புறாக்கூண்டு
ஜன்னல் வழியாக திடீரென்று வீசிய காற்றே அவளுக்கு அவ்வெண்ணத்தை ஏற்படுத்தியது. வேலைகளை முடித்துவிட்டு மதிய சாப்பாட்டை அரைகுறையாய் சாப்பிட்டு அசதியாக அறைக்குள் வந்து ஜன்னல் ஓரமாக இருந்த கட்டிலில் ஜன்னலை பார்த்தவாறு சாய்ந்தவாக்கில்...
செத்துப்போனவர்
தூங்குகிற மனிதனை ஐஸ் பெட்டிக்குள் ஏன் வைத்தார்கள் என்று பார்க்கிறவர்கள் பதறுகிற அளவுக்கு , எண்ணெய் தேய்த்துக் குளித்த அசதியில் அசந்து தூங்குவது போல் இருந்தார் அவர்.
ஒரே ஒரு வித்தியாசம்தான். தூங்கும்போது அவர்...
பாவ மன்னிப்பு
புனித லூசையப்பு தேவாலயத்தின் பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கிக்கு பெருத்த சங்கடமாகப் போயிற்று. படபடத்த தேகத்தோடு கூண்டுக்குள் கைகளை நுழைத்து தன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஒரு சிறுவனைப் போல் அழுதுகொண்டிருக்கும் துர்கனேவ்வின் கைகளை விலத்திக்...
தாஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் -நம்பி கிருஷ்ணன்
Gabe: தால்ஸ்டாய் முழுச் சாப்பாடு. துர்கேனிவை உணவிற்குப் பின் அருந்தும் இனிப்பு, பழவகைகளாக நாம் பாவிக்கலாம். அவரது எழுத்தை நான் அப்படித்தான் வரையறுப்பேன்.
Rain: அப்போது தாஸ்தயெவ்ஸ்கி?
Gabe: தாஸ்தயெவ்ஸ்கியிற்கு நாம் முழுச் சாப்பாட்டுடன் ஒரு...
அன்பின் நறுமணம்
ஜானகிராமனை நினைக்கறப்ப எப்பவுமே எனக்குள்ள மெலிசா ஒருவித நெகிழ்ச்சிய ஃபீல் பண்ணுவேன். என் வாழ்க்கைல ரொம்பக் கடன்பட்ட மறக்கவே முடியாத பர்சனாலிட்டின்னா அது ஜானகிராமன்தான். எனக்கு எவ்வளவோ நண்பர்கள். அதுல கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி...
கவிதை அன்று முதல் இன்று வரை (லஷ்மி மணிவண்ணன் மற்றும் கண்டராதித்தன் கவிதைகளை...
லக்ஷ்மி மணிவண்ணன்
தற்காலக் கவிஞர்களுள் கணிசமான அளவு சாதனைகளைச் செய்துள்ள கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன். சமீபத்தில் அவருடைய ‘கேட்பவரே’ என்ற முழுத் தொகுப்பும், ‘கடலொரு பக்கம் வீடொரு பக்கம்’ என்ற குறுங்கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன....
தினகரன் கவிதைகள்
1.
பரபரப்பு மிகுந்த
இந்த வாழ்வில்
ஏதோவொரு சாலையின்
ஓரத்தில் காத்திருக்கிறான்
கல்யாணசுந்தரம்
சிக்னலின்/ வாழ்வின்
பச்சை விளக்கிற்காக.
அது விழுவதாயில்லை
மாறாக,
சட்டைப் பாக்கெட்டிற்கு
சற்று மேலே விழுகிறது
ஒரு பறவையின் எச்சம்
எப்படியோ,
பறவைக்குத் தெரிந்திருக்கிறது
விரிசலடைந்த இடங்களை!
2.
தற்கொலைக்குத் துணிந்தவனின் ஒரு சாயங்காலப் பொழுது:
வெகுநேரமாக் கவிழ்ந்து
படுத்தபடியே
இருக்கிறேன்
உடலுக்குள் ஊடுருவும்
ஒளியை சத்தமில்லாமல்
அறைக்குள்
அனுமதிக்கிறது
சன்னல்
எழுந்து அருகில்
சென்றதும்
எங்கிருந்தோ வந்த...
நீரை. மகேந்திரன் கவிதைகள்
1. வரிசையில் நிற்கும் பள்ளி ஆசிரியை
அந்த வரிசையில்,
பத்தொன்பதாவது நபருக்கு பின்னால் நிற்கிறேன்
இருபது என்று சொல்லலாம்
இடித்துக் கொண்டு நிற்கிறான் இன்னொருவனும்.
முதலாவது நிற்பவனுக்கு ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வேண்டும்.
இரண்டாவதாக நிற்பவனுக்கும்,ஏழாவதாக உள்ளவனுக்கும்
காலைக்கடனுக்கான அவசரம்.
மூன்றாவதாக நிற்பவன்
கே.எப்.சி கவுண்டருக்கு...
தாண்டவம்
’போயிட்டு வந்திருதேன்’ என்று சத்தம் கொடுக்கும் போது ஈஸ்வரி வெளியே வந்து ‘நானும் உங்ககூட வந்து அவங்க ரெண்டு பேர் காலிலேயும் விழுந்து கும்பிடணும் தான். ஆனால் இப்படி வரமுடியாத நிலைமை ஆயிட்டுது....
கெளபாய் காமிக்ஸ் உலகின் தலைமகன்.
அமெரிக்க கெளபாய்கள்.. கி.பி.1800களில்-சுட்டெரிக்கும் பாலைவனங்கள், தகிக்கும் பாறை முகடுகள், உயிரை விட மதிப்பு மிக்க தண்ணீர், கால்நடைகளை வளர்க்கும் கெளபாய்கள், பண்ணைகள், திமிர்பிடித்த வெள்ளையின முதலாளிகள், சுரங்கத்தில் தங்கத்தை தேடி வாழ்க்கையை தொலைக்கும்...