பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்

சுவிட்சுகளை மனனம் செய்தல் பறவையினங்களில் இந்த மின்விசிறிதான் அமானுஷ்ய குணம்கொண்டதுபோலும்  இரக்கம் கொண்டு ஒருநாள் அதைக் கூண்டிலிருந்து விடுவித்து  வானத்தில் மாட்டி வைத்தேன் இப்போது இந்நகரத்திற்கேயான மின்விசிறியென   கழுகொன்று சுழன்றுகொண்டிருக்கிறது  மேலும் விசிறியை இணைக்கும் மின்-வயர்களை  அது பாம்புகளென நினைத்துக்கொள்ள  இந்த அபத்தத்தை நிறுத்தவேண்டி அறையில் ஒவ்வொரு சுவிட்சாக  அமர்த்தி அமர்த்தி...

நகுலனின் வளர்ப்புக் கிளிகள்

1] நகுலன் வீட்டில் தரை வீழும் கண்ணாடிக் கோப்பைகள் உடைந்து நொறுங்குவதில்லை. 2] நகுலன் வீட்டில் யாருமில்லை. பூனைகள் பாதயாத்திரை போய்விட்டன. 3] நாலங்குலம் பாசம் காட்டும் மனிதர்களைவிட நாய்கள் மேல் என்பது நகுலன் வாக்கு. 4] மதுக் குப்பிகள் இல்லாத நகுலன் வீட்டில் கவிதை காணாமல் போய்விட்டிருந்தது. 5] புறவாசல் வரை வரும் சுசீலா நகுலன் வீடேகுவதில்லை. விந்தைதான் ரோகிகள் சூழ்...

நீரை. மகேந்திரன் கவிதைகள்

1. வரிசையில் நிற்கும் பள்ளி ஆசிரியை அந்த வரிசையில், பத்தொன்பதாவது நபருக்கு பின்னால் நிற்கிறேன் இருபது என்று சொல்லலாம் இடித்துக் கொண்டு நிற்கிறான் இன்னொருவனும். முதலாவது நிற்பவனுக்கு ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வேண்டும். இரண்டாவதாக நிற்பவனுக்கும்,ஏழாவதாக உள்ளவனுக்கும் காலைக்கடனுக்கான அவசரம். மூன்றாவதாக நிற்பவன் கே.எப்.சி கவுண்டருக்கு...

அதிரூபன் கவிதைகள்

1. நொய்யல் ஆறே நொய்யல் ஆறே (அ) தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி வாசனை மரங்கள் நீரில் பேசிவரும் ரகஸிய மூச்சின் இழை அதன் நாமத்தை அழைக்கும் உடம்பின் உப்பு சிற்றாற்றுப் பொடிகளை உணவில் தூவி காட்டைத் திரிக்க பெரிய...

தேவதேவன் கவிதைகள்

பெருவெளியில் தரையும் கூரையும் நான்கு சுவர்களுமில்லாத பெருவெளியில் அழிந்துபோகக்கூடிய தரையும் கூரையும் நான்கு சுவர்களுமாய் ஒரு வீடு வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஆங்கே தவழ்வதோ அழியாப் பெருவெளியைத் தாயகமாகக் கொண்டதாம் அன்பு கருணை அறம் மெய்மை என ஒளிரும் தேவதைகள்! சின்னஞ் சிறிய மலர் குத்தவைத்துக் குனிந்து பார்க்கவைத்தது...

ஸ்ரீநேசன் கவிதைகள்

சூரியனுடன் வருவேன் நான் இங்கிருப்பேன் இதே நேரம் ஏதோ மலையேறிப் பாதி வழியில் ஒரு பாறைமேல் தங்கியிருப்பேன் மன்னியுங்கள் உங்களை இளங்கதிரில் வரச் சொல்லி இப்படி எங்கென்றே தெரியாமல் எங்கேயோ போய்க் கொண்டிருப்பதற்கு நீங்கள் பழியுரைக்கவோ நான் பொறுப்பேற்கவோ...

உமா மகேஸ்வரி கவிதைகள்

சூரியன் ஒளிரும் திரைகள் வாகன கீதம் நொறுங்கிய வளர் பிறை பத்திரமாயிருக்கிறது மல்லிகைச் சரத்தருகே இருள் தித்திக்கும் மரங்கள் சோம்பல் முறிக்கும் காலை அங்கே ஏனோ பூக்காத மஞ்சள் மலர்கள் இங்கே எங்கெங்கும் பூத்துக் கிடக்கின்றன...உடைந்த ஒரு மனதில் சிராய்தததோ ஒரு  சொல் சிலாம்பு துடைத்தும் போகாதது. இம் முறை ஒரே...

பெருந்தேவி கவிதைகள்

நகரம்: சில மாதங்களுக்குப் பின் வீட்டைவிட்டு வர அனுமதிக்கப்படாத எழுபது வயது முதிய பெண்மணி நகரத்தின் மையப்பகுதியில் ஒரு பூங்காவுக்கு வருகிறாள் உடைந்த மரப்பெஞ்சில் அமர்கிறாள் காலை நேரம் சூரியனைத் தின்ன நினைக்கிறாள் அங்கே வசிப்பவர்கள் பூங்காவில் வேக வேகமாக ஆறடி விட்டு நடைப் பயிற்சி செய்கிறார்கள் ஒருவரை ஒருவர்...

குலாபிகளாகும் வரை நீட்டி எழுதப்பட்ட நான்கள்

முஸ்தீபு: நானின் கற்பிதம் உடையும் போது நாமனைவரும் அல்பைகள் ஆகிறோம் அது ஒரு ஆனந்தக் களி நடனம்தான். நான் பேசிக்கொண்டிருக்கிறேன் அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான் நான் பேசிக் கொண்டிருந்தேன் அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான் அவன் பேச ஆரம்பித்தான் எனக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது நான் கோவமாய்...

அதுவொரு உருண்ட சுரைக்குடுவையைப் போலிருந்தது

முதுமை அடைந்த பிறகே மரணிக்க வேண்டும் என்று என் தாய் சத்தியம் வாங்கியிருந்தாள். எப்போதும் சொல்பேச்சு கேட்காத குழந்தை நான் இதோ முயல்களை வேட்டையாடித் திரிந்த குளிர் நிலத்தில் சுடப்பட்டு கிடக்கிறேன் "காப்பிச் செடிக்கு உரமிட வேண்டும் சின்னவனே உன் வேட்டைக்கத்தியை எறிந்துவிட்டு வா" அக்கக்கா...