பத்மபாரதி கவிதைகள்

வழித்துணை அனாந்தர ஊஞ்சலிலிருந்து தவறி விழுந்து ஓவென்று அழுகிற அவள் சின்னஞ்சிறுமி எம்பிக்குதித்து அவள் கன்னத்தை வருடும் செல்ல நாய்க்குட்டியின் வால்சுழட்டலில் வலி கரைந்தே போகிறது சதா கோபிக்கும் அப்பா தவறவிட்ட பொற்கணங்கள் முப்பது முக்கோடி அப்படி ரகசியங்களால் வளரும் சிறுமியின் பின்னலிடையில் அம்மா சொருகிய வேப்பங்கொழுந்து பச்சை மாறாது...

பறவைக்கோணம்

இந்தப் பறவைக்கு இந்த மலை புதிது சமவெளியில் அதற்கென இருந்த காடு மரங்களை அகற்றிய பிறகு எரியூட்டப்பட்டதும் பழகியிராத மலை நோக்கி உயரப் பறந்தது இறகுகள் ஒத்துழைக்கவில்லை மலையின் காலடியில் தனித்து நின்றது. —— இரண்டு பாறைகளை சற்று அகற்றி மலையேறும் பாதையைத் திருத்தியிருந்தான் பாணன் மந்தியின்...

ஸ்ரீவள்ளி கவிதைகள்

திருவிருந்து விரல்கள் என நாம் நினைப்பவை நிஜத்தில் கோரைக் கிழங்குகள் கைகள் எனத் தரப்பட்டிருப்பவை நிஜத்தில் காட்டுக் காளான்கள் பயனில்லை அவற்றால் நேசிப்பவரைத் தொடும் போது இருப்பின் சிவப்பு மொத்தமும் விரல்களாகித் தொட வேண்டும் துடிக்கும் மூளைப் பிசுபிசுப்பைக் கைகளாகக் குழைத்து அணைக்க வேண்டும். காதலின் பரிசுத்த...

நுண் கவிதைகள்

காலுக்கடியில் பாதாளம். முறிந்த கிளையின் நிழலில் தொங்கும் என் சிறுபொழுது. --------- ஒரு கத்தியை செருகி வைக்க மற்றொரு கத்தியையே உறையாக்குகிறேன். --------- வாதிடாமல் குப்பைத் தொட்டியாக்குகிறேன் உன்னை. நீயும் ஒதுங்கியே நடக்கிறாய். --------- மெளனப் பந்தை உன்னிடம் உருட்டிவிடுகிறேன். அந்த விலங்கு உன்னை விளையாட்டாக்குகிறது. --------- இன்னும் கிழியாமல் கசங்காமல் ஒரு குழந்தை போட்டோ. அந்தப் பைத்தியக்காரன் வெய்யிலில் சிலுவையோடு அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான். --------- சிலுவை சுமந்தலையும் மனிதனுக்கு...

பயோ வார்

இறக்கப்போகிறேன் எதனால் இறப்பேன் என்பதை அறிந்து விடுபடுதல் ஆகத்துயரம் உங்களிடம் சொல்லிப் போகிறேன் பிறந்து ஒருவாரமான பச்சிளம்குழந்தையை விட்டுப் போகிறேன். விரிசலில்லாத பழுத்தக் காதலை விரிந்த மேகத்தில் பதித்து மெல்ல மெல்ல கனிச்சாறு என் இதயத் திரட்சியில் கனக்கச் செய்த காதல் கணவரை விட்டுப்போகிறேன். கரம்கொடுப்பேன் என மூளையின் சிவந்த...

தன் கல்லறையில் புரண்டு படுத்தார்

பொறியாளர் ஹென்றி வில்லியம்ஸ் தான் 1878 அந்த வாய்க்காலை வடிவமைத்தார். அரசு அதை செலவு பிடித்த திட்டமென நிராகரித்தது. 187 கி.மீ நீள வாய்க்கால் அது. விடாப்பிடியாக போராடி வாய்க்காலை நிகழ்த்தினார் வில்லியம்ஸ் கட்டி முடித்த ஆண்டிலிருந்து மூல நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கவேயில்லை. அந்நூற்றாண்டில் செலவு கூடிய வீணான திட்டமென பொருளியல் வல்லுனர்கள் அதை சொல்வதுண்டு. William's waste என்றொரு புதிய...

சுஜா கவிதைகள்

வாழ்ந்தென்ன? தரையில் கையூன்றி எழுந்தவாறே எதிர்ச்சுவர்க் கடிகாரத்தைப் பார்க்கிறாள். மாலை நான்கு நல்ல நேரம்தான் யாருக்கும் அகாலத் தொந்தரவாகாத நேரம் வீடு திரும்பும்போது செய்தியாகக் காதை எட்டும். அள்ளி முடிந்து கொண்டையிட்டு வாசற்கதவைத் திறக்கிறாள். மேல்மாடிக்குச் சென்று குதித்துவிட்டால் அவ்வளவுதான் முடிந்தது. வழக்கம்போல் தடுக்கிவிடாமல் இருக்க சற்றே தூக்கிப் பிடித்தபடி படிக்கட்டில் கால்...

புல்லட் ஓட்டும் பெண்

இந்த சிறுநகரத்தில் தன் பத்தொன்பதாவது வயதில் தந்தையின் செல்ல இளவரசி புல்லட் ஓட்டத் தொடங்கினாள் தொப்பி ஹெல்மெட் அணிந்து கருங்கூந்தல் காற்றில் பறக்க அவள் அனாயசமாக ஓட்டுவதில் அதிர்ச்சியடைந்த சிறுநகரம் கேட்டது ஸ்கூட்டி ஓட்டும் பெண்களுக்கு புல்லட் எதற்கு? ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தவித்த நகரத்தின் நெஞ்சத்தில் அனுதினமும்...

வே.நி.சூர்யா கவிதைகள்

1.மாபெரும் அஸ்தமனம் அந்திவானில் மகத்தான ரத்தத்துளி அதன் ஒளிப்பரிவாரங்களோடு அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன் ஆ! காற்றை தீண்டுவது போல அல்லவா உள்ளது தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை வேறெதுவோ நான்.. ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே ஒருவேளை...

நீயாகப்படரும் முற்றம்

விரவிக் கிடக்கும் சடைத்த மர நிழல்கள்… ரயில் தண்டவாளத்தை இரு கோடாக முதுகில் கீறிய அணில் குஞ்சு, என் சித்திரத்திலிருந்து தப்பித்த தும்பிகள் படபடக்கும் வண்ணாத்திப்பூச்சி,பொன் வண்டு வேலியோர தொட்டாச்சிணுங்கி. குப்பை மேனிச் செடி இணுங்கும் சாம்பல் பூனை… இறைந்துகிடக்கும் சருகு, நான் கூட்டக் கூட்ட இலைப்பச்சையாகி வளர்கிறது! யாரோ வெயிலைப் பிய்த்து துண்டு...