இன்பா கவிதைகள்
தையல்காரர்கள் வீதி
நடைபாதையின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருக்கிறார்கள்கால் விரல்கள் தன்னிச்சையாய்மிதித்துக்கொண்டே இருக்கின்றனபெரும்பாலும் புதுத்துணிகளையேதைக்க விரும்புகிறார்கள்பழைய கிழிந்துபோன துணிகளையாரும் தைக்கக் கொடுப்பதில்லையாரும் தைத்துப் போடுவதையும் விரும்புவதில்லைநறுக்கிப்போட்ட வானவில்லாய்வார்த்தைத் துணிகள் வெட்டப்பட்டுசுற்றிலும் சிதறிக் கிடக்கின்றனதலைக்கு மேலே மெதுவாக...
தினகரன் கவிதைகள்
1.
பரபரப்பு மிகுந்த
இந்த வாழ்வில்
ஏதோவொரு சாலையின்
ஓரத்தில் காத்திருக்கிறான்
கல்யாணசுந்தரம்
சிக்னலின்/ வாழ்வின்
பச்சை விளக்கிற்காக.
அது விழுவதாயில்லை
மாறாக,
சட்டைப் பாக்கெட்டிற்கு
சற்று மேலே விழுகிறது
ஒரு பறவையின் எச்சம்
எப்படியோ,
பறவைக்குத் தெரிந்திருக்கிறது
விரிசலடைந்த இடங்களை!
2.
தற்கொலைக்குத் துணிந்தவனின் ஒரு சாயங்காலப் பொழுது:
வெகுநேரமாக் கவிழ்ந்து
படுத்தபடியே
இருக்கிறேன்
உடலுக்குள் ஊடுருவும்
ஒளியை சத்தமில்லாமல்
அறைக்குள்
அனுமதிக்கிறது
சன்னல்
எழுந்து அருகில்
சென்றதும்
எங்கிருந்தோ வந்த...
பா.ராஜா கவிதைகள்
1)இதய வடிவ பலூன்.
வெறுங்காலுடன்
மலையுச்சியை அடைந்தது
சிரமம் தான் என்றாலும்
உயரப்பறக்கும் இதய வடிவிலான பலூன்
கையிலிருந்ததால்
பெரிதாய் ஏதும் அயற்சியில்லை
அல்லது
அது கூட இங்கு
தூக்கிக்கொண்டு வந்திருப்பதாய்
கற்பனை செய்துப் பார்க்கலாம்
இதயத்தையும் கிட்டத்தட்ட
அந்த
பலூனைப்போல
பரிசளிக்க நினைத்தால்
அடிவாரத்திலிருந்தா கையை நீட்டுவது.
2)கடகம்.
உலக புன்னகை தினம் என்று
ஒன்று இருப்பதை...
பறவைக்கோணம்
இந்தப் பறவைக்கு இந்த மலை புதிது
சமவெளியில் அதற்கென இருந்த காடு
மரங்களை அகற்றிய பிறகு எரியூட்டப்பட்டதும்
பழகியிராத மலை நோக்கி உயரப் பறந்தது
இறகுகள் ஒத்துழைக்கவில்லை
மலையின் காலடியில் தனித்து நின்றது.
——
இரண்டு பாறைகளை சற்று அகற்றி
மலையேறும் பாதையைத்
திருத்தியிருந்தான் பாணன்
மந்தியின்...
முத்துராசா குமார் கவிதைகள்
எச்சித்தட்டு
புதையலாகத் தென்பட்டது
தட்டில் பொறித்தப் பெயர்.
வழித்தாலும் உட்கொள்ள முடியவில்லை.
இரவில் எப்படியும் அபகரித்துவிட
புதையலுக்கு மேலே
வனம் செய்து
நீர் தேக்கினேன்.
வனம் அழித்து வறட்சியாக்கியும்
புதையலைப் பெயர்க்க முடியவில்லை.
மூன்று வேளைத் தோல்விகள் தாளாது
பெயருடைய ஆளையே
விழுங்க எழுந்தேன்.
சுவரில் தொங்கும்
கண்ணாடிச் சட்டகத்துக்குள்
சேரில் அமர்ந்திருந்தார்...
தாமரைபாரதி கவிதைகள்
சோதனை
1.
என்னைச்சோதனை செய்து பார்க்க,பரி சோதனை செய்து பார்க்க,சுய பரி சோதனை செய்து பார்க்க,என்னைத் தவிரச்சோதனை மாதிரிவேறு எது/யார்இருக்க முடியும்
2.இன்ப துன்பியல்நாடகம் இதுஇரு வேளைஇரு உணர்வுபோவதும் வருவதும்இல்லவும் உள்ளவும்ஒன்றே
3.பவளமல்லிகை உதிர்கிறதுஇளஞ்சிவப்புச் செம்பருத்தி மலர்கிறதுஒன்றில் நாற்றம்ஒன்றில்...
பா.ராஜா கவிதைகள்
உறங்கும் ஒருவன்.
அதிகாலை 4:43, எழுப்புகிறது
எழு ஒரு சேதி சொல்ல வேண்டுமென்று
காதோரம் கிசுகிசுக்கிறது
ஆர்வம் மேலிடவில்லை
ஒரு வீட்டை திடீரெனக் காணவில்லை பார் என்கிறது
அதற்கும் அலட்சியம்
தொலைந்த அந்த வீட்டில் தொங்கும் ஹோல்டரில்
உன்னை
காலத்திற்கும் தொங்கவிடப்போகிறேன்
என்ற போதும் கூட
அச்சமோ...
தூரிகை
இந்த பட்டாம்பூச்சி வாழ்வை
எவ்வாறு ரசிக்கின்றது
காற்றில் மிதந்து கொண்டிருக்கும்
தும்பிகள் பட்டாம்பூச்சிக்கு வழிவிடுகின்றன
வானிலிருந்த விழுந்த மழைத்துளி
சிலையாகிவிட்ட பட்டாம்பூச்சியின்
தவத்தினை கலைத்துவிட்டது
பசிய காட்டில்
திரியும் பட்டாம்பூச்சிகள்
மனிதர்களையே பார்த்திருக்காது
பச்சை போர்த்திய இவ்வுலகம்
பட்டாம்பூச்சிகளுக்கானது
கடவுள் தனது
தூரிகை வண்ணங்களால்
பட்டாம்பூச்சியை அழகுறச் செய்கிறார்
மனிதன் சுதந்திரத்தின்
ஆனந்தத்தை அனுபவிக்க
பட்டாம்பூச்சியாகத்தான்
பிறவியெடுக்க வேண்டும்!
ப.மதியழகன்
அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது
30
கக்கடைசியில்
ஏர்வாடி தர்க்காவில்
அம்மாவைச் சேர்த்தோம்.
சங்கிலி பிணைத்து அழைத்துப்போகையில்
என் தலை தடவினாள்.
அப்போது கலைந்த முடியை
எத்துணை முறை சீவியும்
ஒழுங்குபடுத்த முடியவில்லை.
29
வெள்ளி அன்று
அம்மா பூண்டிருப்பது
மௌனமா
விரதமா
தனிமையா தெரியாது
அன்றைய மதிய உலை
கொதபுதா என்று கொதிய
வேடிக்கை பார்ப்பாள்.
28
அம்மாவின் காதோரச் சுருள்முடியிடம்
அப்பாவுக்கு இருந்த பயபக்தி
என்...
ந.பெரியசாமி கவிதைகள்
பூனை
விந்தி நடக்கிறது பூனை
தவறுதலாக
கால் ஒன்றை குறைச்சலாக்கி
வரைந்துவிட்டேன்.
எங்களுக்குள் இயல்பாகியது
அது முறைப்பதும்
நான் மன்னிப்பு கேட்பதும்.
விரையும் வேறு பூனை பார்க்க
அதன் கண்கள் நெருப்பாகிடும்
அப்பொழுது கிண்ணத்தில்
பாலை நிரப்பி அமைதி காத்திடுவேன்.
இன்று மறக்காமல்
வரைபடத் தாள்களையும்
எழுது உபகரணங்களையும்
எதிர் இல்ல சிறுமிக்கு
அன்பளிப்பாக்கினேன்
மென்மையை ஏந்திக்கொண்டு
பதுங்கிப்...