கலீலியோவின் இரவு
சுல்தான் ஸைன் உல் அபீதின் அழிவை முன்னறிவித்த
நட்சத்திரம் தோன்றி மறைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன.
வெள்ளம் கோபுரங்களை மூழ்கடித்தது, கூறப்பட்டதைப் போலவே
இளநீர் கூடுகளுடன் மணிமகுடங்கள் மிதந்து செல்ல
ஒன்றடுத்தொன்றாய் பால்பற்களென வீழ்ந்தன பேரரசுகள்.
முன்னை கிழக்கில் இருந்து கிளம்பிய...
ஸ்ரீவள்ளி கவிதைகள்
சிலவற்றைச் சரி செய்ய முடியாது
திடீரென
ஒரு நாள்
சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும்
மறைந்துவிடுகின்றன
அப்படியொரு நாளுக்குப்பின்
மீண்டும் சூரியன் முளைக்கிறது
சந்திரன் முளைக்கிறது
நட்சத்திரங்கள் பல்லைக் காட்டுகின்றன
ஆனால் இது பழகிய வானமல்ல
தலைக்கு மேல் பெரிய படுதா
இதன் அடியில்
ஒரு மரத்தில்
தூக்குமாட்டிக்கொள்ளக்கூட
முடியாது.
தன்னோடிருத்தல்
தன்னந்தனிமையில்
ஒரு வீணை...
வே.நி.சூர்யா கவிதைகள்
1. நவம்பர் என்பது
இரவின் உறையிலிட்டுச்
சிறு ஈசலும்
என்னை எங்கோ அனுப்பிவைப்பதற்கு ஏதுவாக
வேறொரு காலத்தின் கொக்கியில் தொங்கியபடி
இந்த இடத்தின் ஒக்கலில் உட்கார்ந்திருக்கும்
ஒரு தபால் பெட்டி
விளம்பர பொம்மைகளின் முன்
கூனிக்குறுகி நிற்க நேரிடும்
கறுப்புச் சந்தர்ப்பங்களும் கூட...
2. இழப்பின் வரலாறு
நீயும்...
இறுதி அழிபாடுகளின் வரிசை-லீனா மணிமேகலை
அழிபாடுகளை எழுத மறுத்து கவிதை விடைபெறுகிறதுஎன எழுதிக் கொண்டிருக்கும் போதேமத்தேயுநாற்பத்தேழாவது மாடியிலிருந்து குதித்து விடுகிறான்வாக்குறுதிகளின் பாரம் ஒழிந்த காலமிதுதிரும்புதற்கென்று பாதைகள் இல்லாத வரைபடங்களை வைத்துக்கொண்டுகாதலை எப்படிக் கோருவது?
புகைமூட்டங்களால் புலப்படாத நகரமொன்றின் சாலையில்போக்குவரத்து சமிக்ஞையில்...
காணாமல் போவது எத்தனை வசீகரமானது.
தினம் தினம்
எத்தனையோ பேர்
காணாமல் போகிறார்கள்
குழந்தைகள்
முதியவர்கள்
பெண்கள்
மனநிலை சரியில்லாதவர்கள்.
காணவில்லை விளம்பரங்கள்
செய்தித்தாள்களில்
தொடர்ந்து
வருகின்றன.
அவள் மட்டும்
தொலைவதே இல்லை
எங்கு போனாலும்
வழி தெரிந்து விடுவது
கொடுந் துயரம்.
காணாமல் போகக்கூட
ஆணாக வேண்டும்
தொலைவதற்கு முன்பான
முன்னேற்பாடுகளின் பட்டியல்
நெடுஞ்சிகை மழித்தல்
காயம் முற்றும் மூடும் காவி
ருத்ராட்ச மாலை
திருவோடு
அணங்கெனும் அடையாளம் அழிந்தோர் யாக்கை
ஏதோவொரு...
அதுவொரு உருண்ட சுரைக்குடுவையைப் போலிருந்தது
முதுமை அடைந்த பிறகே மரணிக்க வேண்டும்
என்று என் தாய் சத்தியம் வாங்கியிருந்தாள்.
எப்போதும் சொல்பேச்சு
கேட்காத குழந்தை நான்
இதோ முயல்களை வேட்டையாடித் திரிந்த
குளிர் நிலத்தில் சுடப்பட்டு கிடக்கிறேன்
"காப்பிச் செடிக்கு உரமிட வேண்டும்
சின்னவனே உன் வேட்டைக்கத்தியை
எறிந்துவிட்டு வா"
அக்கக்கா...
முத்துராசா குமார் கவிதைகள்
ஈச்சங்கை
ஹைவேஸ் தாபா வாசலில்
பச்சை சீரியல் பல்புகள் சுற்றப்பட்டு தனித்து நிற்கும்
ஈச்சமரமாகிய நான்
அகல வாய்க்காவில் முளைத்தவள்.
மறுகாவையும்
பஞ்சபாடையும் குடித்து
ஆழ ஊன்றினேன்.
பீக்காட்டின் கரம்பைத் தின்று
கறித்திமிருடன் பூத்தேன்.
தூண்டிலுக்கு
புழுக்கள் தோண்டுகையில்
பாதங்கள் கூசும்.
செதில் உடலேறி சறுக்கியவர்களை
பிடித்திருக்கிறேன்.
ஓலைத் தலையினுள் தேடி
ஈச்சம் பழங்களைக் கொட்டியிருக்கிறேன்.
தேன்மிட்டாய்...
தொழுவத்து மருத்துவக் குறிப்புகள்
1
தைப்பனிக்குள் அசைந்தாடும் மாமரத்தை
மேய்ந்துகொண்டிருக்கிறது மாடு
சற்று தூரத்தில்
சாரணத்தி வேர்களை கோணிப்பையில் சேமித்தவன்
கல்லெடுத்து கிளையின்மீது எறிகிறான்
அதிர்ந்து பார்த்த மாட்டின் கண்களில்
செம்மஞ்சள் துவரை.
சூரியன் உதிர்ந்த மாலையில்
உரலைப் பின்னும் கயிறு
பனிக்காலத்தில் வெடித்த மடிக்காம்புகளை
நெய்யும் வெண்ணையும் துழாவும்
2
தோட்டிகுளத்தில் உலாவரும் மேகங்களை
உறிஞ்சிக்...
ஜீவன் பென்னி கவிதைகள்
பிரபஞ்சத்தின் கதைகளை சிறிய வெளிச்சத்தில் பின் தொடர்தல்
1.
ஞானம் தனது பகுப்பாய்வைத் தொடங்கும் போது
இப்பிரபஞ்சம் ஒரு சிறிய புள்ளியைப் போலிருக்கிறது.
முடிகின்ற போது
நாம் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல் மிகப்பெரியதாக
இருக்கிறது.
2.
இந்தச் சாலைகள் முடிவற்றவை
நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்காகவே
இப்பட்டாம்பூச்சிகள்...
வியாகுலன் கவிதைகள்
1) மூஸ் கவிதைகள்
I.
அந்தப் பூனை
என் மடியில்
படுத்திருந்தது ஒரு நிலவின்
அமைதியைப் போல
அந்தப் பூனைக்கு
வினோதமான
பெயர்கள் எல்லாம் இல்லை.
மூஸ்… மூஸ்… என்றுதான்
அப்பத்தா கூப்பிடுவார்கள்
சுருக்கங்கள் நிறைந்த அவளது கரங்களில்
விளையாடிக்கொண்டிருந்தது அந்த மூஸ்
பூனைக்கு
மூஸ் என்று யார்தான்
பெயரிட்டு இருப்பார்கள்
அந்த மூஸ் என்ற...