கோடிட்ட இடம்
கீதா ஆன்ட்டி வீடு பூட்டும் சத்தம் கேட்டது. கைவேலையை விட்டுவிட்டு ஓடிப்போய் அவரைப் பார்த்துக் கையசைத்துவிட்டு வருவது வழக்கம். எதிரெதிர் ஃபிளாட்.
“ பை ரம்யா....”
ஆன்ட்டி ஒரு புன்னகையின் உதிர்வில் இன்னும் வசீகரம் கூடிப்போனவராய் தெரிவார். நன்கு...
அருகன்
அடுப்பில் தக்காளி வதங்கும் வாசம் கூரையின் இடுக்குகளைக் கடந்து வெளியேறியது. கூரைக்கம்புகளில் பிணைக்கப்பட்டிருந்த பாலை முடிச்சுகளில் ஒவ்வொரு நாள் சமையலின் நெடியும் பிசுக்குகளாய்த் தேங்கியிருந்தன. வதங்கிய தக்காளியுடன் மினுமினுவென சின்ன வெங்காயங்கள் புடைத்துக்...
அப்பா கோழி
‘பாழாப் போன இந்த நாள் ஏன்தான் வந்து தொலைக்குதோ?’ சுகந்தியின் மனம் வெறுப்பின் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஆதவனுக்கு ‘வாட்சப்பில்’ அனுப்பிய குறுஞ்செய்திகள் அனைத்தும் ஒற்றை ‘டிக்கிலேயே’ நின்றிருந்தன. கைப்பேசியிலிருந்து சத்தம் வரும்போதெல்லாம் மகனிடமிருந்துதானோ...
பார்பரா குரூக்கர் கவிதைகள்
1. இயல்பு வாழ்க்கை
அந்நாளில் எதுவுமே நடக்கவில்லை
பள்ளிக்குச் சென்ற பிள்ளைகளின்
புத்தகங்களும் கையுறைகளும்
நண்பகலுணவும் நினைவினில்.
காலையில் தரையின்
ஒளிக்கட்டங்களில்
அடுக்கும் விளையாட்டினை
ஆடினோம் குழந்தையும் நானும்.
குட்டித்தூக்கம் நண்பகலுணவோடு
ஒட்டிக்கொண்டு வந்தது.
சமையலறை நிலைப்பேழையைத்
தூய்மையாக்கினேன்.
ஒருபோதும் முடிக்கவே
முடியாத வேலை அது.
சூரியவொளியின் வட்டத்தில்
அமர்ந்து இஞ்சித்தேநீர்
குடித்தேன்.
சிதறிக்கிடந்த உணவுத்
துணுக்களுக்காக அங்கே
பறவைகள் முண்டியடித்துக்
கொண்டிருந்தன.
முள்ளம்பன்றியின்...
மூக்குத்தி – சரவணன் சந்திரன்
காவல்துறையில் நடித்துக் காட்டுவது என்பது ஒருசடங்கு. திருடர்கள் மாட்டிக் கொண்டபிறகு, எப்படித் திருடினார்கள் என்பதைச் சம்பந்தப்பட்ட இடத்துக்கே சென்று நடித்துக் காட்டச் சொல்லி அதைப் பதிவு செய்து கொள்வது சிவப்புநாடா நடைமுறை. குரங்கினைப்...
பழி-ஜா.தீபா
ராதாய்யாவின் சுருங்கிய தோல் வெய்யில் பட்டு ஒளிர்ந்தது. மதிய சாப்பாட்டுக்கான நேரம் என உணர்ந்து எழுந்து நின்றார். மெல்லிய நடுக்கம் எப்போதும்போலக் காலிலிருந்து தொடங்கியிருந்தது. நிதானித்து மூன்று படிகள் இறங்கி ஆறு அடிகள்...
ஆலடியில் – சுரேஷ் பிரதீப்
திருவாரூர் பழைய ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்தில் ஒரு ரயில்வே மருத்துவமனை இருக்கிறது. அதற்கு எதிரே ஒரு ஆலமரம் சுற்றிக் கட்டப்பட்ட சிமெண்ட் மேடையுடன் நின்றிருக்கும். பிறந்தநாளுக்குப் பட்டுப்பாவாடை சட்டை போட்டு சீருடை அணிந்த...
பூட்டப்பட்ட பெட்டகம் – சத்யஜித் ரே,தமிழில் – கோடீஸ்வரன்
குர்குட்டியா (Ghurghutia) கிராமம்,
ப்ளாசி (அஞ்சல்),
நாடியா மாவட்டம்.
3 நவம்பர், 1974.
பெறுநர்,
திரு. பிரதோஷ்.சி.மிட்டர்
அன்புள்ள திரு.மிட்டருக்கு,
உங்களைப் பற்றியும் உங்கள் திறமையைப் பற்றியும் நிறையக்கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். இந்தக் கடிதத்தை அழைப்பாகக் கருதி வீட்டிற்கு வருமாறு வேண்டுகிறேன்....
இறந்தவள் – கி தே மாப்பசான், தமிழில் – சஞ்சீவி ராஜா
நான் அவளைக் கண்மூடித்தனமாகக் காதலித்தேன்! நாம் எதற்காகக் காதலிக்கிறோம்? இந்த உலகத்தில் ஒருவரை மட்டும் பார்த்து, அவரை மட்டும் உயிராய் நினைத்து, நம் இதயத்தினுள் ஒரே ஆசையாய் அவரைக் கொண்டு, அவர் பெயரை...
காவு -ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்
“இது இப்பம் மலையனின் வாசஸ்தலம்” வெற்றிலையில் மையிட்டுப் பார்த்தபடி நம்பூதிரி சொன்னார்.
”இங்கிருக்கது மலை வாதைகளை காத்து இருக்கது ஒரு பழைய நம்பூதிரியின் ஆன்மா. மலையன் நாராயணன் நம்பூதிரி அவரோட பேரு. மலையில பாலாற்றங்கரையில்...