சியாம் சுதாகர் கவிதைகள் (மலையாளம்) , தமிழில் யூமா வாசுகி.
மலையாளத்தின் குறிப்பிடத்தக்க இளங்கவிஞர்களில் ஒருவர் சியாம் சுதாகர். 16-10-1983-இல் பிறந்தவர். சொந்த ஊர் பாலக்காடு. இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ஈர்ப்பம் (ஈரம்) 2001-ல் வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பு அச்சிலிருக்கிறது. இளங்கவிஞர்களுக்கான வள்ளத்தோள்...
புனைவு எழுத்தாளன் ஒரு இடத்தில் அமர்ந்து நாவலை எழுதுவதன் மூலம் உன்னத உலகம் என்ற...
1930-களில் ப்ரூக்ளின் மற்றும் ப்ரான்க்ஸ் இல்லங்களிலிருப்பது போன்ற செளகரியமான விக்டோரிய வகை நாற்காலிகள், அதனுடன் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் மற்றும் பெரிய தொலைக்காட்சிப் பெட்டியுடன் அப்பர் பிராட்வே எனும் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஐந்து அறைகள்...
ரோஸ் படிக்காமல் போனது…
செலினா :
“அவள் ஒரு வெகுளி ! கள்ளங்கபடமில்லாதவ ! என்னோட பெஸ்ட் பிரண்ட். அவளுக்கு யாரும் விரோதிகளே கிடையாது . யாரையும் விரோதியா அவளால நினைக்கக் கூட முடியாது ! அத்தனை நல்ல...
திரை (இந்தி) – இஸ்மத் சுக்தாய் ,தமிழில்- அனுராதா கிருஷ்ணா சாமி
வெள்ளை நிற படுக்கை விரிப்பு விரித்திருந்த அந்த கட்டிலில், நாரைகளை விடவும் அதிகமான வெள்ளை முடிகள் கொண்டவள் போலவும், அசிங்கமான ஒரு பளிங்கு மூட்டையைப் போலவும் பாட்டி கிடந்தாள். மையிட்ட தடம் மட்டும்...
மேரி ஆலிவர் கவிதைகள்
கற்களால் உணரயியலுமா?
கற்களால் உணரயியலுமா?
அவர்கள் தங்கள் வாழ்க்கையை நேசிக்கிறார்களா?
இல்லை அவர்களின் நிதானம் எல்லாவற்றையும்
அமைதியடையச் செய்துவிடுமா?
நான் கடற்கரையில் நடக்கும்போது
வெள்ளை நிறத்தில், கறுப்பில் எனப்
பல வண்ணங்களில் சிலவற்றைச் சேகரிக்கிறேன்.
கவலைப்பட வேண்டாம், நான் உன்னைத்
திரும்பவும் கொண்டு வந்து விட்டுவிடுவேன் என்கிறேன்
பிறகு அவ்விதமே செய்கிறேன்.
மரம் தனது பல கிளைகளை
உயர்த்தி உவகையடைகிறதே,
ஒவ்வொரு கிளையும் ஒரு கவிதையைப்போலவா?
முகில்கள் தங்களது மழைமூட்டையை
அவிழ்த்துவிடுவதில் மகிழ்ச்சியடைகின்றனவா?
உலகத்தில் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள்,
இல்லை, இல்லை, அது சாத்தியமேயில்லை என்று.
நான் அத்தகைய முடிவை
எண்ணிப்பார்க்கவே மறுத்துவிட்டேன்.
ஏனெனில் அது மிகப் பயங்கரமானதாக இருக்கும், மேலும் தவறாகவும்.
**
நான் கடற்கரைக்குச் சென்றேன்
நான் காலையில் கடற்கரைக்குச் சென்றேன்
நேரத்திற்கேற்ப அலைகள்
வந்துபடியும் சென்றபடியும் இருந்தன,
ஓ, நான் சோகமாக இருக்கிறேன்
என்ன செய்யட்டும்—
நான் என்ன செய்ய வேண்டும்? என்கிறேன்.
தன் அழகிய குரலில் கடல் சொல்கிறது:
மன்னிக்கவும், எனக்கு வேலை இருக்கிறது.
**
எப்போது அது நிகழ்ந்தது?
எப்போது அது நிகழ்ந்தது?
“நிறையக் காலத்திற்கு முன்பு”
எங்கு நிகழ்ந்தது?
“தூராதி தூரத்தில்”
இல்லை, சொல், எங்கு நிகழ்ந்தது?
“எனது இதயத்தில்”
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது உனது இதயம்?
“நினைத்துப்பார்த்த படியிருக்கிறது, நினைத்துப்பார்த்தபடியிருக்கிறது!”
**
இந்தக் காலையில்
இந்தக் காலையில்
செங்குருவிகளின் முட்டைகள்
பொரிந்துவிட்டன மேலும் ஏலவே குஞ்சுகள்
உணவுக்காகக் கீச்சிட்டுக்கொண்டிருக்கின்றன.
அவர்களுக்குத் தெரியாது உணவு
எங்கிருந்து வருகிறது என்று,
வெறுமனே கத்திக்கொண்டிருக்கிறார்கள் “மேலும்! மேலும்!”
வேறு எது குறித்தும்,...
லிடியா டேவிஸ் குறுங்கதைகள்
ஜேனும் கைத்தடியும்
அம்மாவினால் அவருடைய கைத்தடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரிடம் கைத்தடி ஒன்று இருந்தது, ஆனால் அவருடைய விசேஷமான கைத்தடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடைய அந்த விசேஷமான கைத்தடியின் கைப்பிடியில் நாய் தலை இருந்தது....
ஏ.இ. ஹவுஸ்மேன் கவிதைகள்
இளமையில் இறக்கின்ற விளையாட்டு வீரனுக்கு
நீ உன் ஊருக்காகப் பந்தயத்தில் வென்ற வேளையில்நாங்கள் உன்னை நாற்காலியில் ஏந்திச் சென்றிருக்கிறோம் சந்தை-வெளியில்மக்களும் சிறுவர்களும் வழிநெடுக நின்று ஆரவாரம் செய்தார்கள்தோளுக்கு மேல் உன்னைத் தூக்கி வீட்டுக்கு அழைத்து...
இந்தியாவில் காலநிலை மாற்றம்: நவ்ரோஸ் துபாஷ் நேர்காணல்
நவ்ரோஸ் துபாஷ் நீண்ட காலமாக காலநிலை மாறுபாட்டுச் சவால்களுக்கு, இந்தியாவின் எதிர்வினையை ஆராய்ந்து வரும் அறிஞர் ஆவார். 1990-ஆம் ஆண்டு, ஏற்படுத்தப்பட்ட காலநிலைச் செயல்பாட்டு நெட்வொர்க் சிவில் சொசைட்டியின், முதல் சர்வதேச ஒருங்கிணைப்பாளர்...
WILD GREEN
"The sales and technical team which trains our clients in product usage of the products and our biggest client 'Be way hospitality' at quanty,...
வேய்ன் சகோதரிகள்-விளாதிமிர் நபகோவ்
நான் அத்தகைய அற்பத்தனமான தேடுதலில் ஈடுபட்டிருக்காவிடில், கடந்த நான்கு வருடங்களாகத் தொடர்பில் இல்லாத டி.யை அன்றிரவு சந்தித்திருக்க முடியாது. டி.யைச் சந்தித்திருக்காவிடில் சிந்தியாவின் மரணத்தைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்காது.
ஒரு வார காலக் கடும்...















