அல்ஹமதுலில்லாஹ்

அல்ஹமதுலில்லாஹ் என நீ உச்சரிக்கும்போதெல்லாம்  இருவாட்சியின் பெரும்பாத நிழல் என் மேல் கவியும் உன் நாக்கு  மேல் அண்ணத்தை தொட்டுத் திரும்பி  பற்களில் பட்டு  உதடுகளைக் குவிக்கும்போது  பனி பிளந்து இலை குளிர்ந்து  காற்று தணியும்  மழைப் பெய்து ஓய்ந்த கடலின்  நீலம் பாய்ந்த உன் முகத்தில்   அச்சொல் பூரணமடையும் போது பிறை தோன்றும் பின் மறையும் இடையில் விரியும் துண்டு வானம்  எனக்கும் உனக்கும் மட்டுமே. ———————————————— பூப்பனி  பெய்யும் ஒரு...

கம்மா > மடைகள் > வாமடை

கம்மா காய்ந்த தென்னம்பாளைப் பிளவுக்குள் தனித்தனி மழைகள் சேர்ந்து தேங்கியது படகினுள் மிதக்கும்  சமுத்திரமென தெரிந்தது. தளும்பும் சமுத்திரக் குட்டியென்று எனது கையின் பதினோறாவது  குறுவிரல் வியப்பானது. பாளையை மாதிரியாக வைத்து சந்ததித் தொடர்ச்சியாய் வெட்டாத நகங்களால் சமுத்திரத்தின் குட்டியான  கம்மாவைத் தோண்டினேன். கருவாச்சி மடை கொடியறுக்காத சிசுவாய் கருவுக்குள் நானிருக்கையில் பால்சோறு பிசையும்  கிண்ணத்தின் அளவே...

நீலவ்னா

என் கனவு பிரதிமை நீலவ்னா தொலைதூர மலைத்தொடரில் காட்டு மிருகங்கள்  இனப்பெருக்கம் செய்துகொண்டிருக்கலாம் ஆரண்யம் முயங்கும் உயிரியக்கம் பரிணாமத்தை மேலும் உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது வான் வெளி மண்டலத்தில் நீலம் தரித்திருக்கிறதை  இப்போழ்து பார்க்க வேண்டுமே நீ மகா அற்புதம்  நட்சத்திரக் கூட்டு மந்தையில்  தனித்து ஔிரும்...

டைம் இஸ் எ பியூட்டிபுள் கேர்ள்

1. உழவரே! உழவரே!  விதைத்த மறுநாளே அறுவடைக்குத் தயராகும்  தானியம் போல   பற்களை  மாற்றி இருக்கிறேன்  உங்களின் ஏர்க்குச்சியால் அவற்றை விழ வைக்க முயன்றால் முளைக்காத பற்களும் விழுந்துவிடும் ~ என்றாள்  உழவர், அவளைப் பார்த்தவாரே "ச்சோ! ச்சோ" என  காற்றில்...

தூரிகை

இந்த பட்டாம்பூச்சி வாழ்வை  எவ்வாறு ரசிக்கின்றது  காற்றில் மிதந்து கொண்டிருக்கும் தும்பிகள் பட்டாம்பூச்சிக்கு வழிவிடுகின்றன  வானிலிருந்த விழுந்த மழைத்துளி  சிலையாகிவிட்ட பட்டாம்பூச்சியின்  தவத்தினை கலைத்துவிட்டது  பசிய காட்டில்  திரியும் பட்டாம்பூச்சிகள்  மனிதர்களையே பார்த்திருக்காது  பச்சை போர்த்திய இவ்வுலகம்  பட்டாம்பூச்சிகளுக்கானது  கடவுள் தனது  தூரிகை வண்ணங்களால்  பட்டாம்பூச்சியை அழகுறச் செய்கிறார்  மனிதன் சுதந்திரத்தின்  ஆனந்தத்தை அனுபவிக்க  பட்டாம்பூச்சியாகத்தான்  பிறவியெடுக்க வேண்டும்!   ப.மதியழகன் 

ஸ்ரீவள்ளி கவிதைகள்

சிலவற்றைச் சரி செய்ய முடியாது திடீரென ஒரு நாள் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் மறைந்துவிடுகின்றன அப்படியொரு நாளுக்குப்பின் மீண்டும் சூரியன் முளைக்கிறது சந்திரன் முளைக்கிறது நட்சத்திரங்கள் பல்லைக் காட்டுகின்றன ஆனால் இது பழகிய வானமல்ல தலைக்கு மேல் பெரிய படுதா இதன் அடியில் ஒரு மரத்தில் தூக்குமாட்டிக்கொள்ளக்கூட முடியாது.   தன்னோடிருத்தல் தன்னந்தனிமையில் ஒரு வீணை...

பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்

சுவிட்சுகளை மனனம் செய்தல் பறவையினங்களில் இந்த மின்விசிறிதான் அமானுஷ்ய குணம்கொண்டதுபோலும்  இரக்கம் கொண்டு ஒருநாள் அதைக் கூண்டிலிருந்து விடுவித்து  வானத்தில் மாட்டி வைத்தேன் இப்போது இந்நகரத்திற்கேயான மின்விசிறியென   கழுகொன்று சுழன்றுகொண்டிருக்கிறது  மேலும் விசிறியை இணைக்கும் மின்-வயர்களை  அது பாம்புகளென நினைத்துக்கொள்ள  இந்த அபத்தத்தை நிறுத்தவேண்டி அறையில் ஒவ்வொரு சுவிட்சாக  அமர்த்தி அமர்த்தி...

நகுலனின் வளர்ப்புக் கிளிகள்

1] நகுலன் வீட்டில் தரை வீழும் கண்ணாடிக் கோப்பைகள் உடைந்து நொறுங்குவதில்லை. 2] நகுலன் வீட்டில் யாருமில்லை. பூனைகள் பாதயாத்திரை போய்விட்டன. 3] நாலங்குலம் பாசம் காட்டும் மனிதர்களைவிட நாய்கள் மேல் என்பது நகுலன் வாக்கு. 4] மதுக் குப்பிகள் இல்லாத நகுலன் வீட்டில் கவிதை காணாமல் போய்விட்டிருந்தது. 5] புறவாசல் வரை வரும் சுசீலா நகுலன் வீடேகுவதில்லை. விந்தைதான் ரோகிகள் சூழ்...

நீரை. மகேந்திரன் கவிதைகள்

1. வரிசையில் நிற்கும் பள்ளி ஆசிரியை அந்த வரிசையில், பத்தொன்பதாவது நபருக்கு பின்னால் நிற்கிறேன் இருபது என்று சொல்லலாம் இடித்துக் கொண்டு நிற்கிறான் இன்னொருவனும். முதலாவது நிற்பவனுக்கு ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வேண்டும். இரண்டாவதாக நிற்பவனுக்கும்,ஏழாவதாக உள்ளவனுக்கும் காலைக்கடனுக்கான அவசரம். மூன்றாவதாக நிற்பவன் கே.எப்.சி கவுண்டருக்கு...

அதிரூபன் கவிதைகள்

1. நொய்யல் ஆறே நொய்யல் ஆறே (அ) தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி வாசனை மரங்கள் நீரில் பேசிவரும் ரகஸிய மூச்சின் இழை அதன் நாமத்தை அழைக்கும் உடம்பின் உப்பு சிற்றாற்றுப் பொடிகளை உணவில் தூவி காட்டைத் திரிக்க பெரிய...