கதை
'அந்தக் காலத்தில்
போர்வெல் முதலாளியை
மிகவும் சோதித்தன ஊற்றுகள்.
ஒளிரும் ஆபரணங்களோடு
இயந்திர முனையில்
தன்னையே பொருத்தி
பூலோகத்தை ஆழத் துருவி ஊடுருவினார்.
அவர் இறங்க இறங்க
ஊற்றுகளும் பதுங்கின.
விடியலில் மேலே வந்த இயந்திரத்தில்
முதலாளி இல்லை.
மூவாயிரம் ஆண்டுகள் கழித்து
தொல் எச்சமான முதலாளியே
நமக்கு நாட்டார் தெய்வமானார்'
பயண...
சித்திரக்கதை நினைவுகள்
“என்னடா…கன்னமெல்லாம் அம்மைதழும்பான்னு கேட்டதுக்கு சிரிக்கற…?” என்ற அலுவலக நண்பனுக்கு எப்படி சொல்வது.
அப்போதெல்லாம் மாதம் முழுக்க சிறுகசிறுக சேர்த்தால் மட்டுமே இரண்டு ரூபாய் காமிக்ஸ் வாங்க பணம் சேரும். வீட்டில் ஓசியில் வந்த நாவல்கள்.....
உணவெனும் கலை
வாத்துகளாயிரம் அல்லிகளாய் மலர்ந்திருக்க
குருவியின் சிறுமனை
கிளைகளில் நிலவாய் தொங்கும்
ஆற்றின் அருகமர்ந்து
தீ பொசுக்கும் கறியிலிருந்து
சொட்டும் எண்ணை எச்சிலாகி
உடலை நனைத்த கதையைச் சொல்லியவாறு
குடல், ஈரல், தொடைக்கறியென
பந்தி விரித்து
பாங்காய் இது பக்கோடாவென
பொட்டலம் பிரித்த
ததும்பும் பிரியங்களால்
மாட்டுக்கறியின் ருசியை
அரூரில் சுவைக்கக் கற்றேன்.
ஆம்பூர்,...
வெள்ளை நிறக்காலம்.
நோயின் வாசலில் நின்று அல்லது கதவின்
மறு புறம் நின்று
அல்லது அழகான சொற்சேர்க்கையின் நடுவிலிருந்து
அவர்கள் அவனை வழியனுப்புகிறார்கள்
பழைய கிட்டாருக்கெல்லாம் உள்ளே அனுமதி கிடையாது
சுகவீனம் இழந்த தோற்றத்தை கண்ணுறும் குழந்தைகள்
அம்மையின் பின்னே கடவுளைப்போல ஒளிந்துகொள்கிறார்கள்.
பீடித்திருந்த நோய்மையோ...
பா.ராஜா கவிதைகள்
1)இதய வடிவ பலூன்.
வெறுங்காலுடன்
மலையுச்சியை அடைந்தது
சிரமம் தான் என்றாலும்
உயரப்பறக்கும் இதய வடிவிலான பலூன்
கையிலிருந்ததால்
பெரிதாய் ஏதும் அயற்சியில்லை
அல்லது
அது கூட இங்கு
தூக்கிக்கொண்டு வந்திருப்பதாய்
கற்பனை செய்துப் பார்க்கலாம்
இதயத்தையும் கிட்டத்தட்ட
அந்த
பலூனைப்போல
பரிசளிக்க நினைத்தால்
அடிவாரத்திலிருந்தா கையை நீட்டுவது.
2)கடகம்.
உலக புன்னகை தினம் என்று
ஒன்று இருப்பதை...
ப.சிங்காரத்தின் நாவலில் பலகுரல் தன்மை
ப.சிங்காரம் 1920ஆம் ஆண்டு சிங்கம்புணரி கிராமத்தில் பிறந்தவர். 18 வயதில் இந்தோனேஷியாவில் உள்ள மைடான் நகரில் வட்டிக்கடைக்கு ஊழியராகச் சென்றார். மதுரை தினத்தந்தி அலுவலகத்தில் நீண்ட காலம் பணியாற்றி 1997-ல் மறைந்தார். மைடான்-சின்னமங்கலம்...
கோதையுள் எழுந்த நீலம்
வாழ்வில் ஒருசில இலக்கியங்கள் எந்தத் தருணத்தில் வாசித்தாலும் பித்தெழச் செய்து நம்மை வேறோர் வெளிக்குக்...
பேதமுற்ற போதினிலே-2
Fantasy – மிகையாடல்
ஒவ்வொரு வார்த்தையுமே புறம்சார்ந்து இயங்கக்கூடியது என்கிறார் எமர்சன். ‘ஓடு’ என்றால் அது உடலையும் நிலத்தையும் உள்ளடக்கியுள்ளது. பெயர்ச்சொற்கள் அத்தனையும் புறம் சார்ந்ததுதான். வினைச்சொற்கள் பெயர்ச்சொற்களைச் சார்ந்தவை. எனவே எல்லாம் புறம்சார்ந்தவை....
தமிழ் மொழி வளர்த்த சித்திரக் கதைகள்
நான் மூன்றாவது படித்துக் கொண்டிருந்த பொழுது எனக்கு சித்திரக்கதைகளை என் தந்தை அறிமுகப் படுத்தினார். தமிழை எழுத்து கூட்டி படிக்க மட்டுமே தெரிந்த வயது. சித்திரக்கதைகளை எப்படி படிப்பது என்றும் புரியாத ஒரு...
ஆட்டம் !
பழனி ஊரில் இருந்து வந்தவன். செய்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் அவன் இந்த நகரத்தின் அடாவடிகளை புரிந்து கொள்ளத் திணறினான். அதிலும் இந்தத் தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்த நண்பர்களை மனதில்...















