியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைக் கூறுங்கள் என்று யாரேனும் உங்களைக் கேட்டால் உங்களது பதில் என்னவாக இருக்கும்? முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் என்பதாகத் தானே? கடந்த வாரம் வரை என்னை யாரேனும்...
கலண்டரில் உட்காரும் புலி – கவிதைத் தொகுப்பு
சொற்களின் வேட்டை
அதிக பட்சமாக ரசனையைக்கொடுக்கும் சொற்களின் மெல்லிய போதையும், விஞ்ஞானத்தனமான விநோத நுட்பமும், கணிதவியல் புதிர்களை விடுவிப்பதும் வேற்று விடையோடு தனியே அவதிப்படவைக்கும் சுகமான அனுபவத்தை சுவைபடப் பேசி நிற்கின்றது கலண்டரில்...
எஸ்.ரா பொருட்படுத்தப்படாத, எளிய மனிதர்களின் ஆத்மா!
மனிதர்கள் விசித்திரமானவர்கள், உன்னதமானவர்கள் எந்த நொடி பிறழ்வடைவார்கள், கனிவார்கள், அரக்கர்களாக மாற்றம் பெறுவார்கள் என்று யாராலும் சொல்லவே முடியாது.
இலக்கியத்தை பொறுத்த மட்டில் கதை, கவிதை, நாவல் என பல வடிவங்களில் மனித வாதைகளையும்,...
செந்துவர் வாய்
அந்த நகரம் வாய்களால் நிறைந்திருந்தது. தடித்த உதடுகளுடைய வாய்கள், தலை குனிந்தபடி மேய்ந்து கொண்டிருக்கும் பசுமாட்டிலிருந்து அறுத்துப் போட்ட சூடான மாமிசத்தைச் சிறிய கூர்கத்தியால் கீறி முகத்தின்மீது ஒட்டவைத்தது போன்ற மெல்லிய சிவந்த...
தலைப்புச்செய்தி
இரவு உணவுக்குப் பின்னர் சோபாவில் உட்கார்ந்து அரைத் தூக்கத்தில் கரகம் ஆடிக் கொண்டிருந்தான் சுதாகரன். எதிர்ச்சுவரில் மாட்டியிருந்த தொலைக்காட்சியில் நின்றபடி தலைப்புச் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தாள் ஜீன்சும் டீசர்ட்டும் அணிந்த இளம் பெண்....















