Thursday, September 19, 2024

கவிதைகள்

க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்

தலைகுப்புற விழுகின்ற எண்ணெய்க் குப்பியென்ன ஒளிவிளக்கா? விழுந்தணைந்தபின் குப்பென்று பற்றியடங்கும் உயிரென்ன மெல்லிய இருளா??!! நீர் தழும்பத் திரண்டிருக்கும் கண்களை செந்தாமரைகளென்கிறாய் இரு புருவங்களுக்கு மத்தியில் முழங்கு படிகத்தை வைத்தது போலிருக்கிறது விழிக்கோளங்கள் பாடும் கிண்ணங்களாக ஒலிக்கின்றன.... -க.சி.அம்பிகாவர்ஷினி

பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்

சுவிட்சுகளை மனனம் செய்தல் பறவையினங்களில் இந்த மின்விசிறிதான் அமானுஷ்ய குணம்கொண்டதுபோலும்  இரக்கம் கொண்டு ஒருநாள் அதைக் கூண்டிலிருந்து விடுவித்து  வானத்தில் மாட்டி வைத்தேன் இப்போது இந்நகரத்திற்கேயான மின்விசிறியென   கழுகொன்று சுழன்றுகொண்டிருக்கிறது  மேலும் விசிறியை இணைக்கும் மின்-வயர்களை  அது பாம்புகளென நினைத்துக்கொள்ள  இந்த அபத்தத்தை நிறுத்தவேண்டி அறையில் ஒவ்வொரு சுவிட்சாக  அமர்த்தி அமர்த்தி...

க.மோகனரங்கன் கவிதைகள்

1)புகல் பகல் வெளிச்சத்தில்சற்றே துலக்கமாகவும்ஆற்றவியலாத துயரமாகவும்சுமக்கமாட்டாத பாரமாகவும்தோன்றும்எனது தோல்விகள்,இயலாமைகள்,ஏக்கப் பெருமூச்சுகள்எல்லாவற்றையும்மறைத்துக் கொள்ளவோஅல்லதுமறந்தாற்போலஇருந்துவிடவோ முடிகிறஇந்த இரவுதான்எவ்வளவு ஆறுதலானது?உந்தன்கண்மைக் கருப்பிலிருந்துபிறந்து,கார்குழல் சுருளுக்குள்வளரும் இருள்தான்என் மருள் நீக்கும்மருந்து. 2) மிச்சில் உன்னொடுஇருந்த பொழுதில்மறந்த காலம்முழுவதும்உன்னைப்பிரிந்த பிறகு,ஒன்றுக்குப் பத்தாகத்திரண்டுபூதவுருக் கொண்டுஎழுந்து வந்து,இருந்தாற் போல்இருக்கவிடாமல்மருட்டுகிறது.உறக்கம்...

தேவதேவன் கவிதைகள்

புன்னகைகள்தாம் புன்னகைகள்தாம் மலர்கள் என்பதையும்யாருடைய புன்னகைகள் இவை என்பதையும்யாருடையதுமான காதற் பேருலகையும்…கண்டுகொண்ட மனிதனுக்குத் தேவைப்படுவாரோகடவுள்களும் தத்துவ ஆசிரியர்களும்? இங்கிருந்துதான் இங்கிருந்துதான் நாம்எதையும் ஏற்றுக்கொண்டும்எதையும் மறுத்துக்கொண்டும்இருக்கலாம். இங்கிருந்துதான் அதுநம்மை தேர்ந்துகொண்டுநிகழவேண்டியதையெல்லாம்நிகழ்த்துவதைப் பார்க்கலாம். என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும்எனத் தெரிந்தவன்எதையும் செய்யாமல்அதைத்தான்...

கவிதைகள் மனச்சாட்சிக்குப் பக்கத்திலிருக்கின்றன.

1. வெப்பம் பரவும் நெற்றியை விரல்கள் தேய்க்கின்றன. காதுகளில் வண்டொன்று சத்தமிடுகிறது. காலங்கள் கலைந்து தோன்றுகின்றன. கண்கள் நிறங்களைச் சுமக்க முடியாமல் கனக்கின்றன. மனநிலை குழம்புவதை உணரும் எப்போதும் சமாந்தரமாகக் காதற்பனியும் துாவுகிறது. அச்சத்தின் கதகதப்பைப் பற்றியபடி கள்மனம். மெய்யானவொன்றைத் தீரத்தீர அருந்தாததாக மறுகிய உடல். இடைவெளிகளை உடைத்து விடுகின்ற காலம். கற்பனைகளை அள்ளிய கைகள்...

சுஜா கவிதைகள்

வாழ்ந்தென்ன? தரையில் கையூன்றி எழுந்தவாறே எதிர்ச்சுவர்க் கடிகாரத்தைப் பார்க்கிறாள். மாலை நான்கு நல்ல நேரம்தான் யாருக்கும் அகாலத் தொந்தரவாகாத நேரம் வீடு திரும்பும்போது செய்தியாகக் காதை எட்டும். அள்ளி முடிந்து கொண்டையிட்டு வாசற்கதவைத் திறக்கிறாள். மேல்மாடிக்குச் சென்று குதித்துவிட்டால் அவ்வளவுதான் முடிந்தது. வழக்கம்போல் தடுக்கிவிடாமல் இருக்க சற்றே தூக்கிப் பிடித்தபடி படிக்கட்டில் கால்...

தி.பரமேசுவரி கவிதைகள்

தப்பித்தல் அனுமதியின்றி என் வீட்டில் சிலர் என் முன்னால் அமர்ந்து உறுத்து நோக்கும் விழிகளைக் காண முடியவில்லை யாரோ என்னை வெறிக்கின்றனர் அழைக்கின்றனர் கடக்கின்றனர் அவர்களுக்கு அழுகை என்று பெயர் சூட்டினேன் தப்பிக்க முயன்றால் எப்போதும் சிக்கிக் கொள்வேன் என் உறக்கத்தைத்...

ஞா.தியாகராஜன் கவிதை

எழுந்து வந்தோம் அதன்பிறகு நான் யாருக்கும் லைனில் கிடைக்கவில்லை இருபது வருடங்கள் கழித்து புதிதாகப் பிறப்பதில் சிரமமிருக்கிறது அது சாவு போல இருந்தாலும் நீ புறப்பட்ட தருணம் போல வலிக்கவில்லை பத்து வருடங்களுக்குப் பிறகு கதவை திறக்கும்போது எதிர் வீட்டில் நீ...

ச. துரை கவிதைகள்

  நூற்றாண்டுகளாக சுழலும் இசைத்தட்டு   . இந்த இசைத்தட்டு முடிந்ததும் யாருடைய வீட்டு கதவை தட்டப்போகிறேன் என நினைத்ததும் அச்சம் அவன் தலையை கோதியது அமர்ந்திருக்கும் இடத்தில் கடலும் எரிமலையும் முளைத்தது ஏன் இலைகள் என் மீது மட்டுமே உதிர்கின்றன என்று கத்தினான் அந்த சப்தம் எங்கேயோ நீண்டு...

பா.ராஜா கவிதைகள்

நிலுவை ஏமாற்றிடஎண்ணமில்லை.நம்பிக்கொடுத்தவர் முன்நாணயம்அரூபமாய்ச் சுழன்றுதள்ளாடுகிறது.தாமதம் வேண்டாம் எனரீங்காரமிடுகிறதுஇரவுப்பூச்சி.வாகனமில்லையேஎன்றதும்கால்கள் இருக்கிறதேஎன்கிறது.காலணி இல்லையேபாதங்களை விடச் சிறந்த காலணி ஏது.கால்களில் பெரு நோவுகைகள் இருக்கிறதே.கைகளால் எப்படி?சரி விடுசரீரத்தைப்பயன்படுத்துசாலையில் உருட்டு. • வட்ட வடிவப்பாதை விருப்பம்விருப்பமில்லைஎன்பதற்கெல்லாம் மாறாகமுந்திச்செல்லபின் சக்கரத்தால் எப்போதும் முடிவதில்லைஎன்பதே நியதிஇருந்தும்அதுதன்னை முந்தவேஇத்தனை வேகமாய்ச்சுழல்வதாய்...