கட்டக்கால் வேட்டை
தேர்ந்த விளையாட்டு வீரனின் சாயலில் வேல் கம்பையெடுத்து,
முடி முளைத்த ராத்திரியென ஓடும் தடிபன்றியின் முன்னெஞ்சுக்கு குறிவைத்து எறிகிறேன்.
கூரினை நெளித்துப்போட்டு வேகமெடுக்கிறது.
தலைக்கு வீசிய ஐந்தாறு
வெங்காய வெடிகளுக்கும்
பாய்ச்சல் குறையவில்லை.
பின்னால் கேட்கும்
குட்டிகளின் அலறலுக்கு
வெறிவீறிட திரும்பிய பன்றி
எனை மல்லாத்திவிட்டு
ஈரிரண்டு...
ச.துரை கவிதைகள்
செம்மந்திகிழவி தனது விற்பனை மீன்களுக்குத்
தானாகவே புதுப் பெயரிடுவாள்
தரிசு தாண்டி சர்ச் போகும் வழியே
அந்தக் கூடையை தூக்கித்தாவென்றாள்
என்ன மீனென்று கேட்டேன்
செம்மந்தி என்றாள்
வித்தியாசமான பெயர்
உச்சரித்துக்கொண்டே கரையில் நிற்கிறேன்
அதைக் கேட்டதும் கடல் தனது உடலை
பாத்திரத்தைப் போல...
பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்
1.) கெடாவெட்டுதல்
இந்த வருடம் அவ்வீட்டில் நிச்சயமாய் ஒரு உயிர் போகுமென்கிறதுஒப்புக்கொடுக்காமல் நிற்கும் கிடா.முதியவருக்கோ இன்னும் கொஞ்சநாள் இருக்கலாமெனத் தோன்றுகிறதுஒருவேளை அது குறிப்பது என்னைத்தானோ என பயத்திலொரு உதைவிட்டதுவயிற்றிலிருக்கும் சிசுச்சே… ச்சே…நாம் வளர்த்த ஆடு அவ்வளவு...
பத்மபாரதி கவிதைகள்
வழித்துணைஅனாந்தர ஊஞ்சலிலிருந்து
தவறி விழுந்து ஓவென்று
அழுகிற அவள் சின்னஞ்சிறுமி
எம்பிக்குதித்து அவள் கன்னத்தை வருடும்
செல்ல நாய்க்குட்டியின் வால்சுழட்டலில்
வலி கரைந்தே போகிறது
சதா கோபிக்கும் அப்பா
தவறவிட்ட பொற்கணங்கள் முப்பது முக்கோடி
அப்படி ரகசியங்களால்
வளரும் சிறுமியின் பின்னலிடையில்
அம்மா சொருகிய வேப்பங்கொழுந்து
பச்சை மாறாது...
பறவைக்கோணம்
இந்தப் பறவைக்கு இந்த மலை புதிது
சமவெளியில் அதற்கென இருந்த காடு
மரங்களை அகற்றிய பிறகு எரியூட்டப்பட்டதும்
பழகியிராத மலை நோக்கி உயரப் பறந்தது
இறகுகள் ஒத்துழைக்கவில்லை
மலையின் காலடியில் தனித்து நின்றது.——
இரண்டு பாறைகளை சற்று அகற்றி
மலையேறும் பாதையைத்
திருத்தியிருந்தான் பாணன்
மந்தியின்...
ஸ்ரீவள்ளி கவிதைகள்
திருவிருந்துவிரல்கள் என நாம் நினைப்பவை நிஜத்தில்
கோரைக் கிழங்குகள்
கைகள் எனத் தரப்பட்டிருப்பவை நிஜத்தில்
காட்டுக் காளான்கள்
பயனில்லை அவற்றால்
நேசிப்பவரைத் தொடும் போது
இருப்பின் சிவப்பு மொத்தமும்
விரல்களாகித் தொட வேண்டும்
துடிக்கும் மூளைப் பிசுபிசுப்பைக்
கைகளாகக் குழைத்து அணைக்க வேண்டும்.
காதலின் பரிசுத்த...
நுண் கவிதைகள்
காலுக்கடியில்
பாதாளம்.
முறிந்த கிளையின் நிழலில்
தொங்கும் என் சிறுபொழுது.---------ஒரு கத்தியை
செருகி வைக்க
மற்றொரு கத்தியையே உறையாக்குகிறேன்.---------வாதிடாமல்
குப்பைத் தொட்டியாக்குகிறேன்
உன்னை.
நீயும் ஒதுங்கியே நடக்கிறாய்.---------மெளனப் பந்தை உன்னிடம்
உருட்டிவிடுகிறேன்.
அந்த விலங்கு
உன்னை விளையாட்டாக்குகிறது.---------இன்னும் கிழியாமல்
கசங்காமல்
ஒரு குழந்தை போட்டோ.
அந்தப் பைத்தியக்காரன்
வெய்யிலில் சிலுவையோடு
அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான்.---------சிலுவை சுமந்தலையும்
மனிதனுக்கு...
பயோ வார்
இறக்கப்போகிறேன்
எதனால் இறப்பேன் என்பதை
அறிந்து விடுபடுதல் ஆகத்துயரம்
உங்களிடம் சொல்லிப் போகிறேன்
பிறந்து ஒருவாரமான பச்சிளம்குழந்தையை
விட்டுப் போகிறேன்.
விரிசலில்லாத பழுத்தக் காதலை
விரிந்த மேகத்தில் பதித்து
மெல்ல மெல்ல கனிச்சாறு
என் இதயத் திரட்சியில் கனக்கச் செய்த
காதல் கணவரை விட்டுப்போகிறேன்.
கரம்கொடுப்பேன் என மூளையின்
சிவந்த...
தன் கல்லறையில் புரண்டு படுத்தார்
பொறியாளர் ஹென்றி வில்லியம்ஸ் தான் 1878
அந்த வாய்க்காலை
வடிவமைத்தார்.அரசு அதை செலவு பிடித்த திட்டமென
நிராகரித்தது.
187 கி.மீ நீள
வாய்க்கால் அது.விடாப்பிடியாக
போராடி
வாய்க்காலை
நிகழ்த்தினார் வில்லியம்ஸ்கட்டி முடித்த ஆண்டிலிருந்து
மூல நதியில்
வெள்ளம்
பெருக்கெடுக்கவேயில்லை.அந்நூற்றாண்டில்
செலவு கூடிய
வீணான திட்டமென
பொருளியல் வல்லுனர்கள் அதை சொல்வதுண்டு.William's waste
என்றொரு புதிய...
சுஜா கவிதைகள்
வாழ்ந்தென்ன?
தரையில் கையூன்றி எழுந்தவாறே
எதிர்ச்சுவர்க் கடிகாரத்தைப் பார்க்கிறாள்.
மாலை நான்கு
நல்ல நேரம்தான்
யாருக்கும் அகாலத் தொந்தரவாகாத நேரம்
வீடு திரும்பும்போது செய்தியாகக் காதை எட்டும்.
அள்ளி முடிந்து கொண்டையிட்டு
வாசற்கதவைத் திறக்கிறாள்.
மேல்மாடிக்குச் சென்று குதித்துவிட்டால்
அவ்வளவுதான்
முடிந்தது.வழக்கம்போல் தடுக்கிவிடாமல் இருக்க
சற்றே தூக்கிப் பிடித்தபடி
படிக்கட்டில் கால்...