படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

ஷாப்ரால்: குற்றமும் (நடுத்தர) குடும்பம் எனும் அதன் ஊற்றுவாயும்-ஸ்வர்ணவேல்

ரொனால்ட் பெர்கன் 27 மார்ச் 2018 கார்டியன் நாளிதழில் தனது எண்பத்தைந்தாவது வயதில் காலமான ஸ்டெஃபன் ஆட்ரானின் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதைப் போல  சினிமா வரலாற்றில் இயக்குநர் மற்றும் நட்சத்திர ஜோடிகளில், இருபத்துமூன்று...

கண்காணிப்பு-க.கலாமோகன்

வசந்தியை நான் பல நாள்களாகத் தொழில் இடத்தில் காணவில்லை. ஆச்சரியமாக இருந்தது. விடுமுறையா? நிச்சயமாக இல்லை. அவளது விடுமுறை மாதம் எனக்குத் தெரியும். அந்த மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்குள் அவளுக்கு நிறைய நண்பர்களும் நண்பிகளும்...

தாலாட்டு-ஆதவன்

வருடம் தவறாமல் இ‌ந்த திகதியில் மாலையில் நினைவிடத்துக்கு வரும் மற்றவர்களுக்கு அந்த வயதான பெண்மணியை மறந்திருக்க வாய்ப்பில்லை. நினைவேந்தலுக்குக் கூடும் மக்களில் அவர் மட்டும் வித்தியாசமாகத் தெரிவார். இது ஜப்பான் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்களின்...

“முனைப்பை மட்டும் ஒருவிதையைப் போல ஒருபோதும் கைவிட மாட்டேன்”-சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன் நவீன தமிழிலக்கியத்தில் நிதானமாகப் பெரும் ஆரவாரம் எதுவுமின்றி தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் முக்கியமான குரல். முன்னாள் ஊடகவியலாளர், வணிகர், விவசாயி, எழுத்தாளர் என்கிற பன்முகத் தன்மை கொண்டு இயங்குபவர். வாழ்வின் இவ்வளவு...

கோடையில் தளிர்த்த குளுமை- (வண்ணதாசன் கதைகள்)

1 தமிழ்ச் சிறுகதை உலகில் தனித்துவம் மிக்க எழுத்தாளர்கள் மிகச்சிலரே. புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ராமாமிருதம், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஆ.மாதவன் போன்று, எழுபதுகளில் எழுதவந்த சிறுகதை ஆசிரியர்களின் பெரும் பட்டாளத்தில் தனித்துவமானவர் வண்ணதாசன். நவீன...

அற்பஜீவி-ஆர் விஸ்வநாத சாஸ்திரி [கண்ணீரைப் பின்தொடர்தல்]

"கண்ணீரைப் பின்தொடர்தல்"ஜெயமோகன் புதுமைப்பித்தனின் ‘சுப்பையாபிள்ளையின்’ காதல்கள் என்ற கதை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானதே. திருநெல்வேலியிலிருந்து பஞ்சம் பிழைக்க சென்னைக்கு வந்து கணக்குப்பிள்ளையாக உடலையும் ஆத்மாவையும் மாற்றிக்கொண்டு தினமும் சரியான நேரத்தில் ரயிலைப்பிடித்து சரியான நேரத்தில்...

தாம்பத்தியம்-சாரா ஜோசப் ...

               இன்று அவள் மிகவும் அமைதியாக இருந்தாள். வழக்கத்திற்கு மாறான அமைதி. உண்மையில் நான் நாள் முழுவதும் எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு அப்போதுதான் வீடு திரும்பினேன். இதோ இப்போது அவளெதிரே. ஆனால் அவள் என்மீது...

அவக்

காளியாத்தாள் ஒய்யாரமாகச் சப்பரத்தில் அமர்ந்துகொண்டு ஊர்சுற்றி வருவதைத் தூரத்தில் நின்று பார்த்தார் சீனிச்சாமி. ”வாழ்நாள் பூரா உன்னை தோளில தூக்கிச் சுமந்து சுத்துனேன். கடைசியில கைவிட்டுட்டீயே” என விரக்தியாய்த் தனக்குள் சொல்லிக் கொண்டார்....

வழித்துணை

கன்னத்தில் செல்ஃபோனின் ’விர்ர்’ என்ற அதிர்வை உணர்ந்தேன். தூக்கத்தின் அரைமயக்கத்தில் அது கைக்குள் பொத்திப்பிடித்த குருவியின் சிறகதிர்வைப் போல நேராக நெஞ்சில் படபடத்தது, பதறி சற்று கைவிலக்கினால் பறந்துவிடும் என்பது போல. நெடுநேரமோ அல்லது...

கிருஷ்ணன்(கே) சுரேந்திரன் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]

கிருஷ்ணன்(கே) சுரேந்திரன் புனை பெயர்: கே. சுரேந்திரன் இலக்கியச்சேவை: சுரேந்திரன் பிரச்சனைக்குரிய கதைகளை எழுதி, பெரும் விவாதத்தைக் கிளப்பிவிடுபவர். சிறுகதை, நாவல், கட்டுரைகள் ஏராளமாக எழுதியிருந்தும் நாவல்கள் மூலம்தான் மிகவும் புகழ் பெற்றார். இவருடைய நாவல்களில் ‘தாளம்’,...